Friday, April 07, 2006

பத்திரிகைகளும் அரசியல்கட்சிகளும் கூட்டணி

Day 7 April 07 2006

அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேரும் தமிழகப் பத்திரிகைகள்

கடந்த 7 நாட்களாக தமிழக அரசியல் கட்சிகளின் பிரசாரங்களை தமிழ் நாளிதழ்களில் பதிவு செய்யப் பட்ட விதத்தை ஆய்வு செய்ததில் ஒவ்வொரு பத்திரிகையும் ஏ தே னும் ஒரு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே செயல்பட்டு செய்திகளைப் பதிவு செய்து வருவது தெரிய வந்துள்ளது.
தினகரன் திமுக சார்பாகவும், தினத் தந்தி திமுக விற்கு எதிரான நிலைப்பாடும் அதே வேளை அதிமுக சார்பாகவும்; தினமலரும் தினமணியும் தலித், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு செய்திகளைப் பதிவு செய்து வருவதைக் கண்டு கொள்ள முடிந்தது. அரசியல் கட்சிகளுடன் அறிவிக்கப் படாத, எழுதப்படாத கூட்டணியை உருவாக்கிக் கொண்டு இந்தப் பத்திரிகைகள் மக்களுக்கு எதிராகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நிதர்சனமாகக் கண்டுணர்ந்திருக்கிறோம், informed decision என்ற முடிவை எடுக்க இவை ஒரு போதும் மக்களுக்கு உதவவில்லை என்ற குறிப்புடன், இன்றைய ஆய்வைப் பார்ப்போம்.
இன்று (ஏப்ரல் 7 2006) குறைந்தது மூன்று செய்திகளை, ஆய்வுக்குட்படும் 4 தமிழ் நாளிதழ்களுமே வெளியிட்டுள்ளன:
அவை : பா ஜ க வின் தேர்தல் அறிக்கை, ஆண்டிப்பட்டியில் கார்த்திக் போட்டியிட, அகில இந்திய பார்வார்ட் பிளாக் யோசனை, 10 தொகுதிகளுக்கு இ கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, என்பவையே அந்த செய்திகள்.
2 ரூபாய்க்கு ரேஷன் அரிசி என்பது மக்கள் காதில் பூ சுற்றும் முயற்சி என்று ஜெயலலிதா பேசிய பேச்சு, தினத் தந்தியில் 3 ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தியை, வேறு எந்த தமிழ் நாளிதழும் வெளியிடவில்லை.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா குறித்து கருணாநிதி அளித்துள்ள புகாருக்கு, நரேஷ் குப்தா அளித்துள்ள பதிலை, தினகரன் தவிர பிற மூன்று நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன (தந்தி ப.7, மலர் ப 5, தினமணி ப 5).
கேபிளையாவது ஒழுங்காக் கொடுக்க முடியுமா (திருச்சி கூட்டத்தில் வைகோ பேச்சு) என்று வைகோ எழுப்பியுள்ள கேள்வி தினமலரில் மட்டும் (ப.4) வெளியாகியுள்ளது.
விஜயகாந்தின் தே முதிகவின் இறுதிப் பட்டியல் குறித்த செய்தியும், பட்டியலும் தினகரன் தவிர்த்த அனைத்துப் பத்திரிகைகளிலும் (தினத் தந்தி ப. 10, மலர் ப.16, தினமணி ப. 9) வெளியாகியுள்ளது.
மதுரையில் ஜெயலலிதாவும், திருமாவளவனும், வைகோவும் இணைந்து ஒரே மேடையில் பேசுவதாகத் திட்டமிடப் பட்டிருந்தது. இத் திட்டம் பின்னர் கைவிடப் பட்டது என்ற செய்தி, தினகரனிலும் (ப.6), தினமலரிலும் (ப.17) வெ ளி யாகியுள்ளது.
மீண்டும் அதிமுக ஆட்சியில் அமர்த்தப் பட்டால், கேபிள் ஒழுங்கு முறைச்சட்டம் கொண்டு வரப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ள செய்தி தினகரனில் மட்டும் வெளியிடப் படவில்லை (தந்தி, ப.1, மலர் ப.20, தினமணி ப.9).
பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய உச்ச நீதி மன்றம் தடை, ஜெயலலிதா புகாருக்கு தேர்தல் கமிஷன் பதில் என்ற செய்தி, தினகரனில் முதல் பக்கத்தில், லீட் ஸ்டோரியாகவும், தினமணியிலும் முதல் பக்கத்தில் லீட் ஸ்டோரியாகவும் வெளிவந்துள்ளது. தினத் தந்தியும், தினமணியும் இச்செய்தியை வெளியிடவில்லை.
"தேர்தல் பிரசார நேரத்தைக் குறைத்து தேர்தல் ஆணையம் பிரப்பித்த உட்தரவுக்கு உள் நோக்கம் கற்பித்து ஜெயலலிதா பொய் பிரசாரம் செய்கிறார். எனவே, தேர்தல் ஆணையம் அந்த உத்தரவை பிறப்பித்க்ததற்கான கரணங்கள், சூழ்நிலைகளை விளக்கி உடனடியாக பதில் அளிக்க வேண்டும், என்று கோரி தலைமைத் தேர்தல் அணையருக்கு த்முக தலவர் கருணாநிதி எழுதிய கடிதம் பற்றிய செய்தி, தினமணி தவிர பிற நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.
இலவச டி வி கட்டாயம் தருவோம், என்று கருணாநிதி சென்னை புரசைவாக்கக் கூட்டத்தில் பேசிய செய்தி மீண்டும் வேறு வடிவில், தினகரனில் 16 ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தவிர, புதன் கிழமை நடந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் பிரச்சாரத் தொடக்க விழாவில் பேசிய தலைவர்களின் உரையையும் தினகரன் தனித் தனியாகவும் விரிவாகவும் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் பேச்சும், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாகிருல்லாவின் பேச்சும் சுருக்கமாக தனித் தனியாக வெளியிடப் பட்டுள்ளன (ப. 7).
படுகொலை செய்யப் பட்ட அதிமுக தொண்டருக்கு ரூ ஒரு லட்சம் ஜெயலலிதா அறிவுப்பு என்ற செய்தி, தினத்தந்தியில் மட்டும் (ப.8) இடம் பெற்றுள்ளது.
மருத்துவ சவர தொழிளாலர் ஒருங்கிணைப்பாளர்களின் அறிக்கை, தினத்தந்தியில் மட்டும் (ப. 12) இடம் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் மத்த்டியில், வேட்பாளர் தேர்வு குறித்த அதிருப்தி நிலவுவதாக, தினமலர் லீட் ஸ்டோரி வெளியிட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் 16 இடங்களில் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக ஒரு செய்தி தினமலரில் மட்டும் (ப.15) வெளியாகியுள்ளது.
தென்காசி தொகுதி விடுதலைச் சிறுத்தைகளின் செயல்வீரர்களின் கூட்டம் பற்றிய செய்தி, தினமலரில் 12 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இச்செய்தி வேறு எந்தப் பத்திரிகையிலும் இடம் பெறவில்லை.
கழுகுமலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்ததாக, தினகரனில் 2ஆம் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
ராமதாஸின் 16 நாள் பிரச்சாரத் திட்டம், தினகரனில் மட்டும் வெளியாகியுள்ளது (ப. 7).
தினத்தந்திக்கும், தினமலருக்கும் கொடுக்கப்பட்ட விளம்பரத் தொகை எவ்வளவு? 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு என்ற செய்தி, தினகரனில் மட்டும் (ப,14) வெளியாகியுள்ளது.
விஜயகாந் தேர்தல் அறிக்கை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7 அன்று ) வெளியாக்ப் போவதாக தினமணியில் மட்டும் (ப.1) செய்தி வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா, வைகோ ஆகிய இருவரின் பிரச்சார பாணியை ஒப்பிட்டு, அலசி ஆராய்து, தினமணி ஒரு செய்திக் கட்டுரையைல் வெளியிட்டுள்ளது (ப.10) .
இலவச கலர் டிவியைக் கட்டுப் படுத்த முடியாது என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா சொன்னதாக தினமணியில் மட்டும் (ப.7), செய்தி வெளியாகி உள்ளது.
முதல் வார அலசலின் இறுதியில் தமிழ்ப் பத்திரிகைகள் குறித்த ஏமாற்றமும், வெறுப்புமே மிஞ்சுகிறது என்ற குறிப்புடன் இன்றைய ஆய்வை நிறைவு செய்கிறோம். மீண்டும் நாளைய ஆய்வுடன், சந்திப்போம்,
கலா,
ஊடக விமர்சனக் குழுவிற்காக.

4 comments:

Unknown said...

I guess you students are trained in research methods.What is your research methodology here?Are you doing any sort of coding or centent analysis?How many pages of each news paper has PRO DMK news and how many are written with pro admk news?

What is your benchmark of an ideal newspaper?Without having any control group how are you going to make comparisions?What are the standards to which you are comparing each newspaper to?

If I were to conduct this analysis I would do something like this.

1)Pick up a control newspaper.Lets say dinamani.
2)I will see how many pages of dinamani has pro admk news and dmk news.Let us say on a given day 60% of dinamani's space has pro admk news and 40% has pro dmk news.
3)I will compare this with dinakaran and dinamalar.Let us say we find dinakaran has 80% pro dmk news and dinamalar has 90% pro admk news.
4)Then I will say dinamalar and dinakaran is biased.
5)If you do this analysis properly this can become a very good journal article or a good conference paper.

Please refer to the following research work as of how to do a content analysis of newspapers

Semetko1 and Valkenburg1 (2000)"Framing European politics: a content analysis of press and television news"The Journal of Communication Volume 50 Issue 2

Unknown said...

The problem with your current research work is as follows

1.You are making conclusions and interpretations while data collection and analysis is still going on.Today you have have reached the conclusion that 'Dinakaran is biased towards DMK and dinamalar is biased towards ADMK". And tomorrow you will be doing further data collection.With this sort a bias if you do data collection and interpretation,that would cast a doubt on the integrity of your research report.

2.In any research report interpretation should follow data collection and analysis and implications should be made after interpretation.But you are doing interpretation and analysis while the data collection is still going on.If I were a reviewer I would reject yoor project for this reason alone.

3.If you are writing this blog for fun I wouldnt have bothered.But if you want to get this research published in a journal or make it a conference paper,this is not the way to do it.

Arulselvan said...

செல்வன்,
உங்களின் விமர்சனத்திற்கும், யோசனைகளுக்கும் எங்களின் நன்றி. ஆய்வைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, முடிவுகளை எட்டுவது தவறானது, ஆபத்தானது என்பதைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இந்தக் கேள்வி எங்கள் குழுவிலும் எழுப்பப்பட்டது. ஆனால், எங்களின் நோக்கம், 4 நாளிதழ்களையும் அன்றாட அடிப்படையில் விமர்சித்து வருவது. பிரச்சாரம் முடியும் வரை ஒவ்வொரு நாளும் விமர்சித்து அவற்றை அன்றாடம் வெளியிடுவது என்றும் தீர்மானித்திருக்கிறோம். இவ்வாறு சேகரிக்கப் பட்ட தரவுகளைக் கொண்டு. பின் ஆய்வுக் கட்டுரையை நாங்கள் உருவாக்க முற்படுவோம். என்றாலும், முடிவுரைகளை எழுதுவது சரியல்ல என்ற முடிவை ஏற்று, இனி தரவுகளை மட்டும் முன் வைத்து, முடிவு செய்யும் பொறுப்பை, இந்தப் படைப்புக்களை வாசிப்பவரே எடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடுவோம்.
செல்வன், உங்களின் கருத்துரைக்கு மீண்டும் எங்களின் நன்றி.
ஊடகக் கண்காணிப்புக் குழுவினர்.

Arulselvan said...

Selvan,
We are thankful to you for your criticism. We just went through the material you had cited, which is available at http://joc.oxfordjournals.org/cgi/reprint/50/2/93 was very useful and interesting too. For the Final Year students of Communication, this would be a very useful reading material. Meanwhile, can we establish contact with you to discuss on this blog further. We could not locate your email id, and hence we request you to kindly contact us at our group email id: mediawatch06@yahoo.co.in

With warm regards,
Media Watch Team