Wednesday, April 12, 2006

செய்தித்தாள்களில் சமூகநீதி இல்லையா?

அம்பேத்கர் மக்கள் கட்சி வேட்பாளர் பட்டியல் பற்றிய செய்தி தினத்தந்தி தவிர பிற 3 இதழ்களில் இடம் பெறவில்லை. செய்தித் தாள்களில் சமூக நீதி அக்கறையுடன் செய்தி வெளியிடும் சூழல் தமிழகத்தில் இல்லையோ என்ற ஐயம் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கப் படும் என்று ஜெயலலிதா காயல்பட்டினத்தில் பேசிய பேச்சு, தினமலரில் மட்டும் இடம் பெற்றுள்ளது. தினத்தந்தியிலும், தினமணியிலும் ஜெயலலிதா காயல்பட்டினத்தில் பேசியதாக புகைப்படம் மட்டும் இடம் பெற்றுள்ளது. தினகரனில் செய்தியுமில்லை, புகைப்படமுமில்லை.

வேட்பாளர்களின் சொத்து விவரத்தை இணைய தளத்தில் வெளியிட தேர்தல் கமிஷன் முடிவு செய்திருப்பதாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள அறிவிப்பு, தினத்தந்தி தவிர பிற நாளிதழ்களில் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரின் சொத்து விவரத்தையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்காளருக்கும் கிடைக்கவிருப்பதற்கு, நவீன இணைய வசதிகளே காரணம்.
ஜெயலலிதா ஆட்சியில் சாதனை இல்லை வேதனை தான் மிச்சம் என்ற ராமதாசின் மேட்டூர் பேட்டி, தினமலரில் 6 ஆம் பக்கத்திலும், தினகரனில் 6 ஆம் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளன. தினமணியிலும், தினத்தந்தியிலும் இச்செய்தி இடம் பெறவில்லை.

ஊடகத்துறையில் ஏகபோகம், கலைஞர் மீது வைகோ புகார் என்ற செய்தி தினமணியிலும் (ப 6), தினத் தந்தியிலும் (ப.3) இடம் பெற்றுள்ளன. தினகரனிலும், தினமலரிலும் இச்செய்தி இடம் பெறவில்லை.

கூட்டமில்லாததால், ஜெயலலிதா 3 நிமிடத்தில் பிரச்சாரத்தை தூத்துக் குடி மாவட்டத்திலுள்ள தட்டார்குடியில் முடித்துக் கொண்டார் என்ற செய்தி தினகரனில் 4ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இச்செய்தியை உறுதி செய்து கொள்ள வழி இல்லை. பிற 3 நாளிதழ்களுமே இத் தகவல் கொண்ட செய்தியை வெளியிடவில்லை.

தேர்தல் விதியை மீறி ஜெயலலிதா பிரச்சாரம் செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தேர்தல் கமிஷனில் புகார் செய்திருப்பதாக ஒரு செய்தி, தினகரனில் 2ஆம் பக்கத்திலும், தினமணியில் 3ஆம் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளன. இச்செய்தியை தினமலரும் திஅந்தந்தியும் வெளியிடவில்லை. அதிமுகவுக்கும் ஜெயலலிதாவிற்கும் ஆதரவு அளித்து அவரது பிரச்சார செய்திகளை முழுமையாக வெளியிட்டு வரும் தினமலரும் திஅந்தந்தியும், ஜெயலலிதாவிற்கு இடையூற் தரும் செய்திகளை வெளியிடுவதில்லை என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றன என்பதற்கு இச் செய்தி மேலும் ஒரு சான்றாக அமைகிறது.
இன்று (12 4 2006) நான்கு நாளிதழ்களிலும் இடம் பெற்றுள்ள ஒரே செய்தி மயிலாப்பூரில் தி மு க வேட்பாளர் நெப்போலியனை ஆதரித்து தி மு க தலைவர் கருணாநிதியின் பேச்சு மட்டுமே ஆகும்.

பனைத் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைப்பதாக ஜெயலலிதா உடன்குடியில் பேசிய பேச்சு தினகரனில் இடம் பெறவில்லை.

ஜெயலலிதா கூடங்குளம், செட்டிகுளம் பகுதி களில் பேசிய போது அறிவித்த திட்டங்களை தினத் தந்தி முழுமையாக வெளியிட்டுள்ளது. மற்ற 3 நாளிதழ்களும் அவற்றைச் சுருக்கமாக வெளியிட்டுள்ளன.

இரண்டு ரூபாய்க்கு அரிசியும், இரண்டு ஏக்கர் நிலமும் வழங்குவது சாத்தியம் என்று காரைக்குடியில் ப. சிதம்பரம் பேசிய பேச்சு, தினமலரில் 17 ஆம் பக்கத்திலும், தினகரனில் 6ஆம் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. தினத் தந்தியும், தினமணியும் இச்செய்தியை வெளியிடவில்லை.

பொன்னேரியில் திமுக இளைஞர் அணிச் செயலரான ஸ்டாலினின் பேச்சு, தினகரனில் 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சுரங்க ரயில் பற்றிய செய்தி தினமணியில் மட்டும் (ப.4) இடம் பெற்றுள்ளது.
ஜெயலலிதா முரணான தகவல்களை வெளியிடுவதாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை, தினமணியில் மட்டும் இடம் பெற்றுள்ளது.

என் தைரியத்துக்கு ஓட்டுப் போடுங்கள் என்ற விஜயகாந்தின் பேச்சு, தினமலர் (ப.3) இதழில் இடம் பெற்றுள்ளது.
மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூக்கிய தலைவர்களில் ஒருவரான ஜி கே வாசனின் சிறப்புப் பேட்டி தினகரனில் 8 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. தினகரன் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்புப் பேட்டிகளை வெளியிட்டு வருகிறது. ஸ்டாலின், நல்ல கண்ணு, மல்லை சத்திய என்ற வரிசையில் இன்று இடம் பெற்றிருப்பது வாசன். ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை எதிர்த்து நிற்கும் ஜனநாயக மக்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்க்ளது பேட்டியும் இப்பகுதியில் இடம் பெற்றால், பேட்டிக்குரியவர்களைத் தெரிவு செய்வதில், தினகரன் பக்கச் சார்பில்லாமல் நடந்து கொள்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்.

பன்னிரண்டு நாட்கள் ஆய்வு செய்து விட்ட நிலையில் நாம் சில கருது கோள்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.


கருதுகோள் #1 :
தினகரன் திமுக கூட்டணிச் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. என்றாலும், திமுக தலைமைக்கும் கலைஞர் குடும்பத்தினருக்கும்
தரப்படும் முக்கியத்துவம், பிற கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடையாது. ஜெயலலிதாவை விமர்சிக்க முற்படும் செய்திகளுக்கும் முன்னிரிமையை தினகரன் தருகிறது. வைகோவின் பிரச்சாரத்திற்கு தினகரனில் இடமில்லை.

கருதுகோள் #2.

தினமலர், வைகோவின் ஊதுகுழலாக விளங்குகிறது. விஜயகாந்திற்கு தினமலர் உரியதற்கும் அதிகமான இடத்தை ஒதுக்குகிறது. ப ம க தொடர்பான எதிர்மறையான செய்திகளுக்கு தினமலரில் இடமுண்டு.
ராமதாசின் பேட்டிகளுக்கு தினமலரில் இடமில்லை.

கருதுகோள் #3:

தினத் தந்தி, ஜெயலலிதாவிற்கு அதிக பட்ச இடத்தை ஒதுக்கி, அதிமுகவின் பிற தலைவர்களை வஞசிக்கிறது.
வைகோவிற்குக் கூடுதலான இடம் ஒதுக்கப் படுகிறது.

கருதுகோள் #4 :

தினமணி, இருக்கும் 4 நாளிதழ்களில் ஓரளவு நியாயத் தன்மையுடன் நடந்து கொள்வதாகக் கருத
இடமிருக்கிறது.


கருதுகோள் #5.

தமிழகத்தின் 4 தமிழ் நாளிதழ்களுக்குமே சமூக நிதி
குறித்த அக்கறையோ, தலித், சிறுபான்மையினரின் நலனில் சென்சிடிவிடியோ கிடையாது.

இந்தக் கருதுகோள்களை இனி வரும் ஆய்வுகளில் அலசுவோம். ஊடகக் கண்காணிப்புக் குழுவினரின் சார்பில்,

மா. மாரியப்பன் (மாபா)

1 comment:

Anonymous said...

Hi folks,
I read a story on a related issue in the web, though not directly related, might be interesting to you all..

Bye

INDIA: It's the age of pro-reservation bloggers

Reservation debate increasingly finds expression in blogging world

Times of India
Tuesday, April 11, 2006

New Delhi --- Mandal-I generation fought its battle on the streets. Mandal-II is being waged on personal computers and while anti-reservation fervour is evident, there is a new voice in cyberspace -- the war has been joined by pro-reservation blogs which are increasing by the day.

The issue has bloggers delivering emotive arguments -- like Vivek K Singh on Sulekha: "We cannot claim to be a developed country if we still have OBC and SC/ST castes that lack equal social status and deprived of social respect."

He argued that "reservation was to give representation to the oppressed and socially weak classes, I support reservation for that reason. It is not a fight one caste vs another caste.

"Reservation is a temporary solution to embolden India's social commitment. Reservation is help, not a fundamental right."

Chandra Bhan Prasad, who runs the Dalit Shiksha Andolan gives some hard-hitting facts, against the argument that SC/STs have not benefited from reservations so far.

He says, "There are some 3.5 million Dalits in government jobs, about 125 MPs, and hundreds of MLAs. There are about 68,000 Dalits in Group A services."

He adds: "There has been a Dalit head of state, a Dalit deputy prime minister, two Dalit Lok Sabha Speakers, at least half-a-dozen chief ministers, and hundreds of ministers.

"There have been Dalit judges in the higher judiciary, and currently a number of Dalits are serving as vice-chancellors of universities."

Ironically, there is one half of the world where Dalits are invisible, says Prasad. "Outside the regime of reservations, say in the private sector, there are hardly any known Dalits in corporate boardrooms, acting in Bollywood, or speculating markets at stock exchanges, to say nothing of a publicly traded Dalit-owned company."

Charlie, who completed his PhD at IIT Kanpur and by his own admission interacted with several "reserved quota" students, says: "I do not forsee any remarkable decline in standards at IITs or IIMs."

Injunjoe on fonzter.com agrees: "Reservations are a must. The only problem is that in many cases, reservations actually don't go to the people for whom they are meant."