Saturday, April 15, 2006

நலிந்த நிலையில் தமிழ் இதழியல்

செய்திகளைத் துல்லியமாக எழுத வேண்டும். செய்திக்கான ஆதாரங்களை வாசகருக்குத் தெரியப் படுத்துவதன் மூலம் வாசகனிடம் நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதெல்லாம் இதழியலின் பால பாடங்களாகச் சொல்லித் தரப் படுகிறது. ஆனால், தமிழ் நாளிதழ்களில் எதுவுமே, இந்த அடிப்படை விதிகளை, முழு ஈடுபாட்டுடன் பின் பற்றவில்லையோ என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஒரு சான்றைப் பாருங்கள்:

பிரதமர் மன்மோகன் சிங் சுகவீனத்தால் 13 4 2006 அன்று நடைபெற வேண்டிய அமைச்சரவைக் கூட்டம் ரத்து என்ற செய்தி 14 4 2006 நாளிட்ட தினமணியின் முதல் பக்கச் செய்தியாக வெளிவந்துள்ளது. தினமணியை ஒரு தரமான நாளிதழ் என்றுப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
தினமணியில் வெளியான செய்தியைக் கீழே தருகிறோம்:

பிரதமர் சுகவீனம்: அமைச்சரவை கூட்டம் ரத்து

புதுதில்லி, ஏப் 14: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வியாழக் கிழமை சிறிது உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
அதனால், மலையில் நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டமும், இந்தியா வந்துள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்களுடனான சந்திப்பும் ரத்து செய்யப் பட்டது.
தினமணி, 14 04 2006 திருநெல்வேலி பதிப்பு பக்கம் 1

இயல்பாகவே, பிரதமருக்கு என்ன உடல் நலக் குறைவு ஏற்பட்டது, இந்தத் தகவலைத் தெரிவித்தது யார் என்ற கேள்விகள் எழுகின்றன.

என்னதான் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காக தி இந்து நாளிதழ் செய்தியைப் பார்த்தோம். அதில் எங்களுக்கான விடை கிடைத்தது. தி இந்து நாளிதழின் செய்தியையும் அப்படியே தருகிறோம்:

Prime Minister down with the “mild flu”
Special Correspondent


New Delhi: Prime Minister Manmohan Singh was down with “mild flue” and al lhis official engagements for Thursday
evening were cancelled, according to Sanjay Baru, media adviser to the Prime Minister. A scheduled Cabinet meeting was also cancelled. According to Mr Baru, Friday being a “Government holiday”, the Prime Minster hopes to get
three days of complete rest.

UNI reports:
Official sources pointed out that the Prime Minister had chaired a meeting of the Chief Ministers of the States affected by naxalite violence. He sat through the proceedings for over two hours, the sources said. Earlier, he hosted breakfast for the six Chielf
Ministers and held discussions.


The Hindu April 14 2006, Madurai Edition , p.1.

இந்தச் செய்தி தேர்தலுடன் தொடர்புடையதல்ல என்றாலும், செய்திகளை வெளியிடுவதில் தொழில் முறை நேர்த்தி தினமணியில் திருப்திகரமாக இல்லை
என்பதையே இது காட்டுகிறது, என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கான ஒரு முயற்சியே ஆகும்.
தினமலர் இந்தச் செய்தி இடம் பெற்றிருக்கிறது. என்றாலும் தினமணியின் செய்திக்கும் தினமலர் செய்திக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. தினத் தந்தியிலும், தினகரனிலும் இந்தச் செய்தியைக் காண இயலவில்லை. பொதுவாகவே தமிழ் நாளிதழ்கள், செய்திகளை வெளியிடுவதில் தொழில்முறை நேர்த்திக் குறைந்ததாகவே இருக்கின்றன, என்று கருத இடமிருக்கிறது.

இனி 14 04 2006 வெள்ளிக்கிழமை வெளியான நாளிதழ்களை அலசுவோம்:


தினகரன்:


ஸ்டாலின் சாத்தான்குளத்தில் பேசிய பேச்சை முதல் பக்கத்தில் (சுமார் கால் பக்கம்) வெளியிட்டுள்ளது. "மதமாற்ற தடைச் சட்டம் முழுமையாக ரத்து: ஸ்டாலின் உறுதி", என்பது இச்செய்திக்கான தலைப்பு. மூன்றாம் பக்கத்திலும் ஸ்டாலின் ராதாபுரம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து விஸ்வனாத புரத்தில் பேசிய, "பனைத் தொழிலாளர்களுக்கு நல வாரியம்: ஸ்டாலின் உறுதி", என்ற செய்தி, 5 பத்தி அகல வண்ணப் படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது.

முதன் முறையாக, தேசிய முற்போக்குக் கூட்டணியைச் சேராதா ஒரு கட்சியின் தலைவரான தொல் திருமாவளவனின் பேட்டியை, தினகரன், 8ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "வண்ணமயில் ஆகாது வான்கோழி: காணாமல் போவார் விஜயகாந்", என்பது இந்த பேட்டிக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு. பேட்டியின் பெரும்பகுதி, மாற்றுக் கருத்துக்கும் இடம் தர வேண்டும் என்ற நோக்குடன் இடம் பெற்றதாகக் கருத முடியாது, என்பதையே உறுதிப்படுத்துகிறது. விஜயகாந் குறித்து விமர்சனக் கருத்துக்களை வெளிப் படுத்தவும், திமுகவின் 2 ஏக்கர் நிலம் தரும் திட்டம் குறித்து பாசிட்டிவான கருத்துக்களைப் பெறவும் இந்த பேட்டி பயன் படுத்தப் பட்டிருக்கிறது. தினகரனின் பக்கம் சாராத தன்மையுடன் இந்த பேட்டியில் இடம் பெறச் செய்திருப்பதாகக் கருத முடியாது.

தவிர, கருணாநிதியின் விழுப்புரத்து பிரச்சாரப் பொத்க்கூட்ட உரை 7 ஆம் பக்கத்தில் விரிவாக இடம் பெற்றுள்ளது. தி மு க தலைவர் கருணாநிதியின் அறிக்கை "50 லட்சம் தரிசு நில விவகாரம்: ஆதாரம் காட்டியதும் மாற்றுகிறார் ஜெயலலிதா. கருணாநிதி அறிக்கை", என்ற தலைப்புடன் 6 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தினத்தந்தி

"அதிமுக- திமுகவுக்கு மாற்றாக எனக்கு வாய்ப்பு தாருன்க்கள்", என்று தூத்துக் குடியில் விஜயகாந் பேசிய பேச்சு, தினத் தந்தியின் 4 ஆம் பக்கத்தில் 3 காலம் படத்துடன் வெளியாகியுள்ளது.


முல்லைப்பெரியாறு அணையில், 152 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்த தொடர்ந்து நடவடிக்க: ஜெயலலிதா உறுதி என்ற செய்தி, 5 ஆம் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.

திமுக கூட்டணியில் கருணாநிதியின் பேச்சுக்கு அடுத்த படியாக, ஸ்டாலினின் பேச்சை தினத்தந்தி விரிவாக வெளியிட்டு வருகிறது. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு க ஸ்டாலின் பிரசாரம்- "ஆட்சிக்கு வந்தால் பனைத் தொழிலாளர் வாரியத்தை விரிவு படுத்தி சலுகைகளைக் கொடுப்போம்", என்ற செய்தி படத்துடன், 8 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

தமிழக தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு- வேட்புமனு தாக்கல் தொடங்கியது . முதல் நாளில் 81 பேர் மனுதாக்கல் செய்தனர் என்பது தினத் தந்தியின் லீட் ஸ்டோரியாக வெளியிடப் பட்டுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு மலர் மற்றும் சிறுவர் தங்கமலர் இலவச புத்தகத்துடன் வெள்ளிமலர் 34 பக்கம் 500 காசு என்ற அறிவிப்புடன் தினத் தந்தி இன்று 5ரூபாய்க்கு விற்கப் பட்டதால், திருநெல்வேலி மாநகரின் பல கடைகளில் தினத் தந்தி மாலை வரை தேங்கிக் கிடந்ததைக் கண்டோம். தந்தியின் விலை இன்று அதிகம் என்பதால், தினகரன், வழக்கத்திற்கு முன்பாகவே விற்றுத் தீர்ந்து விட்டது, என்று பாளையங்கோட்டை கடைக்காரர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

தினமணி


கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா பாண்டியன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி, திஅன்மணியின் 5ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. "புதிய கட்சிகள், நடிகர்கள் வருகையால் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு பாதிக்காது", என்ற தலைப்புடன் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.


"72 சதவீதத்துக்கு மேல் வாக்குப் பதிவானால் தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும்', என்ற தலைப்புடன் விஜயகாந் சிவகங்கையில் பேசிய பேச்சு, தினமணியின் 5ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

பெரியாறு அணை 152 அடியாக உயர்த்தப் படும் என்று சமயநல்லூரில் ஜெயலலிதா பேசிய பேச்சும், நடிகர் சர்த்குமார் விலகலால் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை என்ற மு க ஸ்டாலினின் பேட்டியும், புதன் கிழமை, தூட்துக் குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரில் ஜெயலலிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியும், [அரசு நிலம் விவகாரத்தில் மக்களைத் திசை திருப்ப கருணாநிதி முயற்சி: ஜெயலலிதா குற்றச் சாட்டு என்ற தலைப்புடன்] 7 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளன.
வள்ளியூரில் மு க ஸ்டாலின் பேச்சும் (சட்டப் பேரவைத் தேர்தல் மூலம் அதிமுக ஆட்சியை அகற்றுங்கள்), சிதம்பரத்தில் வைகோவின் பேச்சும் (வெள்ள நிவாரணம்: மத்திய அரசு மீது வைகோ புகார்), தினமணியின் 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளன.

“2 ஏக்கர் நில விவகாரம்: ஜெ புதிய கருத்துக்கு கருணாநிதி விளக்கம்” என்ற தலைப்புடன் கருணாநிதியின் அறிக்கை 9ஆம் பக்கத்திலும், விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசிய பேச்சு, 9ஆம் பக்கத்திலும் [திமுகவின் தேர்தல் வெற்றி இப்போதே நிச்சயிக்கப் பட்டுள்ளது: மு கருணாநிதி] வெளியாகியுள்ளன.

தினமலர்:

இரட்டை விரலைக் காட்ட ஜெக்கு திடீர் பயம்: கருணாநிதி என்ற தலைப்புடன், கருணாநிதியின் பேச்சை தினமலர் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் விறுறுவிறுப்புடன் மனு தாக்கல் ஆரம்பம் என்பது தினமலரின் லீட் ஸ்டோரியாகும்.
கடலூர் மாவட்டம் சேத்க்டியாத் தோப்பில் வைகோ பேசிய பேச்சு, 6ஆம் பக்கத்திலும் ["வெள்ள நிவாரண நிதியை தடுத்தவர் கருணாநிதி - தேர்தல் பிரசாரத்தில் வைகோ கடும் குற்றச்சாட்டு என்ற தலைப்புடன்], மயிலாடுதுறையில் வைகோ பேசிய பேச்சு 8 ஆம் பக்கத்திலும் [ கருணாநிதி அஸ்திரத்தின் அர்த்தம் தெரியும்: மயிலாடுதுறையில் வைகோ ஆவேசம்] வெளியாகியுள்ளன.

60 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு வழங்கப் படும், மேலூரில் ஜெயலலிதா பேச்சு என்ற செய்தி தினமலரில் 4ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்டாலின் ராதாபுரத்தில் பேசிய பேச்சு தினமலர் சப்ளிமென்டில் VII ஆம் பக்கத்திலும் "திமுக ஆட்சிக்கு வந்தால் பனைத் தொழிலாளர் நலவாரியம்: ஸ்டாலின் உறுதி", என்ற தலைப்புடன் வெளி வந்துள்ளது.
சரத்குமார் விலகியதால் திமுகவிற்கு பாதிப்பில்லை, ஸ்டாலின் பரபரப்பு பேட்டி என்ற செய்தி தினமலரின் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

நான்குனேரி தொழில்நுட்ப பூங்காவுக்கு முட்டுக் கட்டை போட்டவர் ஜெயலலிதா, ஸ்டாலின் ஆவேசம் என்ற செய்தி, தினமலரின் 7 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
மதமாற தடை சட்டம் ரத்து செய்யப் படவில்லை, கருணாநிதி திடுக் தகவல் என்ற செய்தி தினமலரின் சப்ளிமென்டில் II ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபி தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பை ஏப்ரல் 1முதல் 7 வரையான நாட்களில், மாநிலத்தின் பல பகுதிகளில் தி இந்து நாளிதழும் சி என் என் - ஐ பி என் தொலைக் காட்சிகளின் சார்பில் நடத்தப் பட்டு முடிவுகள் 14 4 2006 தி இந்துவில் விரிவாக வெளியிடப் பட்டுள்ளது. இது குறித்து வலைப்பூக்கள் பல விரிவாக ஆய்வு செய்துள்ளன.

தவிர பா ஜ கவின் தமிழக தலைவர் சி பி ராதாகிருஷ்ணனின் சிறப்பு பேட்டியை தி இந்து நாளிதழ் 4 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நிறைவாக:

பிரச்சாரம் குறிப்பிட்ட சில விஷயங்களைத் தாண்டிச் செல்லவில்லை. தமிழ்ப் பத்திரிகைகள் இந்தத் தேர்தலை இதைவிடச் சிறப்பாகக் கையாள முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு பக்கம் சார்ந்து செய்தி வெளியிடுதல், செய்திகளை இருட்டடிப்பு செய்தல், தொழில்முறை நேர்த்தியுடன் எழுதும் திராணியற்று இருத்தல் என்ற பலவீனங்களுடன் பிரச்சாரத்திற்கான நாட்கள் குறைந்து கொண்Dஏ வருகின்றன. நம்பிக்கையுடன் ஆய்வைத் தொடர்கிறோம் என்ற குறிப்புடன் மீண்டும் 15 4 2006 இதழ் குறித்த அலசலுடன் சந்திப்போம் என்று கூறி விடை பெறுகிறோம்.


ஊடகக் கண்காணிப்புக் குழுவினர்

3 comments:

Sivabalan said...

Very good work.

By any chance do these Newpaper Men visiting your Blogs?

If so, then it is really good news.

Hope for the best!!

Sivabalan said...

Very good work.

By any chance do these Newpaper Men visiting your Blogs?

If so, then it is really good news.

Hope for the best!!

Arulselvan said...

Mr Sivabalan,

Thanks for the nice words. We have started informing media friends to take note of these comments, which is nothing but an academic exercise to understand the media around us. We have planned to continue to publish this blog on everyday, till the campaign is over.

Media Watch Team.