இந்திய அமெரிக்க அனூ சக்தி ஒப்பந்தம் - இந்து ஆசிரியர் என் ராம் உரை
please click the link to listen N Ram's speech
http://video.google.co.uk/videoplay?docid=-6100324732415013779
அருள்
Labels: INDO - US NUCLEAR DEAL
Labels: INDO - US NUCLEAR DEAL
குறிப்பு: தேர்தல் முடிந்து விட்டதால், இந்த வலைப்பூவின் பெயரில இருந்து தேர்தல் என்ற சொல்லை அகற்றி விட்டு, சற்றே மாற்றி அமைத்திருக்கிறோம். விரைவில் எங்களின்
அடுத்த கல்வியாண்டு தொடங்க இருக்கிறது. இனி, டகங்களின்,குறிப்பாக நாளிதழ்களின், செய்தி வெளியிடும் முறை குறித்த விவாதங்களை இங்கே முன்வைக்கத்
திர்ட்டமிட்டிருக்கிறோம். உங்களின் எதிர்வினைகள் எங்களுக்குப் பெரும் ஊக்கமாகவே இருந்து வருகிறது.ஊடகக் கண்காணிப்புக் குழுவினர் உயர் கல்வி நிறுவனக்களில் பிற
பிற்படுத்தப் பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீடு குறித்த போராட்டஙக்ளையும், இது தொடர்பான விவாதங்களையும் தமிழ் நாட்டு ஊடகங்கள் எப்படிக் கையாள்கின்றன என்பது
விவாதத்திற்குரிய ஒரு விஷய்ம். இது தொடர்பாக இன்று வெளியான தி இந்து நாளிதழில் சித்தார்த் வரதராஜனின் கட்டுரை கவனிக்கத் தக்கது. அவரின் கட்டுரை [அவர் அனுமதியோ, நாளிதழின் அனுமதியோ பெறாமலேயே] இங்கே தரப்படுகிறது. கல்வி சார் விவாதத்திற்குரியது
என்பதால், அனுமதி பெறாததைக் குற்றமாகக் கருதத் தேவையில்லை. இந்தக் கட்டுரையை முது
கலை மாணவர்கள் பொறுமையாக வாசித்து விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.........இதழியல் துறையினர்
must see video about Abu Graib prision
http://www.youtube.com/watch?v=UsRkpR0dcAE
By , at 8/05/2006 04:47:00 AM
வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை.இதை இந்து போட்டதே பெரிய வியப்பு தான்.
பார்ப்பனீய வியாதி மற்ற உயர் சாதி இந்துக்களையும் தொற்று நோயாய் தொற்றிக் கொண்டுள்ளது.இது புற்று நோயாய மாறி இந்தியாவையே அழிக்கப் போகிறது என்பதை அனைத்து மக்களும் முக்கியமாகப் பத்திரிக்கை,தொழில் துறையினர் உணர வேண்டும்.இந்தியாவிற்கு எதிரிகள் இந்த உயர் மனப்பான்மை கொண்டவர்களே.அவர்களைத் தண்டிக்காவிட்டால் அவர்கள் இந்தியாவை அழித்தே விடுவார்கள்.ஹிட்லர்கள் வென்றதாக வரலாரே கிடையாது.
By Thamizhan, at 9/16/2007 07:22:00 PM
திரு "தமிழன்" அவர்களே,
பார்ப்பனீயன்/பார்ப்பன்/பாப்பான்/பார்ப்பான்/பாப்கார்ன்/பிராமணன்/அந்தணன்/...
எப்படி பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும்...அவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்...
OBC பட்டியலில் இந்தி சாதிகள் பல உள்ளன, அவர்கள் தமிழர்களா? இல்லை!
தெலுங்கு பேசும் சாதிகள் தமிழரா? அது எப்படி?
தமிழகத்தில் பீஹாரிகள் திரளாக வந்து சாலைப் பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தமிழர்களா? இல்லை.
சென்னை பறப்பகத்தில் தமிழ் உண்டா? தமிழ் இல்லை!! இந்தி ஆட்கள் மட்டும் தான்.
இதில் வெட்கம் என்னவேன்றால் தமிழ் பேசுவோர்களை தமிழர்களை இல்லை என்ன ஒதுக்குவது ஒரு கையில், இந்தி பேசுவோர்களை உங்கலைப் போல "தமிழ்" அரசியல்வாதிகள் "வாடா! வேலை தர்றேன்" ன்னு சொல்லி வரவைப்பது, அனைத்திலும் வெட்கக்கேடு தமிழ் பேசாதோர் சாதிகள் தமிழ் என்ற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.
சென்னை டீ நகர் அரசு அங்காடிகளில் இந்தி ஆட்கள் எத்தனைப் பெயர் உள்ளனர் பார்.
தமிழக அரசின் 'தமிழ்' ஏற்பாடு தமிழ் கலைப்பு தமிழர் ஒழிப்பு என்பதே உண்மை.
By , at 6/29/2008 10:16:00 PM
"குவார்ட்டர்' பாட்டில், "கமகம' பிரியாணியுடன் ஓட்டு வேட்டையாட கரை வேட்டிகள்
தயார்
சென்னை: தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் "கிக்'
ஏற்றும் குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் "கமகம'க்கும் பிரியாணி பொட்டலங்களுடனும்
வாக்காளர்களை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி விட்டன. அனைத்து ஒயின்
ஷாப்புகளுக்கும் நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு
தினங்களுக்கு முன்னதாகவே, குவார்ட்டர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்து
மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ரகசிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன.
இருப்பினும், நேற்றும் சில டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தால் அங்கு கரை
வேட்டிகள், வேன்களிலும் ஆட்டோக்களிலும் குவார்ட்டர் பாட்டில்களை வாங்கிச் செல்வதைக்
காண முடிந்தது.
எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய பிரதான கட்சிகள்
மட்டுமின்றி பா.ஜ., தே.மு.தி.க., மற்றும் சுயேச்சைகள், உதிரிக்கட்சிகள் களத்தில்
உள்ள காரணத்தால் அனைத்துக் கட்சிகளுமே வாக்காளர்களைக் கவர பல்வேறு கவர்ச்சிகரமான
அறிவிப்புக்களை நாளுக்குநாள் அறிவித்து வருகின்றன. இது தவிர வாக்காளர்களை சந்தித்து
ஓட்டுக்களை "மானாவாரியாக' பெற்று விடுவதற்காக அனைத்துக் கட்சிகளுமே "பகீரத
பிரயத்தனம்' செய்து வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை நகரில்
உள்ள 14 தொகுதிகளுக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளிலிருந்து விஸ்கி, ரம், வோட்கா, பீர், ஒயின் ஆகியவற்றை வேட்பாளர்கள் கொள்முதல் செய்து ரகசிய இடங்களில் மறைத்து வைத்துள்ளனர். தேர்தல் தினத்தன்று வாக்காளர்களுக்கு "சப்ளை' செய்யும் வகையில் இவ்வாறு செய்துள்ளனர். குறிப்பாக, ரூ.49 முதல் ரூ.52 வரை விலையுள்ள ஆர்டினரி பிராண்ட் (180 மி.லி.,), ரூ.60 முதல் ரூ.62 வரை விலையுள்ள மீடியம் பிராண்ட் (180 மி.லி.,) மற்றும் ரூ.70 முதல் ரூ.123 வரையுள்ள பிரிமியம் பிராண்ட் பாட்டில்களுக்குப் பிரத்யேக மவுசு ஏற்பட்டுள்ளது. அதிகமாக விற்பனையாகும் ஓல்டு மங்க், மானிட்டர் பிராந்தி, மெக்டெவல், ஜானெக்ஷா, கிங் பிஷர், கோல்கொண்டா, சிவா ரம், பேக் பைப்பர், பிளாக் நைட் வகையறாக்கள் அதிகமாக கரை வேட்டிக்காரர்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மது வகைகளுமே ஸ்டிராங்க், எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க் மற்றும் சூப்பர் ஸ்ட்ராங்க் என்று மூன்று ரகங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பிரதான கட்சிகளுமே சரக்குகளை மொத்தமாக கொள்முதல் செய்து விட்டதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கையிருப்பில் வைக்க வேண்டிய அளவை விட மிகக் குறைவாகவே சரக்குகள் உள்ளன. அதே போல் வாக்காளர்களுக்கு குவார்ட்டர் பாட்டில்களுடன் பிரியாணி பொட்டலங்களை வழங்கவும் அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், ஆங்காங்கே உள்ள பிரியாணி கடைகளில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி ஆகியவற்றை செய்து பொட்டலம் கட்டித் தருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தி.நகர், எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சைதாப்பேட்டை பகுதிகளில் பல கடைகளில் பிரியாணி செய்து தருவதற்கும் "ஆர்டர்கள்' கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் தினத்தன்று வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து குவார்ட்டர் பாட்டில்களையும், பிரியாணி பொட்டலங்களையும் கொடுக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.தினமணி 08 05 2006 ப. 5
வாக்களர்களுக்குப் பணம் அளிப்பு? பார்வையாளர்கள் தீவிரக் கண்காணிப்புன்ற தலைப்பில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. இந்தச் செய்தியின் முகப்புரை:திருநெல்வேலி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகக் கூறப் படும் புகார்கள் குறித்து மத்திய தேர்தல் பார்வையாளர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ....
தினமலரில் தொடரும் ஆதாரமற்ற செய்திகள்...
செய்தித் தாளில் இடம் பெறும் செய்திகளை வரலாற்றின் முதல் படி என்று அறிஞர்கள் குறிப்ப்டிவர். அதனால், அதை நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பதிவு செய்ய வேண்டிய கடமை செய்தியாளர்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்களுக்கும் உண்டு. குறிப்பாக செய்தியை வதந்தியிலிருந்து வேறு படுத்திக் காட்டும் துணிவும், நேர்மையும் பத்திரிகையாளர்களிடம் இருக்க வேண்டும். இது பத்திரிகைக்கு நம்பகத் தன்மையையும் அதிகரிக்க உதவும்.
தினமலர் மே 7 2006 ப.1
விஜய டி ராஜேந்தருக்கு திமுக ஆதரவுகூட்டணி கட்சிகளின் காலை வார முடிவு
என்ற தலைப்புடன் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
விஜய டி ராஜேந்தரின் லட்சிய திமுக போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் காலை வார திமுக தயாராகி வருகிறது என்பது தான் இந்தச் செய்தியின் சாராம்சம். இது ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் என்றோ, இது ஒரு ஆதாரமற்ற குற்றச் சாட்டு என்றோ எளிதில் ஒதுக்கி விட முடியும். இந்தச் செய்தி முழுக்க எவரையும் உரிமையாக்கிக் கூறப் படவில்லை. இதே போல 8 5 2006 அன்று ஒரு ரூபாயில் ஒரே இந்தியா திட்டம் படு தோல்விசில ஆயிரம் பேர் கூட திட்டத்தில் சேர முன் வரவில்லை என்ற தலைப்புடன் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. இதுவும் ஏறத் தாழ ஒரு அவதூறுக்குச் சமமானது. தயாநிதி மாறன் மீதான கோபத்தின் வெளிப்பாடாக இந்தச் செய்தியை வாசகர்கள் எளிதில் இனம் கண்டு கொள்வார்கள்.தினகரன், 07 05 2006 ப15
மேடை ஏறவில்லை ஜெயலலிதாசென்னையிலும் கூட்டம் இல்லை
என்ற தலைப்பில் ஒரு செய்தி. இதில் ஜெயலலிதா மேடை ஏறவில்லை என்ற தகவலை வைத்துக் கொண்டு, சென்னையிலும் கூட்டம் இல்லை என்ற தகவல் மிகப் படுத்திக் கூறப் பட்டிருப்பதாகக் கருத இடமிருக்கிறது. போட்டி அரசியலில், தினகரன் இப்படி செய்தி வெளியிடுகிறதோ என்று கருத இடமிருக்கிறது. தினகரன், இதற்கு முன்பு வெளியிட்ட புகைப் படங்கள் நம்பும் படியாக இல்லை என்பதை ஏற்கனவே ஆதரங்களுடன் இங்கே நிரூபித்திருக்கிறோம்.
பத்திரிகைகளில் தகவல்களை மக்கள் முன் வைப்பதை விடுத்து, நேரடியாகப் பிரச்சாரத்திலும், தாமே அரசியல் நடத்துவதிலும் தீவிரமாக இறங்கி விடுகின்றன. தினகரனும், தினமலரும் தீவிர நிலைப்படுகளை எடுத்து, சிலரை ஆதரித்து, சிலரை இருட்டடிப்புச் செய்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.தினத் தந்தி அதிமுகவையும், நாடர்களையும் பாதுகாப்பதற்காக அவதாரம் எடுத்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தையே ஏற்படுத்துகிறது.
தினமணி, இந்த 3 பத்திரிகைகளை ஒப்பிடுகையில் கொஞ்சம் சகித்துக் கொள்ளலாம் என்றாலும், முழுமையான ஒரு நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்ட பத்திரிகையாகக் கொள்ள இடமில்லை என்பதும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. தமிழின் தரமான பத்திரிகை இனிதான் வளர்த்தெடுக்கப் படவேண்டும் என்ற குறிப்புடன்விடை பெறுகிறோம்ஊடக விமர்சனக் குழுவினர்
உங்களின் பணி (பயிற்சி?) பாராட்டத்தக்கது. வணிக லாப/நஷ்ட காரணிகளை குறிக்கோளாக நிறுத்தியிருக்கிற ஏறக்குறைய எல்லா துறை சார்ந்த பயிற்சிகள் நடுவில், ஊடக துறைக்கு அதற்கு எடுப்பை தருகிற நடுவன் நிலைப்பாட்டை முன்னிறுத்தி நீங்கள் கட்டியெழுப்பிய பயிற்சியின் பாணி அற்புதமானது. நல்ல சமூகத்தின் ஒரு தூணாக நம் தமிழ் ஊடகங்கள் உருவெடுக்க என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்பது பற்றி கற்றல் ஏதேனும் இருப்பின், அதை இங்கே பகிர்ந்து கொள்ள முடியுமா?
நெருப்பு
இவ்வாறான விமர்சனம் எல்லாம் தமிழ்நாட்டு செய்தித்தாட்களுக்கு புதிதாக இருந்திருக்கக்கூடும்.
சிறப்பான பணி. ஊடக விமர்சன குழுவினருக்கு வாழ்த்துகள்.
இம் முறை வலைப்பதிவுகளில் ஊடகங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை உங்கள் பதிவுகள் முன்வைத்தன. ஆய்வுகள் சிறப்பாகவும் இருந்தன.
இந்த விமர்சனங்கள் எல்லாம் வணிக மயமாகி விட்ட ஊடக உலகில் எந்த வகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்றாலும் இது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து பல விடயங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். தேர்தலுடன் மட்டுமே இது இருந்து விடக்கூடாது.
உங்களைப் போன்ற பலர் இந்த வலைப்பதிவுகளில் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதும் மகிழ்ச்சியாக உள்ளது.
நம்முடைய ஊடகங்களின் லட்சணத்தை பலரும் தெரிந்து கொள்ள இது போன்ற வலைப்பதிவுகள் ஒரு வாய்ப்பாக இருக்கும்
ஊடகத்துறையில் உங்களின் எதிர்காலம் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
By தமிழ் சசி, at 5/08/2006 08:11:00 PM
You have done a great job!!
Hats off to your effort!!
Keep up!!
By Sivabalan, at 5/08/2006 08:17:00 PM
அதற்குள் போவதென்றால் எப்படி?
இனிமேல்தானே நிறைய விசயங்கள் இருக்கின்றன.
தேர்தல் முடிவுகளும் அவை வெளிப்படும் விதமும், தலைவர்களின் அறிக்கைகள், கொடுத்த வாக்குறுதிகள் சம்பந்தமான செய்திகள், அறிக்கைகள் என்று பலதரப்பட்டவை உள்ளனவே. ஊடகங்கள் முன்பு எடுத்திருந்த நிலைக்கும் தேர்தல் முடிவுகளுக்குப்பின்னால் எடுக்கும் நிலைக்குமிடையிலான வேறுபாடுகள் கூட முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவையே.
எனவே தொடர்ந்தும் உங்கள் அவதானிப்புக்களைச் செய்வதும் அவற்றை வெளிப்படுத்துவதும் முக்கியமே.
By , at 5/08/2006 08:27:00 PM
சீரிய பணீயை செவ்வனே முடித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். இந்தப் பயிற்சி உங்கள் கல்விக்கும் தொழிலுக்கும் பலவகையில் உதவும் என்று நம்புகிறேன்.
அவ்வப்போது மறுமொழியாவிட்டாலும், பொதுவாக வாய்ப்புக்கிடைக்கும்போது உங்கள் இடுகைகளை வாசித்திருக்கிறேன். நல்ல நடுநிலையான திறனாய்வுகள்.
வாழ்க!
By காசி (Kasi), at 5/08/2006 08:27:00 PM
தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பிரயோசனமாக இருந்தன. நன்றி.
By தேசாந்திரி, at 5/08/2006 08:46:00 PM
Thanks a lot for the posts.Commendable job.
By , at 5/09/2006 12:41:00 AM
உங்கள் பணி தொடர்ந்து தமிழ் பத்திரிக்கை உலகில் தொடர வாழ்த்துக்கள், பத்திரிக்கைகள் இன்னொரு நீதிமன்றம் என்பதை பத்திரிக்கைகள் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஆற்றப் போகிறப் பணியில் உங்கள் பத்திரிக்கை நீதிமன்றமாகவும், நீங்கள் நீதிபதிகளாகவும் நடந்து கொள்வீர்கள் என்று உறுதி ஏற்கொண்டு முன்னேறி செல்லுங்கள். நளைய உலகம் உங்கள் கைகளில் தவழ காத்திருக்கிறது, அணைத்து வளர்த்துச் செல்லவேண்டிய பொறுப்பு உங்களுக்கு மிகக் கடினமானதாக இருக்கும், உங்கள் தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளில் எந்த காரணத்தை முன்னிட்டும் தினித்துவிடாதிர்கள், அப்படி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நுழைக்க முற்பட்டால் நீங்கள் சார்பு நிலையில் தொடர்ந்து செல்ல நேரிடும், பிறகு எது செய்தாலும் தடுமாற்றமும், விமர்சணங்களும் மிஞ்சும், சாதனைகளை யாரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள்.
நேர்மையாணவர்களையே மக்கள் என்றும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நிஜம். இருந்தாலும் சந்தர்பவாதிகளாலேயே பெரும்பாலும் அந்த இடம் நிறப்படுகிறது. ஆயிரம் அரசியல் வாதிகள் தினம் பிறக்கும் நம் நாட்டில் ஆண்டுக்கு ஒரு காந்தி கூடப் பிறப்பதில்லை என்பது சாபக்கேடு.
சரித்திரங்கள் எந்த கருத்தையும் முறியடிக்கும், மாற்றிவைக்கும். அந்த சரித்திரத்தில் உங்கள் பங்கும் ஒரு அங்கமாக நிற்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
உங்கள் அனைவருக்கும் அன்பு நல்வாழ்த்துக்கள்.
கோவி. கண்ணன் (நாகை)
சிங்கப்பூர்
By கோவி.கண்ணன், at 5/09/2006 12:52:00 AM
இது வலைப்பதிவுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த ஊடகத்துறைக்கும் சுய பரிசோதனைக்கு உதவக்கூடிய பதிவாக இருந்தது. நன்றி நண்பர்களே.
நீங்கள் படிப்பு நிறைவு செய்த பின்னரும் உங்களில் சிலராவது தொடர்ந்து வலைப்பதிய வேண்டும். உங்களைப்போன்ற இளைய தலைமுறையால் மட்டுமே இத்தகைய ஊடக வன்முறைக்கு மாற்று உருவாக்க முடியும்.
வலைப்பதிவதற்கான எந்த ஆலோசனைக்கும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன்
வலைஞன் [cisrofs at gmail dot com]
http://akaravalai.blogspot.com
http://valai.blogspirit.com
By newsintamil, at 5/09/2006 05:43:00 PM
A Word of Appraisal from the Press Council of India.
Mr Vibha Bhargava, Secretary of the Press Council of India, has sent a word of appreciation in response to our intimation to the PCI, about the blogspot on TN Media Watch by the Students of Journalism.
Here is the copy of the letter:
Dated 28 4 2006
Sub: Media Watch Blog by the Journalism Students..
Sir,
We are in receipt of your email message dated April 19 2006 on subject cited above and are pleased to learn that journalism students of Manonmaniam Sundaranar University, Tirunelveli, Tamilnadu have been conducting content analysis of four Tamil Nadu Newspapers on the eve of forthcoming Tamil Nadu Assembly Elections 2006 and uploading their analysis on the web blog, which is being widely read.
The initiative taken by the students is extremely commendable and would serve to present a clear picture to the readers about the coverage of election related news being printed in the newspapers of their State. You may like to refere to "Election Reporting" related guidlines drawn up by the Council available on the website of the Council at http://presscouncil.nic.in under head "Norms of Journalistic conduct".
We are sure the student would continue their efforts to strengthen the democratic process of the country.
Yours faithfully,
sd
(Vibha Bhargava)
Secretary
Press Council of India
Soochna Bhawan, 1st, 2nd and 3rd Floor, Phase 4, 8 CGO Complex, Lodhi Road, New Delhi 110 003 Phone: 24366745-46-47-49
email : pcids@vsnl.net
http://presscouncil.nic.in _________
Find below a copy of the mail sent to the Press Council of India, by the Media Watch Team, intimating the students initiative.
Dear Sir/Madam,
This is to inform you that the Final Year Journalism students of Manonmaniam Sundaranar University, Tirunelvlei, Tamilnadu, have been conducting content analysis of the four widely circulated newspapers of Tamil nadu, on the eve of Tamilnadu Assembly Elections 2006. We publish our commentary on a web blog created exclusively for this analysis. We present an accurate and unbiased research report on a day to day basis. The day to day research report is published in our blog http://tnmediawatch.blogspot.com
The research report is publshed in Tamil, and more than one hundred thinkers, activists and Journalists read the blog everyday. Hope we can bring out a final publication out of our 30 days of experience in publishing the election related contents in the Tamil newspapers.
This is to bring out the significant events related to the Indian Media to the knowledge of honourable Press Council of India.
With regards,
Media Watch Team.
_____
mediawatch06
Students of Media Studies
Department of Communication,
Manonmaniam Sundaranar University
Tirunelveli 627 012
கோடை விடுமுறைல ஊருக்கு போகலையா?
By செல்வன், at 6/02/2006 10:28:00 PM
இலவசங்களின் பிரளயம்சன் டிவியில் தயாநிதியின் பங்கு : தினமணியில் புலானாய்வுக் கட்டுரை
சிற்பி பாலசுப்பிரமணியம்
"ஆனை வரும் பின்னே, மணியோசை
வரும் முன்னே' என்பது பழமொழி. "தேர்தல் வரும் பின்னே, இலவசங்கள் முன்னே' என்பது நம்
காலப் புதுமொழி.
வணிக உலகம் கையாண்ட ஒரு தந்திர உத்தி அரசியல்வாதிகளின் கையில்
அட்சய பாத்திரமாகி விட்டது. சரியாகச் சொன்னால் அட்சய பாத்திரத்துக்குப் பசி
தணிப்பது தவிர வேறு எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் தேர்தல் வாக்குறுதிகளின் பின்
வாக்கு அறுவடை அமோகமாகக் கிடைக்கும் என்ற பேராசை ததும்பி நிற்கிறது.
உலகமயமாதலில் அடுத்த கட்டத்தில் இலவசங்கள் அறவே அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற
நிபந்தனைகள் கடுமையாகிக் கொண்டிருக்கும்போது, இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில்
மயிலிராவணன் தலைபோல் மறுபடியும் மறுபடியும் அவை முளைத்துத் தழைத்துத் தேர்தல்
தோரணங்களாகக் கெக்கலி கொட்டுகின்றன.
குறுகிய கால, நெடுங்கால மக்கள் நலத்
திட்டங்களை வாரிக் குப்பையில் போட்டு விட்டு முன்வரிசையில் முகம் காட்டி
நகைக்கின்றன இலவசங்கள்.
ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை, சிறிதளவு நிலம்,
பஞ்சகாலத்தில் பண உதவி, இயற்கைப் பேரழிவு நேர்ந்தால் தக்க நிவாரணம், விளைச்சல்
தவறும்போது கடன்கள் ரத்து என்பவைதான் பொதுவாக அரசு வழங்கும் இலவச உதவிகளாகப் பல ஆண்டுகள் முன் கருதப்பட்டன. ஒரு நல்லரசின் பொறுப்புகள் அவை என்பதில் ஐயமில்லை.
வேளாண் துறையின் சிக்கல்களுக்கு உதவி புரியும் வகையில் நீர் வளம் பெருக்க,
வீரிய விதைகளை அறிமுகம் செய்ய, கட்டுபடியாகும் விலை தர, புதிய கருவிகளைக் குறைந்த
விலைக்கு வழங்க அரசு முன் வருவது இயற்கை. தொழில் துறை செழிக்க மின் உற்பத்தி
பெருக்க, ஏற்றுமதிக்கு உறுதுணை புரிய, தடையற்ற நிர்வாக உதவி தர, வல்லுநர்களைக்
கொண்டு புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசு கைகொடுப்பது அவசியம். கல்வி, வாணிகம்,
கைத்தொழில்கள், சிறுதொழில்கள் ஆகியவை வளம் பெறவும், மருத்துவம் செழிக்கவும் அரசு
திட்டங்கள் வகுப்பது கடமை.
தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள் தகுதிக்கேற்ற வேலை
வாய்ப்புகளைப் பெற ஆவன செய்வதும் அரசின் பொறுப்பு. ஆனால் ஓடி ஓடி இலவசங்களைப்
பெறும் அடிமைகளாக மக்களை மாற்றுவது என்ன வகை நியாயம்?
பேருந்து நிலையத்தில்
போலித் துணி வியாபாரம் செய்பவர்கள் முதலில் ஏலம் கோருபவருக்கு இலவச சீப்புக்
கொடுப்பார்கள். அவையெல்லாம் வியாபார தந்திரங்கள். அரசியல் அப்படி வியாபாரம் ஆவது
வளர்ச்சியின் அடையாளம் அல்லவே அல்ல.
மீனைச் சாப்பிடக் கொடுப்பதை விடத்
தூண்டிலைக் கொடுத்து மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பது விவேகம் என்று சொல்லுவார்கள்.
அரசியல், பொருளாதார, சமூகத் தளங்களில் உழைப்பை முன்வைத்துச் செழிப்பை உருவாக்குவதே
வளம் பெருக்கும் வாழ்வியல்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட இயக்கம் ஆட்சியைக்
கைப்பற்ற முன்வைத்த சாகசமான வாக்குறுதி: "ஒரு படி நிச்சயம்-மூன்று படி லட்சியம்'.
அரசியல் அரிசியியல் ஆனதின் தொடக்கம் அது.
அரிசிப் பஞ்சம் காமராசர் ஆட்சிக்குப்
பின் உருவாயிற்று. அப்போது இந்த வாக்குறுதி வாக்குகளை உறுதியாக்கிற்று. அதன் பிறகு
அந்த வாக்குறுதி நின்றதுபோல் நின்று நெடுந்தூரம் சென்று மறைந்துவிட்டது. அதைக்
குறித்து மறந்தே போனோம். அதற்குக் காரணம் அண்ணா என்ற உயர்ந்த மனிதர் ஆட்சிப்
பொறுப்பில் இருந்தார் என்பதுதான். வாக்குறுதி தந்தவரின் நல்லெண்ணம் தோற்றதாய்ச்
சமாதானம் பூண்டோம்.
ஆனால் இன்றைய சூழ்நிலை வேறு. அரிசிப் பஞ்சங்களின் காலம்
கடந்து வேளாண்மையில் தன்னிறைவு பெற்றுவிட்டதற்குக் காரணமான பசுமைப்புரட்சியின்
அடுத்த கட்டம் இது (டர்ள்ற் எழ்ங்ங்ய் தங்ஸ்ர்ப்ன்ற்ண்ர்ய் டங்ழ்ண்ர்க்). மக்களில்
பெரும்பான்மையோருக்குப் பங்கீட்டு அரிசி கட்டாயத் தேவையும் அல்ல.
இந்த நிலையில்
இலவசங்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறது அரிசி. மானியங்கள் மூலம் இலவச மின்சாரம்
அளிப்பதைப்போல, பங்கீட்டு அரிசியும் பெருமளவு மானியம் தந்து குறைந்த விலைக்கு
வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலவசங்களின் பிரளயத்தை இந்தத் தேர்தலில்
தொடங்கி வைத்த பெருமை கலையுலகிலிருந்து அரசியலைத் திடீரென்று தாக்கிய ஒரு கட்சியையே
சாரும்.
பதினைந்து கிலோ அரிசி பங்கீட்டுக்குக் கடைக்கே போகாமல் வீட்டுக்கே
இலவசமாக வந்து கதவைத் தட்டும் என்ற அறிவிப்பு மேகமில்லாத வானத்திலிருந்து விழுந்த
இடியாக மற்ற கட்சிகளைத் தாக்கியது. அத்துடன் வேறு பல இலவசங்களும் கூட்டணி அமைத்துக்
கொண்டதால் அந்தக் கட்சி "கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ'னாகத் தோற்றம் தந்தது.
அந்த இலவச அலையின் ஓசை அடங்கிய போது, ஆளுங்கட்சி மிக நிதானமான, ஏற்கெனவே
வகுக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், புதிய கொள்கை அறிவிப்புகள், வேலை வாய்ப்புகள்
அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. சாதனைகளைச் சொல்லியும், சாதிக்க உள்ளவற்றை
விளக்கியும் வாக்குக் கேட்ட அறிக்கை பாராட்டுக்குரியதாகவே இருந்தது.
ஆனால்
முற்போக்குக் கூட்டணியின் முதன்மையான எதிர்க்கட்சி கொதிக்கக் கொதிக்க வெளியிட்ட
தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் புத்துயிர் கொண்டன.
இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ
அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இரண்டு ஏக்கர் நிலம் என இலவசங்கள் அணி
வகுத்தன.
முடியுமா என்ற வினாவுக்கு முடியாதது அந்தக் கட்சியின் அகராதியில்
இல்லாதது என்ற கம்பீரமான அறிவிப்பு மெய்க்காப்பாளனாக இலவசத்துடன் வலம் வரத்
தொடங்கியது.
இதனிடையே கருத்துக் கணிப்புகள் வேறு கலந்து கொள்ள இலவசங்களின்
அறிவிப்பில் அழுத்தமும் ஆவேசமும் கூடலாயிற்று. தேர்தல் களம், இலக்குகளை
விட்டுவிட்டு இலவசங்கள் பற்றிய பரபரப்பில் மூழ்கியது.
மக்கள் மனத்தில்
மாற்றங்கள் விளைந்ததாகத் தெரியவில்லை. ஆயினும் இலவசங்களின் ஓட்டப்பந்தயத்தில்
இப்போது ஆளுங்கட்சியும் கச்சை கட்டிக் கொண்டு இறங்கிவிட்டது. எதிரிதான் போர் முறையை
நிர்ணயிக்கிறான் என்று அரசியல் வித்தகர்கள் கூறுவது வழக்கம். எதிர்க்கட்சிகளின்
இலவசம் போர் முறை ஆளுங்கட்சியையும் அதே ஆயுதத்தோடு களமிறக்கி இருப்பது வருத்தம்
தருகிறது.
மாதம்தோறும் பங்கீட்டு அரிசியில் பத்து கிலோ இலவசமாக வழங்கப்படும் என
ஆளுங்கட்சி மிகத் தெளிவாக அறிவித்திருக்கிறது.
ஒரு நாடு அணு ஆயுத வல்லரசாக
மாறினால் இன்னொரு நாடு இன்னொரு அணு ஆயுதப் பேரரசாக மாற வரிந்து கட்டுகிறது. இதன்
விளைவை உலக அரங்கில் பார்க்கிறோம்.
இலவசங்களின் அறிவிப்புகளும் அந்த அபாயகரமான
விளையாட்டில் இறங்கிவிட்டன. வார்த்தைக்கு வார்த்தை, பேச்சுக்குப் பேச்சு என்ற எல்லை
கடந்து ஏட்டிக்குப் போட்டியாக இலவச அறிவிப்புகள் வானமே எல்லையாக வளர்ந்து
கொண்டிருக்கின்றன.
சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கத் தொடங்கிய தேர்தல்
பிரசாரத்தின் நல்ல தொடக்கம் எவ்வாறோ திசைமாறிப் போயிருக்கிறது.
இலவசங்களுக்கு
முடிவு ஏது? வலது காலணி வாங்கினால் இடது காலணி இலவசம் என்று தொடங்கி, கால்கள்
இருந்தால் காலணி இலவசம் என்று வளர்ந்து, காலணிகளோடு கால் உறையும் இலவசம் என்று
தொடர்ந்தால் முடிவு ஏது?
இலவசம் இன்றைய பரவசமாக இருக்கலாம். ஆனால் நாளைய
அரசாங்கத்தின் தலைவலி அது. இந்த விஷ வட்டம் பொருளாதார நட்டத்தில் போய் முடியலாம்.
உடனடியாக இரண்டு விளைவுகளைப் புதிய அரசு எதிர்பார்க்கலாம். மானியங்களாலும்,
இலவசங்களாலும் இன்றியமையாத நலத் திட்டங்களுக்கு உரிய நிதி குறைந்து போகும் என்பது
ஒன்று. அதை ஈடு செய்ய, கடுமையாக வரிகளை விதிக்க நேரிடும் என்பது மற்றொன்று.
அனுபவம் மிக்க அரசியல் தலைவர்கள் இதனை அறியாதவர்கள் அல்ல. பொறி பறக்கும்
தேர்தல் களம் அறிவைப் பகடையாக்கிப் பழி தீர்க்க முனைகிறது.
சன் டிவியில் தயாநிதியின் பங்கு: முழுப் பூசணிக்காயை சோற்றில்http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20060505135635&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0
மறைக்க முடியுமா?
கே.என். அருண்
சென்னை, மே 6: டிடிஎச் விவகாரத்தில்
டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவை மிரட்டியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி
நாளேடுகளில் செய்திகள் வெளியாயின. அதன்பிறகு 2 நாள் கழித்து பத்திரிகைகளுக்கு
வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அமைச்சராவதற்கு முன்போ, அதன் பிறகோ சன் டிவி
நிறுவனத்தில் எனக்குப் பங்கு ஒருபோதும் இருந்தது இல்லை' என்று திட்டவட்டமாகக்
கூறியிருந்தார் தயாநிதி மாறன்.
இதையடுத்து, சன் டிவி நிறுவனத்துக்கும் தயாநிதி
மாறனுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்று வெகுஜனங்கள் வேண்டுமானால் நம்பலாம். ஆனால்,
பங்குபத்திர வர்த்தக நிபுணர்களைக் கேட்டால் இது முழுப் பூசணிக்காயை சோற்றில்
மறைக்கும் கதை என்பது தெளிவாகும்.
சன் டிவி நிறுவனத்துடன் சிலந்தி வலை போல்
தொடர்புடைய சில நிறுவனங்களில் தயாநிதி மாறன், அவரது மனைவி பிரியா தயாநிதி மற்றும்
கலாநிதி மாறன் ஆகியோருக்கு எந்த அளவுக்குப் பங்கு உள்ளது என்பது வெட்ட
வெளிச்சமாகும். அதிலிருந்தே பத்திரிகைகளுக்கு அவர் வெளியிட்ட அறிக்கை உண்மை அல்ல
என்பது நிரூபணமாகும்.
விவரம்:
சமீபத்தில் சன் டிவி நிறுவனம் பங்கு வெளியீடு
மூலம் மூலதனம் திரட்டியது. அதற்கு முன்பாக சன் டிவியில் தயாநிதி மாறன் 2
நிறுவனங்களில் மறைமுகமாக வைத்திருந்த பங்குகள் முழுவதும் சன் டிவி நிறுவனத்துக்கும்
அதைச் சார்ந்த மற்றொரு நபருக்கும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாற்றப்பட்டன.
பங்குகளை வெளியிடுவதற்கு முன்பு செபி-யில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு ரெட் ஹெர்ரிங்
பிராஸ்பெக்டஸ் (ஆஎச்பி)யில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல் கேபிள்ஸ் பிரைவேட்
லிமிடெட் மற்றும் நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை
வைத்திருந்த ரூ. 10 முகமதிப்புள்ள தலா 31 பங்குகள் (மொத்தம் 62) அதே விலைக்கு
குங்குமம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சன் டிவி நிறுவன துணைத் தலைவர்
கே. சண்முகம் ஆகியோரது பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன. இது வரைவு ரெட்ஹெர்ரிங்
பிராஸ்பெக்டஸ் ஆவணத்தின் (ஆர்எச்பி) 36-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு முன் கலாநிதி மாறனின் தாயார் மல்லிகா மாறன் மற்றும் இதர சில
நிறுவனங்களுக்குச் சொந்தமான பங்குகள் மற்றும் அவரது பாட்டியும் திமுக தலைவர்
கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் வசம் இருந்த பங்குகளும் கலாநிதி மாறன்
பெயருக்கு மாற்றப்பட்டன. இதன்மூலம் சன் டிவி நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு
முன்பு அதன் 99.9 சதவீத பங்குதாரர் ஆகி விட்டார் கலாநிதி மாறன்.
தயாநிதி மாறனுக்கு 91 சதவீதமும் அவரது மனைவி பிரியாவுக்கு 9 சதவீத பங்குகளும் உள்ள டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு கல் கேபிள்ஸ் மற்றும் நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 25 சதவீதப் பங்குகளும் இருந்தன. இந்த 2 நிறுவனங்களிலும் கலாநிதி மாறனுக்கு 75 சதவீதப் பங்குகள் உள்ளன. இந்த 2 நிறுவனங்களில் தயாநிதி மாறனின் 25
சதவீதப் பங்குகள்தான் இந்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி மாற்றப்பட்டன. இதிலிருந்தே ஏப்ரல்
27-ம் தேதி தயாநிதி மாறன் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை உண்மை அல்ல என்பது
தெளிவாகிறது.
சன் டிவி நிறுவனத்தின் கேபிள் டிவி விநியோகச் சேவைகளை மேற்கொண்டு
வருகிறது நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன் நிறுவனம். இதன் மூலம் பெரும் வருமானம்
கிடைக்கிறது.
சன் டிவி நிறுவனத்துக்கு டவுன்லிங்கிங் சேவைகளைச் செய்து
கொடுக்கும் சேவைகளைச் செய்து வருவதன் மூலம் பெரும் வருவாயை ஈட்டுகிறது கல் கேபிள்ஸ் நிறுவனம். டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எச்எப்ஓ
எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், சன் டிவி நிறுவனத்துக்குத் தேவையான கேளிக்கை
சாதனங்களை வாடகைக்குக் கொடுத்து வருவதன் மூலம் பெரும் வருவாய் கிடைக்கிறது.
டிஎம்எஸ் என்ற மற்றொரு நிறுவனத்தில் தயாநிதி மாறனுக்கு 91 சதவீதப் பங்குகள்
உள்ள டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு 60 சதவீதப் பங்குகளும் எஞ்சிய 40 சதவீதப்
பங்குகள் தயாநிதி மாறனின் மனைவி பிரியாவுக்கும் உள்ளன.
இதுபோன்று சன் டிவி
நிறுவனத்தில் நேரடியாகப் பங்குதாரராக இல்லாமலேயே பெரும் வருவாய் வேறு வழியில்
ஈட்டப்படுகிறது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன்
பொறுப்பேற்று 2 மாதங்களுக்குப் பிறகு 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி டிகே
எண்டர்பிரைசஸ் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிறுவனம் "சாப்ட்வேர்
டெவலப்மெண்ட் மற்றும் சேவை' வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு
சன் டிவிக்காக நிகழ்ச்சிகளை டவுன்லிங்கிங் சேவை புரிந்து வரும் கல் நிறுவனத்தில் 25
சதவீதப் பங்குகள் உள்ளன. சன் டிவி நிறுவனத்தின் ஓர் அங்கமாக இருந்த கேபிள் மற்றும்
கண்டிஷனல் ஆக்சஸ் சிஸ்டம் செயல்பாடுகளை முழுமையாகச் செய்து வருகிறது.
2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமங்கலி கேபிள்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வந்த பணிகள் கல் கேபிள்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
மேற்கண்ட பங்குகளின் மாற்றத்தின்
மொத்த மதிப்பு ரூ. 33.9 மில்லியன் என சன் டிவி நிறுவன பங்கு வெளியீட்டு ஆவணத்தில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவைகள் அனைத்தும் தயாநிதி மற்றும் தொலைத் தொடர்பு வர்த்தகத்தை நெறிமுறைப்படுத்தும் அமைச்சகத்தின் கீழ் வருகிறது. மத்திய அமைச்சராக இருக்கும் தயாநிதி மாறன் அவரது சகோதரர் கலாநிதி மாறனுக்கு 75 சதவீதப் பங்குகள் உள்ள நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 25 சதவீதப் பங்குதாரர்.
இந்த நிறுவனம் இன்டர்நெட் சேவை, நெட்வொர்க் டெலிகம்யூனிகேஷன் மற்றும் டெலிபோனி சேவை ஆகிய வர்த்தகங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதுவும் பங்கு வெளியீட்டு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் முக்கிய வர்த்தகம் கம்ப்யூட்டர்
சாப்ட்வேர் டெவலப்மெண்ட், சிஸ்டம்ஸ் சாப்ட்வேர்கள், அப்ளிகேஷன்ஸ் சாப்ட்வேர்கள்,
உற்பத்தி, அசெம்பிளி, டிரேட், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட இந்த வர்த்தகங்கள் அனைத்தையுமே மத்தியத் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் வருபவைதான். அதுதான் தயாநிதி மாறன்!
சென்னையில் தண்ணீர் பிரச்னை இல்லை; ரவுடியிசம் ஒழிந்ததுhttp://www.dinamalar.com/2006may05/fpnews6.asp
தி.மு.க., கோட்டையில் அ.தி.மு.க.,
"தினமலர்' கருத்துக் கணிப்பில்
அதிரடி முடிவு நமது சிறப்பு நிருபர்
சென்னை நகரில் உள்ள 14 சட்டசபை தொகுதிகளில்
கணிசமான தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பது "தினமலர்'
நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மற்ற தொகுதிகளில் தி.மு.க.,வுக்கும்,
அ.தி.மு.க.,வுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.
ஒவ்வொரு
தேர்தலிலும் ஏதாவது ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்து வந்துள்ளது.
தமிழக மக்கள் இதுவரை கூட்டணி ஆட்சி அமையும் வகையில் ஓட்டுப் போட்டதில்லை என்பது
வரலாறு. ஆனால், இந்த முறை கூட்டணி ஆட்சி அமையுமோ என்ற சந்தேகத்தை பல்வேறு
நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் ஏற்படுத்துகின்றன.
இருந்தாலும் மக்களின் நாடித் துடிப்பை அறிய "தினமலர்' சார்பில் சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த மாதம் 26ம் தேதி கருத்துக் கணிப்பு
நடத்தப்பட்டது. கருத்துக் கணிப்பு குழுவில் 50 பேர் இடம் பெற்றனர். ஆண்கள்,
பெண்கள், அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மாணவர்கள்,
இல்லத்தரசிகள், வர்த்தகர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என எல்லாத் தரப்பினரிடமும்
கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், நான்காயிரத்து 662 பேர் தங்கள்
கருத்துக்களை தெரிவித்தனர்.
சென்னை நகரில் உள்ள ராயபுரம், துறைமுகம்,
ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பூங்காநகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாநகர்,
ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், தி.நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை
ஆகிய 14 சட்டசபை தொகுதிகளில் நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க.,வை விட
அ.தி.மு.க., முன்னணியில் உள்ளது.
சென்னை நகருக்குட்பட்ட 14 தொகுதிகளில்
கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டுகள் விவரம்:
தி.மு.க., 443
அ.தி.மு.க.,551
தே.மு.தி.க.,210
பா.ஜ., 25
மொத்த
ஓட்டுகள் 1,229
சென்னை நகரில் உள்ள 14 தொகுதிகளும் தி.மு.க.,வின் கோட்டை
என்று வர்ணிக்கப்படுகிறது. கடந்த 2001 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில்
அ.தி.மு.க., இரண்டு இடத்தையும், கூட்டணிக் கட்சிகள் இரண்டு இடத்தையும் கைப்பற்றின.
தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க., ஆறு அல்லது ஏழு இடங்களை கைப்பற்றும் பட்சத்தில்,
சென்னை தி.மு.க.,வின் கோட்டை என்ற மாயை தகர்க்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதற்கு
காரணம், சென்னை நகரில் தி.மு.க.,வை விட அ.தி.மு.க., முன்னணியில் உள்ளது.
சென்னை மாநகர குடிநீர் பிரச்னையை அ.தி.மு.க., அரசு தீர்த்து விட்டது
என்றும், நகரில் ரவுடிகள் தொல்லை இல்லை என்றும் பொதுமக்களிடம் பரவலாக கருத்து
உள்ளது. அ.தி.மு.க., முன்னணியில் இருக்க இதுவே காரணம். நமது சர்வே முடிவுப்படி
சென்னை நகரில் உள்ள 14 தொகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு குறைந்தது ஏழு தொகுதிகள்
கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை நகரில் கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்துள்ள
ஓட்டு சதவீதம்:
அ.தி.மு.க., அணி 43.35
தி.மு.க., அணி 34.85
தே.மு.தி.க., 16.52
இந்த சதவீத அடிப்படையில் பார்க்கும் போது
சென்னை நகரில் கணிசமான தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றும் என்றே தெரிகிறது.
தி.மு.க.,வின் கோட்டை என்று அழைக்கப்படும் சென்னை நகரில் அ.தி.மு.க.,வால் இந்த
அளவுக்கு ஓட்டு சதவீதங்களை பெற முடிந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
சென்னை நகரின் தலையாய பிரச்னை குடிநீர் பிரச்னை. கடந்த காலங்களில் சென்னை நகரில்
பெண்களும், ஆண்களும் குடத்தை துõக்கிக் கொண்டு லாரி தண்ணீருக்காக அலைந்தனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூட லுங்கியுடன் குடத்தை துõக்கிக் கொண்டு தண்ணீர்
பிடிக்கச் சென்றது பல பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்தது உண்மை. குடிநீருக்காக
மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்ய
வேண்டியிருந்தது. இப்போது குழாயைத் திறந்தால் தண்ணீர் கொட்டுகிறது. தினந்தோறும்
காலை நேரத்தில் குழாய்களில் தண்ணீர் வருவது சென்னை நகர மக்களுக்கு நிம்மதியை
தந்துள்ளது.
அடுத்ததாக, சென்னை நகரில் கொடிகட்டிப் பறந்த ரவுடிகள்
ராஜ்ஜியம் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளது சென்னை நகர மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
மூன்றாவதாக, சென்னை நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இரண்டாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் நிவாரணப்
பொருட்களும் போய்ச் சேர்ந்தது அ.தி.மு.க., அரசின் பக்கம் மக்களை இழுத்துள்ளது. இந்த
மூன்று காரணங்களும் சென்னையில் தி.மு.க.,வின் கோட்டையை தகர்த்து அ.தி.மு.க.,
ஓட்டுகளை கைப்பற்ற வழிவகுத்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க., அணிக்கும் தி.மு.க., அணிக்கும் இடையே
கடும் போட்டி நிலவி வருகிறது. சொற்ப எண்ணிக்கையில் இரண்டு அணிகளும் ஒன்றை ஒன்று
முந்திச் செல்கின்றன. சில தொகுதிகளிலும் மிகக் குறைந்த சதவீதத்தில் தி.மு.க.,
முன்னணியில் உள்ளது.
காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட சர்வே முடிவு:
தி.மு.க., 1,320
அ.தி.மு.க., 1,128
தே.மு.தி.க., 706
பா.ஜ., 66
செல்லாத ஓட்டு 49
மொத்த ஓட்டுகள்: 3,269
சதவீதம்:
தி.மு.க., 40.37
அ.தி.மு.க., 34.50
தே.மு.தி.க., 21.59
பா.ஜ., 2.01
பெண்கள்:
தி.மு.க., 352
அ.தி.மு.க., 375
தே.மு.தி.க., 203
பா.ஜ., 36
சதவீதம்:
தி.மு.க., 36.36
அ.தி.மு.க.,
38.73
தே.மு.தி.க., 20.07
பா.ஜ., 3.71
* கூடுதல் பிரசாரம்,
அறிவிப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளில் கடுமையாக உழைத்தால்
வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரண்டு அணிகளுக்குமே உள்ளது. நடிகர் விஜயகாந்தின்
தே.மு.தி.க., அனைத்து தொகுதிகளிலும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது. கடுமையாக
உழைக்கும் கட்சி வெற்றிக்கனியை பறிக்க முடியும் என்ற நிலைதான் இந்த மாவட்டங்களில்
நிலவுகிறது.
* இந்த கருத்துக் கணிப்பில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில்
கருத்து தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவித்துள்ள பெண்களில் அதிகம் பேர்
அ.தி.மு.க.,வை விரும்புகின்றனர். இந்த மாவட்டத்தில் பெண்கள் ஓட்டு தான் அதிகம்.
பெண்கள் ஐம்பது சதவீதத்திற்கு மேல் ஓட்டு போடும் பட்சத்தில் தேர்தல் முடிவுகள் மாற
வாய்ப்பு உள்ளது.
* விஜயகாந்த் குறிப்பிட்ட சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார். இவர்
அ.தி.மு.க., ஓட்டுகளைப் பிரிக்கிறாரா அல்லது தி.மு.க., அணி ஓட்டைப் பிரிக்கிறாரா
என்பதை கணிக்க முடியவில்லை. அதனைப் பொறுத்தும் தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்பட
வாய்ப்பு உள்ளது.
தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., அதிக இடங்களை பிடிக்கும்ஆதாரமில்லாத தினமலரின் 2 லீட் ஸ்டோரிகள்:
* தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பு
மதுரை , திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர்
மாவட்டங்களில் உள்ள ஏழு சட்டசபைத் தொகுதிகளில் தினமலர் கருத்துக் கணிப்பு
நடத்தியது. தேர்தல் பிரசாரம் முடிவடைவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு நடந்த இந்த
கருத்துக் கணிப்பில் தேர்தல் முடிவுகளை ஓரளவு
கணிக்கக்கூடிய அளவிற்கு
வாக்காளர்கள் தங்களது கருத்துக்களை தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளனர். இதன்படி,
அ.தி.மு.க.,விற்கு 43.5 சதவீத வாக்காளர்களின் ஆதரவும், தி.மு.க.,விற்கு 39.9 சதவீத
வாக்காளர்களின் ஆதரவும், விஜயகாந்திற்கு 14.5 சதவீத வாக்காளர்கள் ஆதரவு
தந்துள்ளனர். பா.ஜ., மற்றும் இதர கட்சிகளுக்கு 2.1 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பின் முழு விவரம்:
கருத்துக் கணிப்பு நடந்த
தொகுதிகள்: மேலே கூறிய ஆறு மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளில் முக்கிய தொகுதிகளான
ஏழு (மதுரை மத்தி, சேடபட்டி, ஆத்துõர், ஆண்டிபட்டி, பரமக்குடி, சிவகங்கை, சிவகாசி)
மட்டும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதாவது, அ.தி.மு.க.,
தி.மு.க., நேரடியாக மோதக்கூடிய நகர்புற தொகுதி ஒன்று (மதுரை மத்தி) அ.தி.மு.க.,
தி.மு.க., நேரடியாக
மோதக்கூடிய கிராமப்புற தொகுதிகள் இரண்டு(சேடபட்டி,
ஆத்துõர்). அ.தி.மு.க., காங்கிரஸ் மோதக்கூடிய தனித்தொகுதி ஒன்று (பரமக்குடி),
தி.மு.க., ம.தி.மு.க., மோதக்கூடிய தொகுதி இரண்டு (சிவகங்கை. சிவகாசி) மற்றும் ஒரு
வி.ஐ.பி., தொகுதி (ஆண்டிபட்டி). தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆயிரத்து 400
பேர் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் ஆயிரத்து 12 பேர், பெண்கள் 388 பேர். இவர்களில்
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என 610 பேர் ஓட்டளித்துள்ளனர்.
இது
43.5 சதவீதம் ஆகும். தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும் என 559 பேர் ஒட்டளித்துள்ளனர்.
இது 39.9சதவீதம் ஆகும். விஜயகாந்த் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து 201 பேர்
ஓட்டளித்துள்ளனர். இது 14.5 சதவீதம் ஆகும். பா.ஜ., மற்றும் இதர கட்சிகளுக்கு ஆதரவு
தெரிவித்து 30 பேர் ஓட்டளித்துள்ளனர். இது 2.1 சதவீதம் ஆகும்.
சிறந்த ஆட்சி:
இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 1012 ஆண்களில் 417 பேர் அ.தி.மு.க.,விற்கு
ஆதரவு தெரிவித்துள்ளனர். தி.மு.க.விற்கு 423 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் கட்சிக்கு 143 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆண்களை பொருத்தவரை
அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிக்க சிலர் தயக்கம் காட்டிய போதும், அ.தி.மு.க.,
ஆட்சியை சிறந்த ஆட்சி என்று பாராட்டியுள்ளனர். விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டளிக்க
கூடிய பலரும் ஜெயலலிதாவின் ஆட்சியை சிறந்த ஆட்சி என தெரிவித்துள்ளனர். கருத்துக்
கணிப்பின் முதல் கேள்வியான அ.தி.மு.க., ஆட்சி பற்றி உங்கள் கருத்து என்ன? என்று
கேட்ட போது, சிறந்த ஆட்சி என 510 பேரும், சுமாரான ஆட்சி என 586 பேரும், மோசமான
ஆட்சி என 304 பேரும் கூறியுள்ளனர். இதில், ஜெயலலிதாவின் ஆட்சி "சுமாரானது' என சில
தி.மு.க., ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண்கள் ஆதரவு:
ஜெயலலிதாவிற்கு பெண்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. கலந்து கொண்ட 388 பெண்களில்,
அ.தி.மு.க.,விற்கு 193 பெண்களும், தி.மு.க.,விற்கு 136 பெண்களும் விஜயகாந்திற்கு 58
பெண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே கருத்துக் கணிப்பை நாங்கள் சந்தித்த
ஆயிரத்து 400 பேரில் சரிபாதி பெண்களிடம் கேட்டிருந்தால் ஜெயலலிதாவிற்கான ஆதரவு
சதவீம் மேலும் அதிகரித்திருக்கும்.
யார் முதல்வர்: நடைபெற இருக்கின்ற தேர்தலில்
யார் முதல்வராக வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவிற்கு
ஆதரவு தெரிவித்து 630 பேரும், கருணாநிதிக்கு ஆதரவு தெரிவித்து 587 பேரும்,
விஜயகாந்திற்கு ஆதரவு தெரிவித்து 213 பேரும் பதிலளித்துள்ளனர். கடந்த தேர்தலில்
யாருக்கு ஓட்டளித்தீர்கள் என்ற கேள்விக்கு தி.மு.க., என 679 பேரும், அ.தி.மு.க., என
610 பேரும் இதர கட்சிகள் என 111 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த்
யாருடைய ஓட்டை பிரிப்பார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு அ.தி.மு.க., தி.மு.க.,
ஓட்டுகளை சரிசமமாக பிரிப்பார் என தெரிகிறது. விஜயகாந்த் கட்சி தீவிரமாக வேலை
செய்யக்கூடிய தொகுதிகளில் தி.மு.க.,விற்கும் அ.தி.மு.க.,விற்கும் மோதல் கடுமையாக
உள்ளது.
அரசு ஊழியர் நிலை: இந்த கருத்துக் கணிப்பில் 167 அரசு ஊழியர்கள் கலந்து
கொண்டனர். இதில், 124 பேர் மாநில அரசு ஊழியர்கள், 43 பேர் மத்திய அரசு ஊழியர்கள்.
இவர்களில், மாநில அரசு ஊழியர்கள் தி.மு.க.,விற்கு ஆதரவாக 85 பேரும்,
அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக 27 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த்திற்கு
ஒன்பது பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்களில் தி.மு.க.,விற்கு 25
பேரும் அ.தி.மு.க.,விற்கு 14 பேரும், விஜயகாந்திற்கு மூன்று பேரும், பா.ஜ.,விற்கு
ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசு ஊழியர்களில் ஆதரவு நிலையை
பார்க்கும் போது தி.மு.க.,விற்கு 65.86 சதவீதமும் அ.தி.மு.க.,விற்கு 24.55
சதவீதமும் உள்ளது.
குடும்ப அரசியல்: குடும்ப அரசியலை தி.மு.க., வளர்த்து
வருகிறது என்ற குற்றச்சாட்டு சரி என ஆயிரத்தி 400 பேரில் 844 பேர்
தெரிவித்துள்ளனர். தவறு என 556 பேர் தெரிவித்துள்ளனர். இதை பார்க்கும் போது
தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க விரும்பும் பலரும், தி.மு.க.,வினருமே குடும்ப அரசியலை
விரும்பவில்லை. வைகோ தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறியது தவறு என 529 பேரும்
சரி என 871 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இளம் வாக்காளர்கள்: 18 முதல் 25
வயதிற்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் 221 பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து
கொண்டனர். இவர்களில் அ.தி.மு.க.,விற்கு 79 பேரும் விஜயகாந்திற்கு 75 பேரும்
தி.மு.க.,விற்கு 67 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். விஜயகாந்தின் வளர்ச்சி வரும்
தேர்தல்களில் நிலைத்து நிற்குமானால், அது தி.மு.க.,வை பாதிக்கும். கணிப்பு
முடிவுகளை வைத்து பார்க்கும் போது 38 தொகுதிகளில் 27 தொகுதிகளில்
அ.தி.மு.க.,கூட்டணியும், 11 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணியும் வெற்றி பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் கடைசி நேர மனமாற்றம் தேர்தல் முடிவையே மாற்றி
கருத்துக் கணிப்புகளை தடுமாறச் செய்யும் என்பதையும் மறுக்கமுடியாது.
*கருத்துக்
கணிப்பில் குடும்ப பெண்கள் 236 பேரும், மாநில அரசு ஊழியர்கள் 124 பேரும், மத்திய
அரசு ஊழியர்கள் 43 பேரும், தனியார் நிறுவன ஊழியர்கள் 212 பேரும், வர்த்தகர்கள் 329
பேரும், மாணவர்கள் 101 பேரும், கூலி வேலை செய்பவர்கள் 52 பேரும், விவசாயிகள் 156
பேரும், இதர தொழில்களை செய்யும் 147 பேரும் கலந்து கொண்டனர்.
தென்
மாவட்டங்களில் அ.தி.மு.க., அலட்சியம்: தேர்தல் வேலையில் தென்மாவட்டங்களை பொறுத்த
வரை அ.தி.மு.க.,விற்கு சாதகமான நிலையே காணப்படுகிறது. ஆனால், வெற்றிக்கனியை
பறிக்கும் அளவிற்கு அ.தி.மு.க.,வினர் வேலை செய்யவில்லை. தேர்தல் நெருங்கிவிட்ட
நிலையிலும் பூத் சிலிப்கள் வழங்கப்படவில்லை. மேலும், வாக்காளர்களை வீடு வீடாகச்
சென்று சந்திக்கவில்லை. வீடு தேடி சிலிப்புகள் வந்தால் தான் ஓட்டுப் போட பலரும்
ஓட்டுச்சாவடிக்கு செல்வார்கள். தி.மு.க.,வினர் பெரும்பாலான தொகுதிகளில் பூத்
சிலிப்களை வழங்கிவிட்டார்கள். மேலும், ஏன் தி.மு.க.,விற்கு ஓட்டுப் போட வேண்டும்
என்றும் நோட்டீஸ்களை வினியோகித்துள்ளனர். இதை, அ.தி.மு.க., செய்யாதது வாக்காளர்களை
தன் பக்கம் இழுக்கத் தவறி விட்டதாக தெரிகிறது. மூன்று கட்டமாக பண பட்டுவாடா
நடந்தும் கட்சி நிர்வாகிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்று சில மாவட்டத் தலைவர்கள்
வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
6 05 2006 அன்று வெளியான லீட் ஸ்டோரியில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயரப் போவ்தாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இனதச் செய்தியும் ஒரு கற்பிதத்தின் அடிப்படையிலான செய்தியாகும். இதிலும் எதுவும் மேற்கோள் கட்டப்படவில்லை. ஆனால், மத்திய அரசின் சார்பில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயராது என்று வெளியிடப் பட்ட அறிக்கையை தினமலர் தவிர பிற இதழ்கள் வெளியிட்டுள்ளன.
தினமலரில் வெளியான லீட் ஸ்டோரி இது:
தேர்தல் பரிசு! விரலில் வைக்கும் மை காயும் முன் வெளியாகப்போகிறது அறிவிப்பு*
மத்திய அரசை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட், தி.மு.க., கட்சிகள் மவுனம்
புதுடில்லி:
ஐந்து மாநில தேர்தல் பரிசாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை
மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இந்த விலை உயர்வு இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இருக்கும். வரும் எட்டாம் தேதி ஓட்டு போடும் போது விரலில் வைக்கும் மை காயும் முன்பாக இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது. மக்களை கடுமையாகப் பாதிக்கும் இந்த விஷயத்தில் மத்திய அரசு இந்த அளவுக்கு திடமான ஒரு முடிவை எடுக்க துணிந்து விட்ட பின்பும், அதற்கு ஆதரவு அளித்து வரும் தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாய் மூடி மவுனியாக இருக்கின்றன. பெட்ரோலியப் பொருட்களின் விலை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்றவாறு உயர்த்தப்படாததால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு 2005'06ம் நிதியாண்டில் ரூ.39 ஆயிரத்து 595 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் கெரசின் விற்பனையில் ரூ.14 ஆயிரத்து 384 கோடி, சமையல் காஸ் விற்பனையில் ரூ.10 ஆயிரத்து 245 கோடி, டீசல் விற்பனையில் ரூ.13 ஆயிரத்து 284 கோடி, பெட்ரோல் விற்பனையில் ரூ.இரண்டாயிரத்து 680 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓ.என்.ஜி.சி., மூலம் 14 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் டிஸ்கவுன்டாக ரூ.750 கோடி செலுத்தியுள்ளது. இருப்பினும், மற்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் கடந்த நிதியாண்டில் மிக அதிக பட்சமாகவே இருந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் மானியத் தொகையை ரூ.இரண்டாயிரத்து 900 கோடியில் இருந்து ஓரளவுக்கு உயர்த்தினால் நஷ்டத்தைக் குறைக்க முடியும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு கோரிக்கையை முன் வைத்தன. ஆனால், இதை மத்திய நிதி அமைச்சகம் ஏற்க மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ரூ. 11 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு பத்திரங்களை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை இதனால் ஈடுகட்ட முடியவில்லை. மேலும், காலம் கடந்து எடுத்த முடிவாகவே இது கருதப்பட்டது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் 50 சதவீத வினியோகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தான் கவனித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு ஒரு நாளைக்கு ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்பது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் நிர்பந்தமாக உள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி சமையல் காஸ் விலையில் ரூ.192ம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஆறு ரூபாயிலிருந்து ஏழு ரூபாய் வரையும், கெரசின் விலையில் ரூ.13ம் உயர்த்த வேண்டும் என்பது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. இதில், கெரசின் விலையில் மத்திய அரசு கை வைக்காது. ஆனால், இதர பெட்ரோலியப் பொருட்களின் விலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விடுத்த கோரிக்கை அளவுக்கு உயர்த்தாவிடிலும் ஓரளவுக்கு விலையை உயர்த்த மத்திய அரசு சம்மதித்து விட்டதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 70 டாலருக்கு மேல் உள்ளது. சமீபத்தில் ஈரான் எண்ணெய் துறை துணை அமைச்சர் ஹாதிமுகமது நிஜாத் ஹூசேன் டில்லி வந்து இருந்தார். அப்போது அவர் குளிர் காலத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று ஒரு அதிர்ச்சி தகவலைத் தெரிவித்து இருந்தார். மத்திய நிதி அமைச்சர் சமீபத்தில் கோவையில் நிருபர்களைச் சந்தித்த போது பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை அதிக நாட்களுக்கு தள்ளிப் போட முடியாது என்ற கருத்தைத் தெரிவித்து இருந்தார். அதற்கு ஏற்றார் போல் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தப் போகிறது. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. கடைசி கட்டமாக வரும் 8ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும், மேற்கு வங்கத்தில் சில தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவு முடிந்த அன்றைய தினமே பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தலாம் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில மக்களுக்கு மத்திய அரசு அளிக்கும் தேர்தல் பரிசு இதுவே என்ற விமர்சனம் தற்போதே எழுந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு நியாயமானது என்று பொதுத்துறை நிறுவனங்கள் கூறினாலும், இந்த விலை உயர்வு மக்களை கடுமையாகப் பாதிக்கும் என்ற நிலை உள்ளது. மத்திய அரசில் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., இடம் பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு வெளியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஒவ்வொரு முறை பெட்ரோலியப் பொருட்கள் விலை உயரும்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறை விலை உயர்வு கடுமையாக இருக்கும் என்ற போதிலும் வாயை திறக்காமல் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் உள்ளன. கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள தி.மு.க.,வோ ஓட்டுப்பதிவு நடக்கும் வரை இந்த விலை உயர்வு அறிவிப்பு வராமல் இருந்தாலே போதுமானது என்ற நிலைப்பாட்டை எடுத்து மவுனமாக உள்ளது.
Good Work Media Watch Team!!
Keep Up!!
By Sivabalan, at 5/06/2006 11:00:00 AM
தயாநிதி மாறன் விவகாரத்தில் "டாடா'வுடன் பேச... சோனியா நிராகரிப்பு! கருணாநிதி கோரிக்கையை ஏற்க மறுப்புகருணாநிதிக்கு எதிரான செய்திக்கு தினத் தந்தியில் முக்கியத்துவம்:
நமது சிறப்பு நிருபர்
டாடா நிறுவனத்தை மிரட்டியதாக கூறப்படும் சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை காப்பாற்ற தி.மு.க., தலைமை காங்.,
கட்சியிடம் வைத்திருந்த கோரிக்கையை காங்., நிராகரித்து விட்டது.
இந்த விவகாரத்தில் டாடா நிறுவனம் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க., தலைமை விரும்புகிறது. ஆனால், இது தொடர்பாக டாடா நிறுவனத்திடம் பேச
சோனியாவும், பிரதமரும் மறுத்து விட்டதாக டில்லி காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.
வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு (டி.டி.எச்.,) வர்த்தக
உரிமம் பெற்றுள்ள டாடா நிறுவனத்தில், சன் "டிவி' குழுமத்தை பங்குதாரராக்க வேண்டும்
என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியதாக பத்திரிகைகளில்
செய்திகள் வெளிவந்தன. இந்த விவகாரத்தை முதன் முதலில் கிளப்பியவர் வைகோ.
டாடா நிறுவனத்தை மிரட்டிய விவகாரம் நாட்டில் உள்ள தொழிலதிபர்களை
உலுக்கியுள்ளது. தேர்தல் களத்தில் இது தி.மு.க.,வுக்கு பெரும் தர்மசங்கடத்தை
ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரமாக செய்திகள் தொடர்ந்து
வெளியாகிக் கொண்டுள்ளன. ஆனால், டாடா நிறுவனம் இந்த செய்திகளை இதுவரை
மறுக்கவில்லை.
இதுதான் தி.மு.க.,வை பீதிக்குள் தள்ளி விட்டது. தேர்தல்
நேரத்தில் டாடா விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தி
வருவதாக தி.மு.க.,வினரே கூறி வருகின்றனர்.
டாடாவை மிரட்டிய விவகாரம்
தமிழக தேர்தலின் போக்கையே மாற்றிவிடும் என்ற அச்சம் தி.மு.க., தலைமையை பிடித்துக்
கொண்டுள்ளது. இந்த விவகாரத்திலிருந்து எப்படியாவது தயாநிதி மாறனை மீட்க வேண்டும்
என்று தீவிரமாக இறங்கியது தி.மு.க., தலைமை.
இதற்காக முதலில் காங்கிரஸ்
தலைவர் சோனியாவிடம் தி.மு.க., தலைமை பேசியது. "இந்த விவகாரத்தில் டாடா நிறுவனம்
உடனடியாக மறுப்பு தெரிவிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்தால் தேர்தலுக்கு
நல்லது' என்று தி.மு.க., தலைமை கேட்டுக் கொண்டது.
இந்த விவகாரத்தில்
தலையிடாமல் சோனியா ஒதுங்கிக் கொண்டார். "இதில் தலையிட்டால், காங்கிரஸ் கட்சிக்கு
அவப்பெயர் வந்துவிடும்' என்று சோனியா தெரிவித்து விட்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரம்
கூறுகிறது. பின்னர் பிரதமரிடம் தி.மு.க., தலைமை முறையிட்டது. பிரதமரும் இந்த
விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டதாக தெரிகிறது.
சோனியாவும்,
பிரதமரும் தலையிட மறுத்துவிட்டதால், டாடா விவகாரம் மேலும் வெடித்துக் கொண்டே
இருக்கிறது. தமிழக தேர்தலில் டாடா விவகாரம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்
என்று தி.மு.க.,வினரே தங்கள் கட்சி தலைமையிடம் எடுத்துக் கூறி வருகின்றனர்.
இதிலிருந்து தயாநிதி மாறனை எப்படி மீட்பது என்று தெரியாமல் தி.மு.க., தலைமை தவியாய்
தவித்து வருகிறது.
Source : http://www.dinamalar.com/2006may03/fpnews1.asp
மாயாவதியின் பேச்சு: தமிழ்ப் பத்திரிகைகள் [தினமணி தவிர] புறக்கணிப்புநான்கு நாட்களில் பெட்ரோல், டீசல், காஸ் விலை கடுமையாக
உயர்கிறது * தி.மு.க., நிர்பந்தத்தால் அறிவிப்பை தள்ளிவைத்தது மத்திய
அரசு
புதுடில்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த
வேண்டிய கட்டாய நிலைக்கு மத்திய அரசு வந்துவிட்டது. லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை
அதிகரிக்கப்பட உள்ளது. சமையல் காஸ் விலையும் பத்து ரூபாயில் இருந்து ரூ. 15 வரை உயர
உள்ளது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே விலை உயர்வு அமலுக்கு
வரவேண்டும் என கூட்டணி கட்சிகள் கொடுத்துவந்த நெருக்கடி காரணமாக தற்போது விலை
உயர்வு அறிவிக்கப்படவில்லை.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்
தங்களால் நஷ்டத்தை தாங்கி கொள்ள முடியாது. எனவே விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என நிர்ப்பந்தம் செய்து வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் ஓட்டுப்பதிவு வரும் 8ம் தேதி முடிந்ததும் அன்று நள்ளிரவு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாமதத்திற்கு மத்தியில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., வின் தொடர் நெருக்கடியும் காரணம் என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் ஆகியவற்றை வினியோகித்து வருகின்றன. இதில் பெரும் பங்கு ஐ.ஓ.சி., நிறுவனத்துடையது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 75 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்து காணப்படுவதால் இந்நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கடந்த 200506ம் நிதியாண்டில் இந்நிறுவனங்களுக்கு ரூ. 39 ஆயிரத்து 600 கோடி நஷ்டம் ஏற்பட்டது. கடந்த ஏப்ரலில் ஐ.ஓ.சி., நிறுவனத்துக்கு ரூ. இரண்டு ஆயிரத்து 450 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மே மாதத்தில் ஆயிரத்து 560 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் சேர்ந்து 200607ம் ஆண்டில் ரூ. 57 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்திக்க உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 9.34, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 10. 43, மண்ணெண்ணெய் விலையில் லிட்டருக்கு ரூ. 16.78, சமையல் காஸ் விலையில் ஒரு சிலிண்டருக்கு ரூ. 200 என நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதை சமாளிக்க பெட்ரோல், டீசல் விலையில் ரூ. 10 உயர்த்த வேண்டும். அதே போல் சமையல் காஸ் விலையையும் உயர்த்த வேண்டும் என ஐ.ஓ.சி., தலைவர் சில நாட்களுக்கு முன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். கோவையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை நெடுநாளைக்கு தள்ளிப்போட முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாயில் இருந்து மூன்று ரூபாய் வரையும், சமையல் காஸ் விலையில் பத்து ரூபாயில் இருந்து ரூ. 15 வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து விட்டது. ஆனால், ஐந்து மாநில தேர்தல்கள் தான் இந்த முடிவை சற்று தள்ளிப் போட்டுள்ளது. இடதுசாரி கட்சிகள் தான் இதற்கு பெரும் எதிர்ப்பு என்பதால், கேரளா, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்ததும் வரும் 5ம் தேதிக்குள் அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், 8ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. அன்றைய தினம் மேற்கு வங்கத்தில் சில தொகுதிகளில் தான் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் நிர்ப்பந்தத்தை சமாளிக்க 5ம் தேதிக்குள் விலை உயர்வை அறிவிக்க மத்திய அரசு யோசித்தது. இதை அறிந்த , தி.மு.க., தமிழக ஓட்டுப்பதிவு வரை அறிவிப்பை தள்ளிப்போட ரொம்ப பிரயத்தனம் செய்தது. இதற்காக மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மூலமாக காய் நகர்த்தல் வேலைகள் நடந்தன. விலை உயர்வு பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்றால் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் தேவை. ஆனால், சிதம்பரம் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் இருப்பதால் அதை காரணம் காட்டி தி.மு.க., அடுத்த வாரம் வரை தள்ளிப் போட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது . இது குறித்து டில்லியில் உள்ள உயர் அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு: தமிழக ஓட்டுப்பதிவுக்கு முன் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டால் தேர்தல் வெற்றி வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வாழ்வா, சாவா என்ற நிலை தேர்தலில் உருவாகியுள்ளதால் "விலை உயர்வு அறிவிப்பு' எக்காரணம் கொண்டும் தேர்தலுக்கு முன்பாக இருக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் தி.மு.க., தலைமை திட்டவட்டமாக கூறி விட்டது. தமிழகத்தை சேர்ந்தவரே நிதியமைச்சராகவும் இருப்பதால் "விலை உயர்வு அறிவிப்பு' வெளியாவதில் காலதாமதம் ஏற்படுத்துவது சுலபமாகி விட்டது. தமிழகத்தேர்தல் ஓட்டுப்பதிவு தினமான 8ம் தேதி நள்ளிரவிலோ அல்லது ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 11ம் தேதி நள்ளிரவிலோ விலை உயர்வு அறிவிப்பை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தால் தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று கருத்து உள்ளது. எனவே ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஓட்டுப்பதிவு தினமான 8ம் தேதி நள்ளிரவில் விலைஉயர்வு அறிவிப்பு வெளியாகும். குறைந்த ஓட்டுபதிவு என்ற நிலை உருவானால் 11ம் தேதி நள்ளிரவு வெளியாகும். தமிழக தேர்தல் முடிவுகள் தி.மு.க., வுக்கு பாதகமாகவும் அ.தி.மு.க., வுக்கு சாதகமாகவும் இருந்தால் நிச்சயம் அன்றைய தினம் நள்ளிரவே விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும். எனவே தமிழக மக்கள் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., வுக்கு ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும் பெட்ரோலியப்பொருட்களின் விலை உயர்வை உடனடியாக எதிர் கொண்டே ஆக வேண்டும். இவ்வாறு டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. சொன்னது என்ன? சிதம்பரம் விளக்கம்: "" பெட்ரோல் விலை உயரும் என நான் கூறவில்லை; நீண்ட காலத்துக்கு தள்ளிப்போட முடியாது என்றே தெரிவித்தேன்,'' என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை: என்னிடம் " பெட்ரோல் விலை பற்றிய முடிவை எவ்வளவு காலத்திற்கு தள்ளிப்போட முடியும்?' என்று கேட்கப்பட்டது. " நீண்ட காலத்திற்கு தள்ளிப் போட முடியாது' என்று பதில் அளித்தேன். விரைவில் பெட்ரோல் விலை உயரும் என்று நான் கூறவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Source : http://www.dinamalar.com/2006may04/fpnews3.asp
தயாநிதி விவகாரம் குறித்து சென்னையில் இன்று
விளக்கம்?...மன்மோகன் முடிவு! தேர்தல் பிரசாரத்தில் மத்திய அரசின் முடிவை
அறிவிக்கிறார்
நமது சிறப்பு நிருபர்
டாடா நிறுவனத்தை மிரட்டியதாக கூறப்படும் விவகாரத்தில்
தி.மு.க., தலைமையின் நெருக்கடி ஒரு பக்கத்திலும், இந்த விவகாரத்தில் பிரதமர் பதில்
சொல்லியாக வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை மறுபக்கத்திலும் வலுத்து வரும்
நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று தமிழகம் வருகிறார். திருச்சி, சென்னை ஆகிய
இடங்களில் தி.மு.க., அணிக்கு தேர்தல் பிரசாரம் செய்யும் அவர் "டாடா விவகாரத்தில்'
மவுனம் கலைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக தேர்தல் சூடு
பிடித்துள்ள நிலையில், டாடா நிறுவனத்தை மிரட்டிய விவகாரம் மத்திய அரசுக்கும்,
தேர்தல் களத்தில் நிற்கும் தி.மு.க.,வுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு (டி.டி.எச்.,) வர்த்தக உரிமம் பெற்றுள்ள டாடா
நிறுவனத்தில், சன் "டிவி' நிறுவனத்தை பங்குதாரராக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்
தயாநிதி மிரட்டியதாக வெளிவந்த செய்திகள் தி.மு.க., கூட்டணியை பெரிதும் பதம்
பார்த்துவிட்டது.
ஆறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் தி.மு.க.,வுக்கு எதிராக
களத்தில் நிற்கும் அ.தி.மு.க., அதே அளவு பலத்தோடு இருப்பது இந்த தேர்தலில்
ஏற்பட்டுள்ள புதிய நிலைமை. எதிர்ப்பு அலை இல்லாத நிலையில் உள்ள ஆளும் அ.தி.மு.க.,வை
எதிர்கொள்ள தி.மு.க., கூட்டணி பல்வேறு யுக்திகளை கையாண்டு
வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், டாடா நிறுவனத்தை மிரட்டிய விவகாரம் தமிழக
தேர்தலில் கடுமையாக எதிரொலித்து வருகிறது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின்
வாயை அடைக்க, டாடா நிறுவனம் மறுப்பு தெரிவித்தால் மட்டுமே தயாநிதி மாறனை காப்பாற்ற
முடியும் என்று தி.மு.க., தலைமை கருதுகிறது.
மறுப்பு அறிவிக்கும்படி டாடா
நிறுவனத்திற்கு நிர்ப்பந்தம் செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும்,
பிரதமரிடமும் தி.மு.க., தலைமை கோரிக்கை வைத்தது. ஆனால், இரண்டு பேருமே கையை
விரித்து விட்டதாக டில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்த
நிலையில், தயாநிதி மாறன் தொடர்பான விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,
இதற்கு பிரதமர் பதில் சொல்லியாக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தேர்தல்
பிரசாரத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக அத்வானி போன்ற தேசிய
தலைவர்களும் இந்த கருத்தை வலியுறுத்தி வருவதால், டாடா விவகாரம் தேசிய பிரச்னையாக
உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியை ஆதரித்து பிரதமர் மன்மோகன்
சிங் இன்று திருச்சி மற்றும் சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும், நிருபர்கள் கண்டிப்பாக இந்த கேள்வியை
பிரதமர் முன் வைப்பது உறுதி.
அங்கே பேட்டியை தவிர்த்து விட்டாலும்,
பொதுக்கூட்டத்தில் டாடா விவகாரத்திற்கு பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்திற்கு
பிரதமர் தள்ளப்பட்டுள்ளார். காரணம், அவருக்கு தி.மு.க., தலைமை கொடுத்து வரும்
நெருக்கடி.
டாடா விவகாரத்தில் இதுநாள் வரை மவுனம் சாதித்த பிரதமர் சென்னையில்
மவுனத்தை கலைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டாடா நிறுவனத்தை வளைக்க
முயற்சி: தயாநிதி மாறன் மிரட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் சோனியா, பிரதமர்
ஆகியோர் சமாதான கருத்துக்களை கூறினாலும், அவை எடுபடுமா என்பது கேள்விதான். இதற்கு
டாடா நிறுவனத்திடம் இருந்தே மறுப்பு வர வேண்டும் என்று தி.மு.க., தலைமை
கருதுகிறது.
இதற்காக நிருபர்கள் கூட்டத்தை கூட்டி டாடா நிறுவனத்தினர்
பேட்டியளிக்க வேண்டும். அல்லது பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிட வேண்டும் என்று
நிர்ப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது.
இதில், டாடா நிறுவனத்தினருக்கும் பல்வேறு
தரப்புகளிலிருந்து நெருக்கடி கொடுத்து வருவதாக டில்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Source : http://www.dinamalar.com/2006may04/fpnews1.asp

Your team is doing good job.
Do you have any guess, " When do these newspapers come to normal stand"
Probably after Election?
By Sivabalan, at 5/04/2006 07:24:00 PM
சிவபாலன்,
தங்களின் அன்பிற்கு நன்றி.
இந்த அபத்தங்கள் தேர்தலுடன் முடிவுக்கு வரப் போவதில்லை. ஜனநாயகம் நீடிக்கும் வரை, பத்திரிகை சுதந்திரம் நீடிக்கும். அதற்குக் குந்தகம் வரும்போது, இது போன்ற அபத்தங்கள் நிறுத்தப் படலாம். அல்லது, இவ்வாறு அபத்தமாகச் செய்தி வெளியிடுவது அவமானகரமானது என்றொ, இப்படிச் செய்தி வெளியிட்டால், மக்கள் புறக்கணித்து விடுவார்களென்றோ ஒரு நிலை தோன்றினால், அப்போது இவை மட்டுப் படுத்தப் படும். தொடர்ந்து ஊடக விமர்சனங்களை மேற்கொள்வதால் நிலைமை மேம்படலாம்.
ஊடக விமர்சனக் குழு
Yes. I do agree.
I am really disappointed with the newspapers. It is my first experience to go thro the election coverage in newspapers. (In Previous elections I was not gone thro like this)
But, I am very much happy, that " Media Watch Team, at least, can raise their voice impartially against the newspapers which do ugly things.
Is there any possibility that Team like yours can come and do well in newspaper field? Do you have any long term plans to work on this.
I am sorry; if I have crossed any limits in comment, please ignore it.
By Sivabalan, at 5/06/2006 10:58:00 AM


தேர்தல் களம் இறங்கும்
வாரிசுகள்
அரசியல் தலைவர்கள் தங்களது வாரிசுகளையும் அரசியலில் களம் இறக்குவது என்பது இந்திய அரசியலில் வழக்கமான ஒரு விஷயம். இந்த அரசியல் பண்பாட்டுக்கு தமிழகமும் விதிவிலக்கு இல்லை.
நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத்
தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த
தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்
பிரமுகர்களின் வாரிசுகளுக்குத் தேர்தலில்
போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் திமுக
துணைப் பொதுச் செயலாளருமான மு.க.
ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவசர நிலை காலத்தில் "மிசா'வில் சிறையில் இருந்த அவர், சென்னை நகர மேயராகவும் இருந்திருக்கிறார். 30 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து
வருகிறார் அவர். திமுக ஆட்சிக் காலத்தில்
அமைச்சராக இருந்த மறைந்த அன்பில்
தர்மலிங்கத்தின் மகன் அன்பில் பெரியசாமி
திருச்சி-1 தொகுதியில் மீண்டும்
போட்டியிடுகிறார். இவரது சகோதரர் அன்பில்
பொய்யாமொழி மறைவுக்குப் பிறகு,
அன்பில் பெரியசாமி தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. திமுக
அமைச்சர் மறைந்த தங்கப்பாண்டியின் மகன் தங்கம் தென்னரசு அருப்புக்கோட்டையில்
போட்டியிடுகிறார்.
ஆலங்குளத்தில் வாக்கிங் செல்லும் போது
கொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை அருணா ஆலங்குளம் தொகுதியில்
திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் எம்பியாக
இருந்தவர் ஆலடி அருணா. திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரன்
வீரபாண்டி தொகுதியில் முதன் முறையாக
போட்டியிடுகிறார். மகனுக்காக வழக்கமான தமது
வீரபாண்டி தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்ட அவர், சேலம்-2 தொகுதியில் திமுக
வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமியின் மகள் கீதா ஜீவன், தூத்துக்குடித்
தொகுதியில் திமுக வேட்பாளராகப்
போட்டியிடுகிறார். நத்தம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலத்தின் மகன்
எம்.ஏ. ஆண்டி அம்பலம் திமுக வேட்பாளராகப்
போட்டியிடுகிறார். முன்னாள் எம்எல்ஏ
வீரணன் அம்பலத்தின் மகன் கே.வி.வி. ரவிச்சந்திரன் மேலூர் தொகுதியில் காங்கிரஸ்
வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
திமுக அமைச்சராக இருந்த என்.கே.கே.
பெரியசாமியின் மகன் ராஜா ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். மகனுக்கு வழிவிட்டு தந்தை தேர்தலில் ஓதுங்கிக்கொண்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து கொலை செய்யப்பட்ட சுதர்சனத்தின் மகன் கே.எஸ். விஜயக்குமார்
கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதையத் தேர்தலிலும் அவருக்கு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் சகோதரர்
வசந்தகுமார் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜன், ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் மகன் எம்.கே. விஷ்ணு பிரசாத், செய்யாறு தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிடுகிறார். தமிழ்நாடு
இளைஞர் காங்கிரஸ் தலைவர் இருந்தவர் இவர்.
நாடாளுமன்ற முன்னாள் காங்கிரஸ்
உறுப்பினர் இரா.அன்பரசின் மகன் அருள் அன்பரசு, வேலூர் மாவட்டம் சோளிங்கரில்
காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இதுபோல அரசியல் பிரமுகர்களின்
வாரிசுகள் அரசியலில் களமிறக்கி விடப்படும்போது, அக்கட்சிப் பிரமுகர்களுக்குக்
கொடுக்கப்படும் முக்கியத்துவம் வாரிசுகளுக்கும் கொடுக்கப்படுகிறது. சிலர், இடைவிடாத
தீவிர அரசியல் ஈடுபாட்டால் தங்களது தனித்தன்மை விளங்க பரிணமிப்பவர்களும் உண்டு. எனினும், ஆட்சிப் பதவிகளுக்கு குடும்ப வாரிசுகளைக் கொண்டு வரும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து சர்ச்சைக்கு உரிய விஷயமாகவே இருந்து வருகிறது.
பொன். தனசேகரன்
Source : http://www.dinakaran.com/epaper/2006/Apr/28/default.htm
இதில் என்ன ஆச்சரியம். தினகரன் கிட்டத்தட்ட திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ்போல இருந்தும் இந்த அளவுக்கு இருப்பதே ஆறுதலான விஷயம்தான். தினபூமி என்று ஒரு 'நடுநிலை' நாளிதழ் இருக்கிறதே தெரியுமா?. அதைவிட "நமது எம்ஜிஆர்" எவ்வளவோ தேவலாம் :-). இங்கே ஒரு விஷேசமான விஷயம், தமிழ் நாளிதழ்களில் முதன் முதலில் இணையத்தில் வெளிவந்தது தினபூமிதான்.
By Muthu, at 4/30/2006 12:35:00 PM
Good work Media Watch Team!! Keep up!!
//தினகரனின் சிறப்புப் பேட்டிகள்://
I have read Thirumavalavan & some one from ADMK also. Even Mathhaih(Correct me if I am wrong) MDMK also figured in this interview.
But It is obvious that Dinakaran is supporting DMK. And Dinamalar & Dailythanthi supports ADMK.
And, do you have any idea, " why the Dinakaran is not giving the sunday supplement " or "they are not posting it on Website".
By Sivabalan, at 4/30/2006 01:47:00 PM
தினபூமி நடுநிலை நாளிதழ் தானா என்பதை ஆய்வு செய்து தான் உறுதிப் படுத்த வேண்டும். தினபூமி மிகக் குறைந்த சர்க்குலேஷனைக் கொண்டிருப்பதாலும், அதன் செய்தி வெளியீட்டு முறை குறித்து குறிப்பிடத் தக்க விமர்சனங்கள் வராததாலும் இந்த ஆய்வில் நாங்கள் அதைச் சேர்த்துக் கொள்ள இயலவில்லை. தவிர, எங்களின் சக்திக்கு 4 நாளிதழ்களைத் தொடர்ந்து கவனித்து வருவதே மிகப் பெரும் சவாலாக இருக்கிறது. தினபூமி தான் இணையத்தில் பதிப்பை வெளியிட்டது என்பதை இப்போது தான் கேள்விப்படுகிறோம்.
ஊடக விமர்சனக் குழுவினர்.
ஆமாம். மாற்றுக் கட்சிகளின் கருத்துக்களுக்கும் திஅன்கரன் எப்போதாவது இடம் தந்து கொண்டு தான் இருக்கிறது. மதிமுக பிரமுகர் மல்லை சத்யாவைத் தான் மாத்தையா என்று நீன்க்கள் குறிப்பிடுகிறீர்கள் என்றூ நினைக்கிறோம். மாத்தையா, சிங்கள மொழியில் அதிகாரிகளைக் குறிப்பிடப் பயன்படுத்தும் விளிச் சொல். விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்து, பின்னாளில் கொல்லாப் பட்டவர் மாத்தையா.
தினகரன் ஏன் தனது ஞாயிறு பதிப்பை இணையத்தில் வெளியிடவில்லை என்று எங்களுக்குத் தெரியவில்லை.
ஊடக விமர்சனக் குழுவினர்
ஏப்ரல் 28ம் தேதியிட்ட தினமலர் இணையப் பதிப்பில், முதல் பக்கத்தில் முதல் செய்தியாக, மத்திய மந்திரி பதவியில் இருந்து தயாநிதி மாறனை டிஸ்மிஸ் செய்யக்கோரி, ஜெயலலிதா பிரதமருக்குக் கோரிக்கை விடுத்த செய்தியுடன் வெளியாகியுள்ள புகைப்படத்தில், மன்மோகன்சிங் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்புவது போல இருக்கிறது. ஆனால் உண்மையில் இக்குற்றச்சாட்டு உண்மையா என்று இன்னும் முழுமையான தகவல்கள் வெளிவராத நிலையில், இதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத விஷயத்தில் ரத்தன் டாடா பிரதமருக்குக் கடிதம் எழுதியதையும் இதனுடன் வெளியிட்டுள்ளது. கீழ்க்கண்ட சுட்டியில் இதைக்காணலாம்.
http://www.dinamalar.com/2006april28/frontpage.asp
தொடர்பே இல்லாத செய்திகளையும், வேறு ஏதோ ஒரு தருணத்தில் எடுத்த புகைப்படத்தையும் ஒன்றிணைத்து, தான் வெளியிடும், வெளியிட்ட செய்திகள் உண்மையே என்ற பிம்பத்தை மக்கள் மனதில் மறைமுகமாக உருவாக்கி வருகிறது தினமலர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நன்றி
கமல்
By கமல், at 4/30/2006 08:07:00 PM
This post has been removed by a blog administrator.
Hi everybody,
It's really unfortunate that we don't have daily magazine to publish news as news. All are publishing their illusion only except one or few news that benefits neither.
Thank you,
Pothigayan
By pothigayan, at 5/01/2006 11:15:00 PM
0 Comments:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home