Phonetic
Tamil Typewritter
Tamil 99
4) You can enable the Show Keymap as follows: Show Keymap
Online Keymap Help

தமிழக செய்திக் கண்காணிப்பு (Tamilnadu Media Watch)

Monday, May 01, 2006

தினகரனின் வன்முறை






ஜெயலலிதா வேலூர் பஸ் நிலையம் அருகில் பேசிய போது கூடிய கூட்டட்த்கில் கலந்து கொண்டவர்கள் படம் என்று ஒரு படம் தினகரனிலும் [கருப்பு வெள்ளைப் படம்], அதே இடத்தில் அதே நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் என்று ஒரு படம் தினத் தந்தியிலும் [வண்ணப்படம்] வெளியாகியுள்ளது. கூட்டம் முடிந்து, மக்கள் கலைந்து போன பிறகோ, அல்லது கூட்டம் நடந்த இடத்தை விட்டு அப்பகுதியைக் கடந்த பின்போ, படத்தை எடுத்து தினகரன் வெளியிடுகிறது. ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு மட்டும் இம்மாதிர்யான படங்களை வெளியிட்டு வருகிறது தினகரன். இது அறமா? இது வன்முறை இல்லையா?



அரசியல்வாதிகளான எழுத்தாளர்கள்

இந்தியா டுடே மே 10 2006 ப.26 27 "அரசியல்வாதிகளான எழுத்தாளர்கள்", தமிழக சட்டமன்றத் தேர்தலில் பல எழுட்த்காளர்கள் வேட்பாளர்களாகக் களம் இறங்கியிருப்பது புதிய அனுபவமாக இருக்கிறது. கே முரளிதரனின் கட்டுரை.

வேட்பாளர்களாகக் களம் இறங்கியுள்ள சில எழுத்தாளர்கள்:

திருப்பரங்குன்றம் சி பி எம் வேட்பாளர் சு வெங்கடேசன், காட்டுமன்னார்கோயில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமார், திண்டுக்கல் சி பி எம் வேட்பாளர் பால பாரதி, மருங்காபுரி திமுக வேட்பாளர் சல்மா.

சிதம்பரத்துக்கு விளக்கமளிக்கும் ஜெயலலிதா அறிக்கை
எல் கே அத்வானி புகாருக்கு தயாநிதி அறிக்கை
இரண்டையும் வெளியிட 4ல் 3 பத்திரிகைகள் தயாரில்லை..

மே 1 2006 திங்கள் கிழமைல் வெளியான இதழ்களில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இது. இரண்டு முக்கிய அறிக்கைகள். ஒன்று, சுனாமி வெள்ள நிவாரண்மாக தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொடையைக் குறிப்பிட்டு முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக் கிழமை வெளியிட்ட அறிக்கை. இரண்டாவது, தயாநிதி மாறன் குறித்து எல் கே அத்வானி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு தயாநிதி மாறனின் அறிக்கை. இந்த இரண்டுமெ, க்டந்த ஒன்றிரண்டு நாட்களின் வெவ்வேறு சமயங்களில் தெரிவிக்கப் பட்ட கருத்துக்களுக்கு எதிர்வினைகள்.

சிதம்பரத்தின் கருத்துக்களை வெளியிட்ட பத்திரிகைகள், அதற்கான எதிர்வினையான ஜெயலலிதாவின் அறிக்கையையும் வெளியிட வேண்டும். எல் கே அத்வானியின் கருத்தை வெளியிட்டவர்கள் தயாநிதியின் கருத்தையும் வெளியிட வேண்டும். இது தார்மீக நெறி சார்ந்த பிரச்னை மட்டுமல்ல. ஒரு பத்திரிகையைக் காசு கொடுத்து வாங்கும் வாசகனின் தார்மீக உரிமையுமாகும். கருத்துக்களை இருட்டடிப்பு செய்வதும், பத்திரிகைகள் ஒவ்வொன்றுமே ஒரு கட்சியை ஆதரித்தும், வேறொரு கட்சியைப் புறக்கணித்தும் பத்திரிகை நடத்துவது இந்தத் தேர்தலில் அதிகமாகவே காணக் கூடியதாக இருக்கிறது.
ஜெயலலிதா அறிக்கையையும் தயாநிதி அறிக்கையையும் தினமணி வெளியிட்டுள்ளது.

தினமலர் ஜெயலலிதாவின் அறிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளது.

தினத் தந்தி ஜெயலலிதாவின் அறிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளது

தினகரனில் 2 அறிக்கைகளும் இடம் பெறவில்லை.

தினகரன் தயாநிதி மீது குற்றம் சாட்டப் பட்ட போதும் அதை செய்தியாக வெளியிடவில்லை. தயாநிதி இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்த போது மட்டும், அதைப் பெரிய அளவில் வெளியிட்டது தினகர்ன். அதே வேளை சிதம்பரத்தின் பேச்சுக்களை விரிவாக வெளியிட்ட தினகரன், அதற்கு மறுப்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வது அறமாகாது.

பிடித்தமான கருத்துக் கணிப்புக்கு மட்டுமே இடம்:

தமிழ்ப் பத்த்ரிகைகள் கடைப்பிடித்து வரும் விடாப் பிடியான கொள்கையின் படி, தினத் தந்தி, அதிமுக வெற்றி பெறும் என்று கணித்த மற்றுமொரு கருத்துக் கணிப்பை 01 05 2006 இதழில் வெளியிட்டுள்ளது. டெக்கான் கிரானிக்கள் இதழும், ஏ சி நீல்சன் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 46% பேரும், திமுகவுக்கு 42% பேரும் ஆதரவு அளித்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தினகரனின் ஆய்வுத் தொடர்:

திமுகவை முன்னிறுத்தும் தினகரனின் ஆய்வுத் தொடர் 01 05 2006 திங்கட்கிழமை தொடங்கப் பட்டுள்ளது. நியாயமானதுமில்லை, நடுநிலையானதுமில்லை என்று கூறத்தக்க இந்த ஆய்வு, மக்கள் தெளிவாகவே இருக்க்கிறார்கள் என்று கூறுகிறது.

சிறப்புப் பேட்டிகள்:

தினகரனின் சீறப்புப் பேட்டித் தொடரில், 01 05 2006 அன்று, திமுகவின் ஸ்டார் பேச்சாளர் வெற்றிகொண்டானின் சிறப்புப் பேட்டியும், 02 05 2006 அன்று, முன்னாள் நடிகரான பாக்கியராஜின் பேட்டியும் இடம் பெற்றுள்ளன.

தினமலர் மீதான தினகரனின் தாக்குதல்:

தினமலர், தாம்பிராஸ் எனப்படும் தமிழ்நாடு பிராமணர் சங்கட்த்தை உடைக்கச் சதி செய்து வருவதாக தினகரன் குற்றம் சாட்டி வருகிறது. 01 05 2006 அன்று தினகரன் இதழில் "பிராமணர் சங்கத்தை உடைக்க 5 சென்ட் நிலம் தருவதாக ஆசை காட்டியது தினமலர் -- குமரி மாவட்ட தலைவர் பேட்டி", என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தினமலரில் கம்யூனிஸ்ட் கட்சிக்காரரின் சிறப்புப் பேட்டி:

"தங்களது நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகும் யாருடைய குரலுக்கும் இடம் தரத் தயங்க மாட்டோம்; தங்களுக்குப் பிடிக்காத யாருடைய குரலையும் நசுக்கத் தயங்க மாட்டோம்". ஏறத்தாழ இது தான் தினமலரின் மிஷன் ஸ்டேட்மென்ட்டாக இருக்க வேண்டும். சன் டிவியின் ஏகபோகத்தைக் கண்டிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான டடிள்யூ ஆர் வரதராஜனின் சிறப்புப் பேட்டியை தினமலர், மே முதல் நாளன்று 4 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

புதிய தமிழகம் தேர்தல் அறிக்கை : தினமலரும் தினகரனும் புறக்கணிப்பு

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் அதன் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில், திங்கட்கிழமை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பேச்சும், அறிக்கையின் மிக முக்கியமான சில குறிப்புகளும் தினமணியின் 02052006 07ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. தினத் தந்தி, இந்தச் செய்தியை 8ஆம் பக்கத்தில் படத்துடன் வெளியிட்டுள்ளது. தினமலரும் தினகரனும் இந்தச் செய்தியை முற்றிலுமாகப் புறக்கணித்திருக்கின்றன. தினகரன், தினமலரைப் பல விஷயங்களில் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுகிறதோ என்று எண்ண இடமிருக்கிறது.

களம் காணும் வாரிசுகள் என்ற தலைப்பில் தினமணியில் கட்டுரை:

02 05 2006 தினமணியில் 10 ஆம் பக்கத்தில் தமிழக தேர்தல் களத்தில் போட்டியிடும் வாரிசுகள் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவேயே இது போன்ற ஒரு தொகுப்பை இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு வெளியிட்டிருந்ததை இந்த வலைப்பூவில் பதிவு செய்திருக்கிறோம். . [ இந்தப் பட்டியலில் துணையுடன் பின்பு ஆய்வு நடத்த வேண்டியிருக்கும் என்பதால், தினமணியில் பொன் தனசேகரன் எழுதிய கட்டுரையை அப்படியே இங்கு பதிவு செய்கிறோம். ஆய்வுப் பணி என்பதால், பதிப்புரிமை பெற்றவரின் அனுமதி பெறப்படவில்லை. : ]

தேர்தல் களம் இறங்கும்
வாரிசுகள்


அரசியல் தலைவர்கள் தங்களது வாரிசுகளையும் அரசியலில் களம் இறக்குவது என்பது இந்திய அரசியலில் வழக்கமான ஒரு விஷயம். இந்த அரசியல் பண்பாட்டுக்கு தமிழகமும் விதிவிலக்கு இல்லை.
நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத்
தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த
தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்
பிரமுகர்களின் வாரிசுகளுக்குத் தேர்தலில்
போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் திமுக
துணைப் பொதுச் செயலாளருமான மு.க.
ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவசர நிலை காலத்தில் "மிசா'வில் சிறையில் இருந்த அவர், சென்னை நகர மேயராகவும் இருந்திருக்கிறார். 30 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து
வருகிறார் அவர். திமுக ஆட்சிக் காலத்தில்
அமைச்சராக இருந்த மறைந்த அன்பில்
தர்மலிங்கத்தின் மகன் அன்பில் பெரியசாமி
திருச்சி-1 தொகுதியில் மீண்டும்
போட்டியிடுகிறார். இவரது சகோதரர் அன்பில்
பொய்யாமொழி மறைவுக்குப் பிறகு,
அன்பில் பெரியசாமி தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. திமுக
அமைச்சர் மறைந்த தங்கப்பாண்டியின் மகன் தங்கம் தென்னரசு அருப்புக்கோட்டையில்
போட்டியிடுகிறார்.
ஆலங்குளத்தில் வாக்கிங் செல்லும் போது
கொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை அருணா ஆலங்குளம் தொகுதியில்
திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் எம்பியாக
இருந்தவர் ஆலடி அருணா. திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரன்
வீரபாண்டி தொகுதியில் முதன் முறையாக
போட்டியிடுகிறார். மகனுக்காக வழக்கமான தமது
வீரபாண்டி தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்ட அவர், சேலம்-2 தொகுதியில் திமுக
வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமியின் மகள் கீதா ஜீவன், தூத்துக்குடித்
தொகுதியில் திமுக வேட்பாளராகப்
போட்டியிடுகிறார். நத்தம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலத்தின் மகன்
எம்.ஏ. ஆண்டி அம்பலம் திமுக வேட்பாளராகப்
போட்டியிடுகிறார். முன்னாள் எம்எல்ஏ
வீரணன் அம்பலத்தின் மகன் கே.வி.வி. ரவிச்சந்திரன் மேலூர் தொகுதியில் காங்கிரஸ்
வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
திமுக அமைச்சராக இருந்த என்.கே.கே.
பெரியசாமியின் மகன் ராஜா ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். மகனுக்கு வழிவிட்டு தந்தை தேர்தலில் ஓதுங்கிக்கொண்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து கொலை செய்யப்பட்ட சுதர்சனத்தின் மகன் கே.எஸ். விஜயக்குமார்
கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதையத் தேர்தலிலும் அவருக்கு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் சகோதரர்
வசந்தகுமார் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜன், ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் மகன் எம்.கே. விஷ்ணு பிரசாத், செய்யாறு தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிடுகிறார். தமிழ்நாடு
இளைஞர் காங்கிரஸ் தலைவர் இருந்தவர் இவர்.
நாடாளுமன்ற முன்னாள் காங்கிரஸ்
உறுப்பினர் இரா.அன்பரசின் மகன் அருள் அன்பரசு, வேலூர் மாவட்டம் சோளிங்கரில்
காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இதுபோல அரசியல் பிரமுகர்களின்
வாரிசுகள் அரசியலில் களமிறக்கி விடப்படும்போது, அக்கட்சிப் பிரமுகர்களுக்குக்
கொடுக்கப்படும் முக்கியத்துவம் வாரிசுகளுக்கும் கொடுக்கப்படுகிறது. சிலர், இடைவிடாத
தீவிர அரசியல் ஈடுபாட்டால் தங்களது தனித்தன்மை விளங்க பரிணமிப்பவர்களும் உண்டு. எனினும், ஆட்சிப் பதவிகளுக்கு குடும்ப வாரிசுகளைக் கொண்டு வரும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து சர்ச்சைக்கு உரிய விஷயமாகவே இருந்து வருகிறது.

பொன். தனசேகரன்


குரு மூர்த்தியின் கட்டுரை

சன் டி விக்காக தயாநிதி மாறனால் இயக்கப் படும் தொலைத் தொடர்பு அமைச்சகம், என்ற தலைப்பில் குரு மூர்த்தியின் பெரிய கட்டுரை ஒன்று தினமணியில் 02 05 2006 இதழில் 8ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

விதியை மீறும் தினமலரும் தினகரனும்

திமுக அரசு செயல்படுத்திய
திருமண உதவித் திட்டத்தை
நிறுத்திய ஜெ. தாலி வாங்க
4 கிராம் தங்கம் தருவாராம்


என்ற தலைப்பில் தினகரனில் 02 05 2006 அன்று 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இது எப்படி செய்தியாகும்? ஒரு செய்தியாளர், தன் சொந்தக் கருத்தையும் சேர்த்து எழுதுவது எப்படிச் செய்தியாகும்? ஒப்பீனியன் வேறு, செய்தி வேறு, ஆசிரிய உரை வேறு என்பதெல்லாம், பல சமூகங்களில் மிகத் தெளிவாக வரையறுக்கப் பட்டு, பின் பற்றப் படுகின்றன. தமிழ் சமூகத்தில் தினமலரும், தினகரனும் இந்த விதிகளை அப்பட்டமாக மீறுபவை.

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home


    World News Feed
Loading...please relax for a few seconds