Saturday, April 15, 2006

வானொலி இல்லாத கடைசித் தேர்தல்

தமிழகத்தில் ஒலிபரப்பாகி வரும் வானொலிகள் எது வுமே இந்தத் தேர்தலில் முழுமையாகப் பங்கேற்கவில்லை. என்றாலும், வானொலியின் முழுமையான பங்கேற்பு இல்லாமல் நடக்கும் கடைசிப் பொதுத் தேர்தல் இதுவாகத் தான் இருக்கும் என்று கூற முடியும்.

அகில இந்திய வானொலி நிலையங்கள் தமிழகத் தேர்தலில் இருந்து தங்களை முழுதும் விலக்கிக் கொண்டு. பாகிஸ்தானிலோ, பூட்டானிலோ, அல்லது நமது நாட்டுடன் தொடர்பில்லாத ஒரு தேசத்திலோ இருந்து இயங்குவது போல ஒதுங்கி நிற்கின்றன. மிகப் பெரும் ஜனநாயகத் திருவிழாவான தேர்தலில் இருந்து எப்படி அகில இந்திய வானொலி ஒதுங்கிக் கொள்ள முடியும்?

காலையில் 645 மணிக்கு ஒலிபரப்பாகும் செய்திகளில் ஒரு சில செய்திகள் தேர்தல் தொடர்பாக இடம் பெற்று வருகிறது. அடுத்து 715 டில்லி செய்தி அறிக்கை. பிற்பகலில் 12.40 தமிழ் செய்தி அறிக்கை. 1.45 மாநில தமிழ் செய்தி அறிக்கை. மாலையில் 630 செய்தி அறிக்கை என்று ஒரு நாளைக்கு மொத்தம் 50 நிமிடங்களே தமிழில் செய்திகள் ஒலிபரப்பாக்கின்றன. இதில் எல்லா செய்திகளுடனும் தேர்தல் செய்திகளும் இடம் பெறுகின்றன. இனி ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியும் தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என்று தினமும் 10, 20 நிமிடங்கள் வரை ஒதுக்கப் படும். அவ்வளவுதான்.
திருநெல்வேலிக்கு சில தினங்கள் முன்பு ஜெயலலிதா வந்தார். உள்ளூர் பத்திரிகைகள் எல்லாம் அவர் பேச்சை விரிவாக படத்துடன் வெளியிட்டன. ஏராளமாக விளம்பரங்களும் வெளியிடப் பட்டன. ஒரு பெரிய அரசியல் தலைவர் மாநகருக்கு வருகிறார் என்பது இங்குள்ள ஊடகங்களுக்கு கொண்டாட்டம், திருவிழா. ஆனால், திருநெல்வேலி வானொலி நிலையமோ, எதுவுமே நடக்காதது போல தன் வழக்கமான நிகழ்ச்சிகளை மட்டுமே ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. இதற்கு இங்குள்ள பொறுப்பாளர்களே காரணம் என்று நாங்கள் சொல்லவரவில்லை. அகில இந்திய வானொலியின் தேசிய அளவிலான கொள்கை முடிவுகள், மக்கள் விரோத மனப்பான்மை ஆகியவையே காரணம்.

விரைவில் தனியார் பண்பலை ஒலிபரப்புகள் செய்தியை ஒலிபரப்ப அனுமதி பெற்று விடும். அவ்வாறு அனுமதி பெற்றதும், வானொலி நிலையங்கள் தமது அரசியல் சார்பு நிலைக்கேற்ப தலைவர்களின் பேச்சுக்களை நேரடியாக ஒலிபரப்பு செய்யத் தான் போகின்றன. அதன் பின்பு, இந்திய வானொலியும் ஏதாவது செய்யத் தான் போகிறது. அந்தச் சூழலில், வானொலி தேர்தலில் முழு வீச்சில் பங்கேற்றுத் தான் தீர வேண்டும். ஏற்கனவே சன் நியூஸ் தொலைக்காட்சி, தினமும் இரவில் திமுக தலைவர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது. இவ்வாறு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட உரைகள் நேரடியாக ஒலிபரப்பப் படுவது ஒரு முக்கிய வளர்ச்சியாகத் தான் கருதப் படும்.

13 4 2006 அன்று புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளாக திருநெல்வேலியில் உள்ள அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய சில நிகழ்வுகளைக் கவனியுங்கள்:

காலை 830 மணிக்கௌ நடிடக் மனோரமாவின் சிறப்பு நேர்முகம்
பகல் 11 மணிக்கு பின்னணிப் பாடகர் மாணிக்க விநாகத்துடன் ஒரு சிறப்பு நேர்முகம்

பிற்பகல் ஒரு மணிக்கு பரத்வாஜுடன் நேர்முகம்

பிற்பகல் 3 மணிக்கு விக்ரம் நேர்முகம்

இரவு 8 மணிக்கு தேவயானியின் நேர்முகம்

இரவு 930 க்கு பா விஜய் நேர்முகம்

காலை முதல் இரவு 10 மணி வரை இடைப்பட்ட நேரங்கள் பலவற்றில் திரையிசைப் பாடல்கள் ஒலிபரப்பாகும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.

இவற்றைப் பார்க்கும் போது இவை யாவும் சூரியன் எப் எம் மில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் போலத் தான் தோன்றும்.. இவை யாவுமே இந்திய அரசுக்குச் சொந்தமான, மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அகில இந்திய வானொலியில், ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் அறிவிக்கப் பட்டு வேட்பு மனு தொடங்கிய நாளில், ஒலிபரப்பான நிகழ்ச்சிகளாகும்.
இது நியாயமா? தர்மமா? இது அறத்தை மீறிய செயல் ஆகாதா? எப்படி இவ்வாறு வெட்கமில்லாமல் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்ய முடிகிறது என்று எண்ணியபோது எங்களுக்குக் கோபம்தான் வந்தது.

இந்தக் குறிப்புடன் இன்றைய நாளிதழ்களை அலசுவோம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் என் வரதராஜனின் சிறப்புப் பேட்டி, இன்றைய தி இந்துவில், 4 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது. தி இந்து, தினம் ஒரு தலைவரிடம் பேட்டி கண்டு வெளியிட்டு வருகிறது. பேட்டி காணப் படும் நபர்களைத் தெரிவு செய்வதிலும், கேட்கப் படும் கேள்விகளும், அவற்றை வெளியிடும் நேர்மையும், தமிழ் நாளிதழ்களில் தினமணியைத் தவிர பிற எதிலும் காண இயலாதவை.

ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா இன்று மனு தாக்கல்
தினமணியின் அறிக்கையிடல் பிற 3 நாளிதழ்களை விட நன்று
ஆண்டிப்பட்டியில் ஜெ இன்று வேட்பு மனு தாக்கல் என்ற செய்தி இன்று பல நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது. தினமணி இந்தச் செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின் கடைசிப் பத்தியில், கருணாநிதி, ஏப்ரல் 17 அன்று சேப்பாக்கத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கிறார் என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது. மனுத் தாக்கல் ஏப்ரல் 20 ஆம் நாளில் நிறைவடைவதையும் இந்தச் செய்தி குறிப்பிடுகிறது. தினத் தந்தியும், தினகரனும் இதே செய்தியை லீட் ஸ்டோரியாக்கியுள்ளன. என்றாலும், தினமணி தந்துள்ள கருணாநிதி பற்றிய குறிப்புகள் அந்த 2 இதழ்களிலும் இடம் பெறவில்லை. எனினும், தினத் தந்தி, ஆண்டிபட்டி தேர்தல் அதிகாரி யார் என்பது பற்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறிட்த்கும் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளது. தினமலர் இந்தச் செய்தியை முதல் பக்க பெட்டிச் செய்தியாக வெளியிட்டுள்ளது தினகரன், தினத் தந்தி செய்திகளுக்கும், தினமலர் செய்திக்கும் வித்தியாசம் எதுவுமில்லை. என்றாலும், ஆண்டிப் பட்டியில் இரண்டாம் முறையாக ஜெயலலிதா போட்டியிடுகிறார் என்ற கூடுதல் தகவலியும், தினமலர் வெளியிட்டுள்ளது.

ஆதாரமில்லாத தினமலரின் லீட் ஸ்டோரி

15 4 2006 சனிக்கிழமைல் தினமலர் நாளிதழின் லீட் ஸ்டோரியாக, கருத்துக் கணிப்பு முடிவுகளால் அதிமுக, திமுக, கலக்கம், பிரசாரத்தை தீவிரப் படுத்த இரண்டு அணிகளும் திட்டம் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. ஒரு செய்தி என்பதற்கு உரிய எந்த உட்கூறும் இந்தச் செய்தியில் காணப் படவில்லை.
2 அணிகளும் தி இந்து நாளிதழின் கருத்துக் கணிப்பைப் பார்த்துக் கலக்கம் அடைந்திருப்பதாகக் கூறும் இந்தச் செய்தி இதற்கு ஆதாரமாக எதையும் முன் வைக்கவில்லை. தவிர, 8 பாராக்களில் விவரிக்கப் பட்டுள்ள இந்தச் செய்தியில், 7 பாராக்கள், இதுவரை தேர்தல் களத்தில் என்னென்ன நடந்துள்ள என்ற முன்கதைச் சுருக்கத்தைத் தான் வெளியிட்டிருக்கிறது.
பிரசாரத்தை தீவிரப் படுத்த இரண்டு அணிகளும் திட்டம் என்று சொல்லும் இந்தச் செய்தி, இதற்கும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. கலக்கம் அடைந்ததாகக் கூறுவதோ, பிரச்சாரம் தீவிரப்படுத்தப் பட இருப்பதாகக் கூறுவதோ, தினமலர் "சிறப்பு நிருபரின்", கற்பனையன்றி வேறில்லை என்ற முடிவுக்கு ஒரு வாசகன் எளிதில் வந்து விடும் ஆபத்து இதில் இருக்கிறது.

தலித் அரசியலைத் தவறாக அணுகுவதில் தினமணியும் விதிவிலக்கல்ல

விடுதலைச் சிறுத்தைகள் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்வுகளில் நடந்து கொண்ட விதம் இன்று தினமலரிலும், தினமணியிலும் செய்திகள் இடம் பெற்றுள்ளன. தலித் அரசியல் இயக்கங்கள் பற்றிய செய்திகள் இது போன்ற பிரச்னை ஏற்படும் வேளைகளிலும், திமுகவையோ அதிமுகவையோ ஆதரித்தோ, எதிர்த்தோ பேசும்போது, அந்தந்த சார்புடைய பத்திரிகைகள், தத்தமது வசதிக்கேற்ப செய்திகளை வெளியிடுகின்றன. இதில் தினமணி உட்ப. 4 நாளிதழ்களுமே ஒரே விதமாகத் தான் நடந்து கொள்கின்றன.

திருமாவளவனின் பெயரை சரியாக வெளிய மறுக்கும் தினமலர்
திருமாவளவனின் பேச்சை தினமலர் 6ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "அதிமுகவுக்கு வரும் கூட்டத்தால், கருணாநிதி கலக்கம்: திருமாவளவன் என்ற தலைப்பில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. திருமாவளவன் பெயரை தொல். திருமாவளவன் என்று எழுதுவது தான் சரியாகும். ஆனால், தினமலர் செய்தியில் திருமாவளவன் என்றே குறிப்பிடப் படுகிறது. தினமணி தொல் திருமாவளவன் என்றே ஒவ்வொரு முறையும் அவர் பெயரை வெளியிடுகிறது. பிற நாளிதழ்கள் எவ்வாறு அவர் பெயரை வெளியிட்டு வருகின்றன என்பதை இனி வரும் நாட்களில் கவனிப்போம்.

ஒரு கருத்துக் கணிப்பு : இரண்டு மாறுபட்ட பார்வைகள்:

தி இந்து நாளிதழும், சி என் என் - ஐ பி என் தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு குறித்து தினமலர், "ஜெயலலிதாவே முந்துகிறார்", என்ற தலைப்பில் 8ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. தினகரன், "மதிமுகவினர் பாதி பேர் திமுகவுக்கு வாக்கு -இந்து கருத்துக் கணிப்பில் தகவல்", என்ற தலைப்பில் 16 ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசியத் தலைவரது பேச்சை இருட்டடிப்பு செய்யும் 3 முக்கிய பத்திரிகைகள்

இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மதுரையில், தே மு கூ வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பேச்சு, தினமணியில் 4 ஆம் பக்கத்தில் படத்துடன் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியை பிற 3 நாளிதழ்களும் இருட்டடிப்புச் செய்திருக்கின்றன. ஒரு தேசியக் கட்சியின் தேசியத் தலைவரது தேர்தல் பிரச்சார உரையை 3 முக்கிய தமிழ் நாளிதழ்கள் வெளியிட மறுப்பதை எப்படி ஆரோக்கியமான ஒரு செயலாகக் கொள்வது?

ஸ்டாலின் பேச்சுக்கு 4 நாளிதழ்களுமே முக்கியத்துவம்:

15 4 2006 நாளிட்ட நாளிதழ்களில் ஸ்டாலினின் தென் மாவட்டத்துப் பிரச்சார உரைகள் விரிவாக இடம் பெற்றுள்ளன. 4 நாளித்ழ்களும் ஸ்டாலின் பேச்சை விரிவாகவே வெளியிட்டு வருகின்றன. இன்று 4 நாளிதழ்களிலும் இடம் பெற்றுள்ள ஸ்டாலினின் பேச்சுக்களின் பட்டியலைப் பாருங்கள்:
மு க ஸ்டாலின் ஆலங்குளத்தில் "கேபிள் டிவியுடன் இலவச கலர் டிவி: மு க ஸ்டாலின் பேச்சு", என்ற தலைப்பில் தினமணியில் 4 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. கோவில்பட்டியில் பேசிய பேச்சு, தினமணியின் 5 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

மேலப் பாளைய பேச்சு, தினமணியின் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் மாலை ராஜாவை ஆதரித்துப் பேசிய பேச்சு, தினமணியில் 7ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

மாலை ராஜாவை ஆதரித்துப் பேசிய பேச்சு தினகரன் ப.3

அரியலூரில் வைகோ பிரச்சாரம், தினத் தந்தி ப.9

ஸ்டாலின் ஓட்டப் பிடாரம் பேச்சு, தினமலர், ப.9

நெல்லையில் ஸ்டாலின் பிரச்சாரம், தினமலர், ப.14

நெல்லை மாவட்டத்தில் ஸ்டாலின் பிரச்சாரம், தினத் தந்தி ப.9

ஸ்டாலின் ஓட்டப் பிடாரம் பேச்சு, தினமலர், ப.9

நெல்லையில் ஸ்டாலின் பிரச்சாரம், தினமலர், ப.14

ஸ்டாலினுக்கு அடுத்து மிக முக்கியத்துவம் தரப்பட்டிருப்பவர் கருணாநிதி. அதை அடுத்து ஜெயலலிதாவின் பேச்சுக்களும், வைகோவின் பேச்சுக்களும் இடம் பெற்றுள்ளன. தவிர, பல தரப்புத் தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவைகளில் பெரும்பாலனவற்றைப் பதிவு செய்ய வெண்டும் என்ற முனைப்பு தினமணியிடம் மட்டுமே தெரிகிறது. வெளியான செய்திகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது இந்த முடிவுக்கு வரமுடியும். இதோ இன்று இடம் பெற்றுள்ள தலைவர்களது உரைகள் பற்றிய பட்டியல்:

கருணாநிதி

நாகை மாவட்டம், கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய இடங்களில் திமுக தலைவர் கருணாநிதி பேசிய பேச்சுக்கள் தினமணியில் 7 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
சிதம்பரத்தில் கருணாநிதி பேச்சு, தினமணி ப.9
சிதம்பரத்தில் கருணாநிதி பேச்சு, தினகர்ன் ப. 16 (8 காலம் வண்ணப் படத்துடன் )
கருணாநிதி கடலூர் பேச்சு தினகரன் 7 ஆம் பக்கம்
கருணாநிதி கடலூர் பிரச்சாரம், தினத் தந்தி ப.4
கருணாநிதி சிதம்பரத்தில் பேசியது, தினமலர். ப.16

வைகோ
வைகோ அரியலூரில் பேசிய பேச்சு தினமணியில் 5ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
வைகோ நாளை முதல் சென்னையில் பிரச்சாரம், தினத் தந்தி. ப. 3
வைகோ கடலூர்ப் பேச்சு, , தினமலர் ப.16

ஜெயலலிதா
தேவாரத்தில் ஜெயலலிதா பிரச்சாரம், தினத் தந்தி ப.8
சின்னமனூரில் ஜெயலலிதா பேச்சு தினத் தந்தி ப.18

பிற தலைவர்களது பேச்சுக்கள்:
வீரமனி பேட்டி, தினகரன் 7ஆம் பக்கம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் சிறப்புப் பேட்டி, தினகரனில் 8 ஆம் பக்கம்
விஜயகாந்த கோவில் பட்டி பேச்சு, தினகரன், ப.2
மைலாப்பூரில் ப சிதம்பரம் பேச்சு, தினமணியில் 8ஆம் பக்கம்
புதுச்சேரியில் ராம்தாஸ் தினமணிக்கு சிறப்புப் பேட்டி,தினமணி ப.8
ராமநாதபுரத்தைல் கார்த்திக் பேச்சு, தினமணி ப. 8
ஜனதாக் கட்சித் தேர்தல் அறிக்கை தினமணியில் 7ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை, தினத் தந்தியில், ப.3
சுப்ரமணியசாமி பேட்டி தினகரன் 7ஆம் பக்கம்
பா ஜ க தலைவர் சி பி ராதாகிருஷ்ணனில் சிறப்புப் பேட்டி, தினமணியில் 9ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூரில் திருமாவளவன் பேச்சு, தினத் தந்தி ப.18
பாஜகவின் 3 வது பட்டியல் வெளியாகியிருப்பது பற்றிய செய்திகள் பரவலாக இடம் பெற்றுள்ளன. அம்பேத்கரின் பிறந்த நாள் நிகழ்வ்யுகளும்., வை பாலசுந்தரத்தின் பேட்டியும் இன்றைய இதழ்களில் இடம் பெற்றுள்ளன.

No comments: