Saturday, May 06, 2006

குழந்தைகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கை:

தி இந்து நாளிதழின் 5 5 2006 இதழின் 6ஆம் பக்கத்தில் திண்டுக்கல்லில் குழந்தை உரிமைக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை பிரமாண்டமான படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது.
அந்தச் செய்தியின் தலைப்பும், முகப்புரையும் இங்கே தரப்படுகிறது. :

Now, it is school children’s manifesto

Released at a function organised by Coalition of Child Rights Networks in Dindigul
While political parties hae been making promises to lure voters, school children and rescued child labours have released a manifesto, urging political parties to give due importance to education and child rights.
The manifesto was released at a funcion orgnaised by the Coalition of Child Rights Networks in Dindigul on Thursday.

இலவசங்களை விமர்சிக்கும் குரல் - தினமணியில்

இலவசங்களின் பட்டியலைத் தினமும் அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுக் கொண்டேயிருக்க, இது போன்ற இலவசங்கள் என்னவிதமான சிக்கல்களை உருவாக்கும் என்ற விமர்சனக் குரலை பேராசிரியர் சிற்பி பாலசுப்ரமணியம் எழுப்பியிருக்கிறார். தினமணி 5 5 06 இதழில் 8ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. "மானியங்களாலும், இலவசங்களாலும் இன்றியமையாத நலத் திட்டங்களுக்கு உரிய நிதி குறைந்து போகும் என்பது ஒன்று. அதை ஈடு செய்ய, கடுமையாக வரிகளை விதிக்க நேரிடும் என்பது மற்றொன்று", என்று வாதிடிகிறார் பேராசிரியர். "அனுபவம் மிக்க அரசியல் தலைவர்கள் இதனை அறியாதவர்கள் அல்ல. பொறி பறக்கும் தேர்தல் களம் அறிவைப்பகடையாக்கிப் பழி தீர்க்க முனைகிறது", என்கிறார் கட்டுரையாளர்.
இது போன்ற குரல்கள், தமிழ் வெகு ஜன்ப்பத்திரிகைச் சூழலில் காண முடியாத ஒன்றாக இருக்கிறது.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20060504103458&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0

இலவசங்களின் பிரளயம்
சிற்பி பாலசுப்பிரமணியம்
"ஆனை வரும் பின்னே, மணியோசை
வரும் முன்னே' என்பது பழமொழி. "தேர்தல் வரும் பின்னே, இலவசங்கள் முன்னே' என்பது நம்
காலப் புதுமொழி.
வணிக உலகம் கையாண்ட ஒரு தந்திர உத்தி அரசியல்வாதிகளின் கையில்
அட்சய பாத்திரமாகி விட்டது. சரியாகச் சொன்னால் அட்சய பாத்திரத்துக்குப் பசி
தணிப்பது தவிர வேறு எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் தேர்தல் வாக்குறுதிகளின் பின்
வாக்கு அறுவடை அமோகமாகக் கிடைக்கும் என்ற பேராசை ததும்பி நிற்கிறது.
உலகமயமாதலில் அடுத்த கட்டத்தில் இலவசங்கள் அறவே அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற
நிபந்தனைகள் கடுமையாகிக் கொண்டிருக்கும்போது, இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில்
மயிலிராவணன் தலைபோல் மறுபடியும் மறுபடியும் அவை முளைத்துத் தழைத்துத் தேர்தல்
தோரணங்களாகக் கெக்கலி கொட்டுகின்றன.
குறுகிய கால, நெடுங்கால மக்கள் நலத்
திட்டங்களை வாரிக் குப்பையில் போட்டு விட்டு முன்வரிசையில் முகம் காட்டி
நகைக்கின்றன இலவசங்கள்.
ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை, சிறிதளவு நிலம்,
பஞ்சகாலத்தில் பண உதவி, இயற்கைப் பேரழிவு நேர்ந்தால் தக்க நிவாரணம், விளைச்சல்
தவறும்போது கடன்கள் ரத்து என்பவைதான் பொதுவாக அரசு வழங்கும் இலவச உதவிகளாகப் பல ஆண்டுகள் முன் கருதப்பட்டன. ஒரு நல்லரசின் பொறுப்புகள் அவை என்பதில் ஐயமில்லை.
வேளாண் துறையின் சிக்கல்களுக்கு உதவி புரியும் வகையில் நீர் வளம் பெருக்க,
வீரிய விதைகளை அறிமுகம் செய்ய, கட்டுபடியாகும் விலை தர, புதிய கருவிகளைக் குறைந்த
விலைக்கு வழங்க அரசு முன் வருவது இயற்கை. தொழில் துறை செழிக்க மின் உற்பத்தி
பெருக்க, ஏற்றுமதிக்கு உறுதுணை புரிய, தடையற்ற நிர்வாக உதவி தர, வல்லுநர்களைக்
கொண்டு புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசு கைகொடுப்பது அவசியம். கல்வி, வாணிகம்,
கைத்தொழில்கள், சிறுதொழில்கள் ஆகியவை வளம் பெறவும், மருத்துவம் செழிக்கவும் அரசு
திட்டங்கள் வகுப்பது கடமை.
தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள் தகுதிக்கேற்ற வேலை
வாய்ப்புகளைப் பெற ஆவன செய்வதும் அரசின் பொறுப்பு. ஆனால் ஓடி ஓடி இலவசங்களைப்
பெறும் அடிமைகளாக மக்களை மாற்றுவது என்ன வகை நியாயம்?
பேருந்து நிலையத்தில்
போலித் துணி வியாபாரம் செய்பவர்கள் முதலில் ஏலம் கோருபவருக்கு இலவச சீப்புக்
கொடுப்பார்கள். அவையெல்லாம் வியாபார தந்திரங்கள். அரசியல் அப்படி வியாபாரம் ஆவது
வளர்ச்சியின் அடையாளம் அல்லவே அல்ல.
மீனைச் சாப்பிடக் கொடுப்பதை விடத்
தூண்டிலைக் கொடுத்து மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பது விவேகம் என்று சொல்லுவார்கள்.
அரசியல், பொருளாதார, சமூகத் தளங்களில் உழைப்பை முன்வைத்துச் செழிப்பை உருவாக்குவதே
வளம் பெருக்கும் வாழ்வியல்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட இயக்கம் ஆட்சியைக்
கைப்பற்ற முன்வைத்த சாகசமான வாக்குறுதி: "ஒரு படி நிச்சயம்-மூன்று படி லட்சியம்'.
அரசியல் அரிசியியல் ஆனதின் தொடக்கம் அது.
அரிசிப் பஞ்சம் காமராசர் ஆட்சிக்குப்
பின் உருவாயிற்று. அப்போது இந்த வாக்குறுதி வாக்குகளை உறுதியாக்கிற்று. அதன் பிறகு
அந்த வாக்குறுதி நின்றதுபோல் நின்று நெடுந்தூரம் சென்று மறைந்துவிட்டது. அதைக்
குறித்து மறந்தே போனோம். அதற்குக் காரணம் அண்ணா என்ற உயர்ந்த மனிதர் ஆட்சிப்
பொறுப்பில் இருந்தார் என்பதுதான். வாக்குறுதி தந்தவரின் நல்லெண்ணம் தோற்றதாய்ச்
சமாதானம் பூண்டோம்.
ஆனால் இன்றைய சூழ்நிலை வேறு. அரிசிப் பஞ்சங்களின் காலம்
கடந்து வேளாண்மையில் தன்னிறைவு பெற்றுவிட்டதற்குக் காரணமான பசுமைப்புரட்சியின்
அடுத்த கட்டம் இது (டர்ள்ற் எழ்ங்ங்ய் தங்ஸ்ர்ப்ன்ற்ண்ர்ய் டங்ழ்ண்ர்க்). மக்களில்
பெரும்பான்மையோருக்குப் பங்கீட்டு அரிசி கட்டாயத் தேவையும் அல்ல.
இந்த நிலையில்
இலவசங்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறது அரிசி. மானியங்கள் மூலம் இலவச மின்சாரம்
அளிப்பதைப்போல, பங்கீட்டு அரிசியும் பெருமளவு மானியம் தந்து குறைந்த விலைக்கு
வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலவசங்களின் பிரளயத்தை இந்தத் தேர்தலில்
தொடங்கி வைத்த பெருமை கலையுலகிலிருந்து அரசியலைத் திடீரென்று தாக்கிய ஒரு கட்சியையே
சாரும்.
பதினைந்து கிலோ அரிசி பங்கீட்டுக்குக் கடைக்கே போகாமல் வீட்டுக்கே
இலவசமாக வந்து கதவைத் தட்டும் என்ற அறிவிப்பு மேகமில்லாத வானத்திலிருந்து விழுந்த
இடியாக மற்ற கட்சிகளைத் தாக்கியது. அத்துடன் வேறு பல இலவசங்களும் கூட்டணி அமைத்துக்
கொண்டதால் அந்தக் கட்சி "கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ'னாகத் தோற்றம் தந்தது.
அந்த இலவச அலையின் ஓசை அடங்கிய போது, ஆளுங்கட்சி மிக நிதானமான, ஏற்கெனவே
வகுக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், புதிய கொள்கை அறிவிப்புகள், வேலை வாய்ப்புகள்
அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. சாதனைகளைச் சொல்லியும், சாதிக்க உள்ளவற்றை
விளக்கியும் வாக்குக் கேட்ட அறிக்கை பாராட்டுக்குரியதாகவே இருந்தது.
ஆனால்
முற்போக்குக் கூட்டணியின் முதன்மையான எதிர்க்கட்சி கொதிக்கக் கொதிக்க வெளியிட்ட
தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் புத்துயிர் கொண்டன.
இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ
அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இரண்டு ஏக்கர் நிலம் என இலவசங்கள் அணி
வகுத்தன.
முடியுமா என்ற வினாவுக்கு முடியாதது அந்தக் கட்சியின் அகராதியில்
இல்லாதது என்ற கம்பீரமான அறிவிப்பு மெய்க்காப்பாளனாக இலவசத்துடன் வலம் வரத்
தொடங்கியது.
இதனிடையே கருத்துக் கணிப்புகள் வேறு கலந்து கொள்ள இலவசங்களின்
அறிவிப்பில் அழுத்தமும் ஆவேசமும் கூடலாயிற்று. தேர்தல் களம், இலக்குகளை
விட்டுவிட்டு இலவசங்கள் பற்றிய பரபரப்பில் மூழ்கியது.
மக்கள் மனத்தில்
மாற்றங்கள் விளைந்ததாகத் தெரியவில்லை. ஆயினும் இலவசங்களின் ஓட்டப்பந்தயத்தில்
இப்போது ஆளுங்கட்சியும் கச்சை கட்டிக் கொண்டு இறங்கிவிட்டது. எதிரிதான் போர் முறையை
நிர்ணயிக்கிறான் என்று அரசியல் வித்தகர்கள் கூறுவது வழக்கம். எதிர்க்கட்சிகளின்
இலவசம் போர் முறை ஆளுங்கட்சியையும் அதே ஆயுதத்தோடு களமிறக்கி இருப்பது வருத்தம்
தருகிறது.
மாதம்தோறும் பங்கீட்டு அரிசியில் பத்து கிலோ இலவசமாக வழங்கப்படும் என
ஆளுங்கட்சி மிகத் தெளிவாக அறிவித்திருக்கிறது.
ஒரு நாடு அணு ஆயுத வல்லரசாக
மாறினால் இன்னொரு நாடு இன்னொரு அணு ஆயுதப் பேரரசாக மாற வரிந்து கட்டுகிறது. இதன்
விளைவை உலக அரங்கில் பார்க்கிறோம்.
இலவசங்களின் அறிவிப்புகளும் அந்த அபாயகரமான
விளையாட்டில் இறங்கிவிட்டன. வார்த்தைக்கு வார்த்தை, பேச்சுக்குப் பேச்சு என்ற எல்லை
கடந்து ஏட்டிக்குப் போட்டியாக இலவச அறிவிப்புகள் வானமே எல்லையாக வளர்ந்து
கொண்டிருக்கின்றன.
சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கத் தொடங்கிய தேர்தல்
பிரசாரத்தின் நல்ல தொடக்கம் எவ்வாறோ திசைமாறிப் போயிருக்கிறது.
இலவசங்களுக்கு
முடிவு ஏது? வலது காலணி வாங்கினால் இடது காலணி இலவசம் என்று தொடங்கி, கால்கள்
இருந்தால் காலணி இலவசம் என்று வளர்ந்து, காலணிகளோடு கால் உறையும் இலவசம் என்று
தொடர்ந்தால் முடிவு ஏது?
இலவசம் இன்றைய பரவசமாக இருக்கலாம். ஆனால் நாளைய
அரசாங்கத்தின் தலைவலி அது. இந்த விஷ வட்டம் பொருளாதார நட்டத்தில் போய் முடியலாம்.
உடனடியாக இரண்டு விளைவுகளைப் புதிய அரசு எதிர்பார்க்கலாம். மானியங்களாலும்,
இலவசங்களாலும் இன்றியமையாத நலத் திட்டங்களுக்கு உரிய நிதி குறைந்து போகும் என்பது
ஒன்று. அதை ஈடு செய்ய, கடுமையாக வரிகளை விதிக்க நேரிடும் என்பது மற்றொன்று.
அனுபவம் மிக்க அரசியல் தலைவர்கள் இதனை அறியாதவர்கள் அல்ல. பொறி பறக்கும்
தேர்தல் களம் அறிவைப் பகடையாக்கிப் பழி தீர்க்க முனைகிறது.

சன் டிவியில் தயாநிதியின் பங்கு : தினமணியில் புலானாய்வுக் கட்டுரை

சன் டிவியில் தயாநிதி மாறனுக்குரிய பங்குகள் குறித்து தினமணி தொடர்ந்து அதிக அக்கறை செலுத்தி வருகிறது. கட்டுரைகள், கருத்டுப் படங்கள் என்று தொடர்ந்து வெளியிட்டு வருகிறது தினமணி. இவ்வரிசையில், மூத்த பத்த்ரிகையாளர் கே என் அருணின் கட்டுரை, "முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?", என்ற தலைப்பில் 6 5 2006 தினமணியின் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரை இதோ இங்கே தரப் படுகிறது. :


சன் டிவியில் தயாநிதியின் பங்கு: முழுப் பூசணிக்காயை சோற்றில்
மறைக்க முடியுமா?


கே.என். அருண்
சென்னை, மே 6: டிடிஎச் விவகாரத்தில்
டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவை மிரட்டியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி
நாளேடுகளில் செய்திகள் வெளியாயின. அதன்பிறகு 2 நாள் கழித்து பத்திரிகைகளுக்கு
வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அமைச்சராவதற்கு முன்போ, அதன் பிறகோ சன் டிவி
நிறுவனத்தில் எனக்குப் பங்கு ஒருபோதும் இருந்தது இல்லை' என்று திட்டவட்டமாகக்
கூறியிருந்தார் தயாநிதி மாறன்.
இதையடுத்து, சன் டிவி நிறுவனத்துக்கும் தயாநிதி
மாறனுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்று வெகுஜனங்கள் வேண்டுமானால் நம்பலாம். ஆனால்,
பங்குபத்திர வர்த்தக நிபுணர்களைக் கேட்டால் இது முழுப் பூசணிக்காயை சோற்றில்
மறைக்கும் கதை என்பது தெளிவாகும்.
சன் டிவி நிறுவனத்துடன் சிலந்தி வலை போல்
தொடர்புடைய சில நிறுவனங்களில் தயாநிதி மாறன், அவரது மனைவி பிரியா தயாநிதி மற்றும்
கலாநிதி மாறன் ஆகியோருக்கு எந்த அளவுக்குப் பங்கு உள்ளது என்பது வெட்ட
வெளிச்சமாகும். அதிலிருந்தே பத்திரிகைகளுக்கு அவர் வெளியிட்ட அறிக்கை உண்மை அல்ல
என்பது நிரூபணமாகும்.
விவரம்:
சமீபத்தில் சன் டிவி நிறுவனம் பங்கு வெளியீடு
மூலம் மூலதனம் திரட்டியது. அதற்கு முன்பாக சன் டிவியில் தயாநிதி மாறன் 2
நிறுவனங்களில் மறைமுகமாக வைத்திருந்த பங்குகள் முழுவதும் சன் டிவி நிறுவனத்துக்கும்
அதைச் சார்ந்த மற்றொரு நபருக்கும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாற்றப்பட்டன.
பங்குகளை வெளியிடுவதற்கு முன்பு செபி-யில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு ரெட் ஹெர்ரிங்
பிராஸ்பெக்டஸ் (ஆஎச்பி)யில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல் கேபிள்ஸ் பிரைவேட்
லிமிடெட் மற்றும் நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை
வைத்திருந்த ரூ. 10 முகமதிப்புள்ள தலா 31 பங்குகள் (மொத்தம் 62) அதே விலைக்கு
குங்குமம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சன் டிவி நிறுவன துணைத் தலைவர்
கே. சண்முகம் ஆகியோரது பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன. இது வரைவு ரெட்ஹெர்ரிங்
பிராஸ்பெக்டஸ் ஆவணத்தின் (ஆர்எச்பி) 36-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு முன் கலாநிதி மாறனின் தாயார் மல்லிகா மாறன் மற்றும் இதர சில
நிறுவனங்களுக்குச் சொந்தமான பங்குகள் மற்றும் அவரது பாட்டியும் திமுக தலைவர்
கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் வசம் இருந்த பங்குகளும் கலாநிதி மாறன்
பெயருக்கு மாற்றப்பட்டன. இதன்மூலம் சன் டிவி நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு
முன்பு அதன் 99.9 சதவீத பங்குதாரர் ஆகி விட்டார் கலாநிதி மாறன்.
தயாநிதி மாறனுக்கு 91 சதவீதமும் அவரது மனைவி பிரியாவுக்கு 9 சதவீத பங்குகளும் உள்ள டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு கல் கேபிள்ஸ் மற்றும் நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 25 சதவீதப் பங்குகளும் இருந்தன. இந்த 2 நிறுவனங்களிலும் கலாநிதி மாறனுக்கு 75 சதவீதப் பங்குகள் உள்ளன. இந்த 2 நிறுவனங்களில் தயாநிதி மாறனின் 25
சதவீதப் பங்குகள்தான் இந்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி மாற்றப்பட்டன. இதிலிருந்தே ஏப்ரல்
27-ம் தேதி தயாநிதி மாறன் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை உண்மை அல்ல என்பது
தெளிவாகிறது.
சன் டிவி நிறுவனத்தின் கேபிள் டிவி விநியோகச் சேவைகளை மேற்கொண்டு
வருகிறது நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன் நிறுவனம். இதன் மூலம் பெரும் வருமானம்
கிடைக்கிறது.
சன் டிவி நிறுவனத்துக்கு டவுன்லிங்கிங் சேவைகளைச் செய்து
கொடுக்கும் சேவைகளைச் செய்து வருவதன் மூலம் பெரும் வருவாயை ஈட்டுகிறது கல் கேபிள்ஸ் நிறுவனம். டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எச்எப்ஓ
எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், சன் டிவி நிறுவனத்துக்குத் தேவையான கேளிக்கை
சாதனங்களை வாடகைக்குக் கொடுத்து வருவதன் மூலம் பெரும் வருவாய் கிடைக்கிறது.
டிஎம்எஸ் என்ற மற்றொரு நிறுவனத்தில் தயாநிதி மாறனுக்கு 91 சதவீதப் பங்குகள்
உள்ள டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு 60 சதவீதப் பங்குகளும் எஞ்சிய 40 சதவீதப்
பங்குகள் தயாநிதி மாறனின் மனைவி பிரியாவுக்கும் உள்ளன.
இதுபோன்று சன் டிவி
நிறுவனத்தில் நேரடியாகப் பங்குதாரராக இல்லாமலேயே பெரும் வருவாய் வேறு வழியில்
ஈட்டப்படுகிறது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன்
பொறுப்பேற்று 2 மாதங்களுக்குப் பிறகு 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி டிகே
எண்டர்பிரைசஸ் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிறுவனம் "சாப்ட்வேர்
டெவலப்மெண்ட் மற்றும் சேவை' வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு
சன் டிவிக்காக நிகழ்ச்சிகளை டவுன்லிங்கிங் சேவை புரிந்து வரும் கல் நிறுவனத்தில் 25
சதவீதப் பங்குகள் உள்ளன. சன் டிவி நிறுவனத்தின் ஓர் அங்கமாக இருந்த கேபிள் மற்றும்
கண்டிஷனல் ஆக்சஸ் சிஸ்டம் செயல்பாடுகளை முழுமையாகச் செய்து வருகிறது.
2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமங்கலி கேபிள்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வந்த பணிகள் கல் கேபிள்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
மேற்கண்ட பங்குகளின் மாற்றத்தின்
மொத்த மதிப்பு ரூ. 33.9 மில்லியன் என சன் டிவி நிறுவன பங்கு வெளியீட்டு ஆவணத்தில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவைகள் அனைத்தும் தயாநிதி மற்றும் தொலைத் தொடர்பு வர்த்தகத்தை நெறிமுறைப்படுத்தும் அமைச்சகத்தின் கீழ் வருகிறது. மத்திய அமைச்சராக இருக்கும் தயாநிதி மாறன் அவரது சகோதரர் கலாநிதி மாறனுக்கு 75 சதவீதப் பங்குகள் உள்ள நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 25 சதவீதப் பங்குதாரர்.
இந்த நிறுவனம் இன்டர்நெட் சேவை, நெட்வொர்க் டெலிகம்யூனிகேஷன் மற்றும் டெலிபோனி சேவை ஆகிய வர்த்தகங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதுவும் பங்கு வெளியீட்டு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் முக்கிய வர்த்தகம் கம்ப்யூட்டர்
சாப்ட்வேர் டெவலப்மெண்ட், சிஸ்டம்ஸ் சாப்ட்வேர்கள், அப்ளிகேஷன்ஸ் சாப்ட்வேர்கள்,
உற்பத்தி, அசெம்பிளி, டிரேட், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட இந்த வர்த்தகங்கள் அனைத்தையுமே மத்தியத் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் வருபவைதான். அதுதான் தயாநிதி மாறன்!
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20060505135635&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0

தினமலர் நடத்திய சர்வே:

ஆங்கிலப் பத்திரிகைகள் கருத்துக் கணிப்பு நடத்துதற்குரிய நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்கள் உதவியுடன் அதற்கெனப் பயிற்சியும் திறமையும் பெற்ற நிபுணர்களால் நடத்தப் பட்டு முடிவுகளை, அது எப்படி நடத்தப் பட்டது என்ற மெதடாலஜியுடன் வெளியிடுகின்றன. ஆனால், தமிழ்ப் பத்திர்கைகள், தங்களின் பத்திரிகையாளர்கள் துணையுடனே இந்த சர்வேயை நடத்தி முடித்து விடுகின்றன. ஆய்வு வழிமுறையும் விரிவாக வெளியிடப் படுவதில்லை.

தினமலர் சென்னையில் சில தொகுதிகளிலும், மதுரையில் சில தொகுதிகளிலும், நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் 05 05 2006 இதழின் 14ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

05 05 2006 இதழில் சென்னையில் நடத்தப் பட்ட ஆய்வு முடிவும், 06 05 2006 இதழில் மதுரையைச் சுற்றிய பகுதிகளில் நடத்தப் பட்ட ஆய்வு முடிவும் வெளியிடப் பட்டுள்ளன. அவை இங்கே தரப் படுகின்றன.


சென்னையில் தண்ணீர் பிரச்னை இல்லை; ரவுடியிசம் ஒழிந்தது
தி.மு.க., கோட்டையில் அ.தி.மு.க.,

"தினமலர்' கருத்துக் கணிப்பில்
அதிரடி முடிவு நமது சிறப்பு நிருபர்
சென்னை நகரில் உள்ள 14 சட்டசபை தொகுதிகளில்
கணிசமான தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பது "தினமலர்'
நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மற்ற தொகுதிகளில் தி.மு.க.,வுக்கும்,
அ.தி.மு.க.,வுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

ஒவ்வொரு
தேர்தலிலும் ஏதாவது ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்து வந்துள்ளது.
தமிழக மக்கள் இதுவரை கூட்டணி ஆட்சி அமையும் வகையில் ஓட்டுப் போட்டதில்லை என்பது
வரலாறு. ஆனால், இந்த முறை கூட்டணி ஆட்சி அமையுமோ என்ற சந்தேகத்தை பல்வேறு
நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் ஏற்படுத்துகின்றன.
இருந்தாலும் மக்களின் நாடித் துடிப்பை அறிய "தினமலர்' சார்பில் சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த மாதம் 26ம் தேதி கருத்துக் கணிப்பு
நடத்தப்பட்டது. கருத்துக் கணிப்பு குழுவில் 50 பேர் இடம் பெற்றனர். ஆண்கள்,
பெண்கள், அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மாணவர்கள்,
இல்லத்தரசிகள், வர்த்தகர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என எல்லாத் தரப்பினரிடமும்
கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், நான்காயிரத்து 662 பேர் தங்கள்
கருத்துக்களை தெரிவித்தனர்.

சென்னை நகரில் உள்ள ராயபுரம், துறைமுகம்,
ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பூங்காநகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாநகர்,
ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், தி.நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை
ஆகிய 14 சட்டசபை தொகுதிகளில் நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க.,வை விட
அ.தி.மு.க., முன்னணியில் உள்ளது.

சென்னை நகருக்குட்பட்ட 14 தொகுதிகளில்
கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டுகள் விவரம்:

தி.மு.க., 443

அ.தி.மு.க.,551

தே.மு.தி.க.,210

பா.ஜ., 25

மொத்த
ஓட்டுகள் 1,229

சென்னை நகரில் உள்ள 14 தொகுதிகளும் தி.மு.க.,வின் கோட்டை
என்று வர்ணிக்கப்படுகிறது. கடந்த 2001 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில்
அ.தி.மு.க., இரண்டு இடத்தையும், கூட்டணிக் கட்சிகள் இரண்டு இடத்தையும் கைப்பற்றின.
தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க., ஆறு அல்லது ஏழு இடங்களை கைப்பற்றும் பட்சத்தில்,
சென்னை தி.மு.க.,வின் கோட்டை என்ற மாயை தகர்க்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதற்கு
காரணம், சென்னை நகரில் தி.மு.க.,வை விட அ.தி.மு.க., முன்னணியில் உள்ளது.

சென்னை மாநகர குடிநீர் பிரச்னையை அ.தி.மு.க., அரசு தீர்த்து விட்டது
என்றும், நகரில் ரவுடிகள் தொல்லை இல்லை என்றும் பொதுமக்களிடம் பரவலாக கருத்து
உள்ளது. அ.தி.மு.க., முன்னணியில் இருக்க இதுவே காரணம். நமது சர்வே முடிவுப்படி
சென்னை நகரில் உள்ள 14 தொகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு குறைந்தது ஏழு தொகுதிகள்
கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சென்னை நகரில் கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்துள்ள
ஓட்டு சதவீதம்:

அ.தி.மு.க., அணி 43.35

தி.மு.க., அணி 34.85

தே.மு.தி.க., 16.52

இந்த சதவீத அடிப்படையில் பார்க்கும் போது
சென்னை நகரில் கணிசமான தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றும் என்றே தெரிகிறது.
தி.மு.க.,வின் கோட்டை என்று அழைக்கப்படும் சென்னை நகரில் அ.தி.மு.க.,வால் இந்த
அளவுக்கு ஓட்டு சதவீதங்களை பெற முடிந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
சென்னை நகரின் தலையாய பிரச்னை குடிநீர் பிரச்னை. கடந்த காலங்களில் சென்னை நகரில்
பெண்களும், ஆண்களும் குடத்தை துõக்கிக் கொண்டு லாரி தண்ணீருக்காக அலைந்தனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூட லுங்கியுடன் குடத்தை துõக்கிக் கொண்டு தண்ணீர்
பிடிக்கச் சென்றது பல பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்தது உண்மை. குடிநீருக்காக
மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்ய
வேண்டியிருந்தது. இப்போது குழாயைத் திறந்தால் தண்ணீர் கொட்டுகிறது. தினந்தோறும்
காலை நேரத்தில் குழாய்களில் தண்ணீர் வருவது சென்னை நகர மக்களுக்கு நிம்மதியை
தந்துள்ளது.

அடுத்ததாக, சென்னை நகரில் கொடிகட்டிப் பறந்த ரவுடிகள்
ராஜ்ஜியம் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளது சென்னை நகர மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
மூன்றாவதாக, சென்னை நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இரண்டாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் நிவாரணப்
பொருட்களும் போய்ச் சேர்ந்தது அ.தி.மு.க., அரசின் பக்கம் மக்களை இழுத்துள்ளது. இந்த
மூன்று காரணங்களும் சென்னையில் தி.மு.க.,வின் கோட்டையை தகர்த்து அ.தி.மு.க.,
ஓட்டுகளை கைப்பற்ற வழிவகுத்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க., அணிக்கும் தி.மு.க., அணிக்கும் இடையே
கடும் போட்டி நிலவி வருகிறது. சொற்ப எண்ணிக்கையில் இரண்டு அணிகளும் ஒன்றை ஒன்று
முந்திச் செல்கின்றன. சில தொகுதிகளிலும் மிகக் குறைந்த சதவீதத்தில் தி.மு.க.,
முன்னணியில் உள்ளது.

காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட சர்வே முடிவு:

தி.மு.க., 1,320

அ.தி.மு.க., 1,128

தே.மு.தி.க., 706

பா.ஜ., 66

செல்லாத ஓட்டு 49

மொத்த ஓட்டுகள்: 3,269

சதவீதம்:

தி.மு.க., 40.37

அ.தி.மு.க., 34.50

தே.மு.தி.க., 21.59

பா.ஜ., 2.01

பெண்கள்:

தி.மு.க., 352

அ.தி.மு.க., 375

தே.மு.தி.க., 203

பா.ஜ., 36

சதவீதம்:

தி.மு.க., 36.36

அ.தி.மு.க.,
38.73

தே.மு.தி.க., 20.07

பா.ஜ., 3.71

* கூடுதல் பிரசாரம்,
அறிவிப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளில் கடுமையாக உழைத்தால்
வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரண்டு அணிகளுக்குமே உள்ளது. நடிகர் விஜயகாந்தின்
தே.மு.தி.க., அனைத்து தொகுதிகளிலும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது. கடுமையாக
உழைக்கும் கட்சி வெற்றிக்கனியை பறிக்க முடியும் என்ற நிலைதான் இந்த மாவட்டங்களில்
நிலவுகிறது.

* இந்த கருத்துக் கணிப்பில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில்
கருத்து தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவித்துள்ள பெண்களில் அதிகம் பேர்
அ.தி.மு.க.,வை விரும்புகின்றனர். இந்த மாவட்டத்தில் பெண்கள் ஓட்டு தான் அதிகம்.
பெண்கள் ஐம்பது சதவீதத்திற்கு மேல் ஓட்டு போடும் பட்சத்தில் தேர்தல் முடிவுகள் மாற
வாய்ப்பு உள்ளது.
* விஜயகாந்த் குறிப்பிட்ட சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார். இவர்
அ.தி.மு.க., ஓட்டுகளைப் பிரிக்கிறாரா அல்லது தி.மு.க., அணி ஓட்டைப் பிரிக்கிறாரா
என்பதை கணிக்க முடியவில்லை. அதனைப் பொறுத்தும் தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்பட
வாய்ப்பு உள்ளது.
http://www.dinamalar.com/2006may05/fpnews6.asp


தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., அதிக இடங்களை பிடிக்கும்
* தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பு

மதுரை , திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர்
மாவட்டங்களில் உள்ள ஏழு சட்டசபைத் தொகுதிகளில் தினமலர் கருத்துக் கணிப்பு
நடத்தியது. தேர்தல் பிரசாரம் முடிவடைவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு நடந்த இந்த
கருத்துக் கணிப்பில் தேர்தல் முடிவுகளை ஓரளவு
கணிக்கக்கூடிய அளவிற்கு
வாக்காளர்கள் தங்களது கருத்துக்களை தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளனர். இதன்படி,
அ.தி.மு.க.,விற்கு 43.5 சதவீத வாக்காளர்களின் ஆதரவும், தி.மு.க.,விற்கு 39.9 சதவீத
வாக்காளர்களின் ஆதரவும், விஜயகாந்திற்கு 14.5 சதவீத வாக்காளர்கள் ஆதரவு
தந்துள்ளனர். பா.ஜ., மற்றும் இதர கட்சிகளுக்கு 2.1 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பின் முழு விவரம்:
கருத்துக் கணிப்பு நடந்த
தொகுதிகள்: மேலே கூறிய ஆறு மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளில் முக்கிய தொகுதிகளான
ஏழு (மதுரை மத்தி, சேடபட்டி, ஆத்துõர், ஆண்டிபட்டி, பரமக்குடி, சிவகங்கை, சிவகாசி)
மட்டும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதாவது, அ.தி.மு.க.,
தி.மு.க., நேரடியாக மோதக்கூடிய நகர்புற தொகுதி ஒன்று (மதுரை மத்தி) அ.தி.மு.க.,
தி.மு.க., நேரடியாக
மோதக்கூடிய கிராமப்புற தொகுதிகள் இரண்டு(சேடபட்டி,
ஆத்துõர்). அ.தி.மு.க., காங்கிரஸ் மோதக்கூடிய தனித்தொகுதி ஒன்று (பரமக்குடி),
தி.மு.க., ம.தி.மு.க., மோதக்கூடிய தொகுதி இரண்டு (சிவகங்கை. சிவகாசி) மற்றும் ஒரு
வி.ஐ.பி., தொகுதி (ஆண்டிபட்டி). தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆயிரத்து 400
பேர் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் ஆயிரத்து 12 பேர், பெண்கள் 388 பேர். இவர்களில்
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என 610 பேர் ஓட்டளித்துள்ளனர்.
இது
43.5 சதவீதம் ஆகும். தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும் என 559 பேர் ஒட்டளித்துள்ளனர்.
இது 39.9சதவீதம் ஆகும். விஜயகாந்த் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து 201 பேர்
ஓட்டளித்துள்ளனர். இது 14.5 சதவீதம் ஆகும். பா.ஜ., மற்றும் இதர கட்சிகளுக்கு ஆதரவு
தெரிவித்து 30 பேர் ஓட்டளித்துள்ளனர். இது 2.1 சதவீதம் ஆகும்.
சிறந்த ஆட்சி:
இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 1012 ஆண்களில் 417 பேர் அ.தி.மு.க.,விற்கு
ஆதரவு தெரிவித்துள்ளனர். தி.மு.க.விற்கு 423 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் கட்சிக்கு 143 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆண்களை பொருத்தவரை
அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிக்க சிலர் தயக்கம் காட்டிய போதும், அ.தி.மு.க.,
ஆட்சியை சிறந்த ஆட்சி என்று பாராட்டியுள்ளனர். விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டளிக்க
கூடிய பலரும் ஜெயலலிதாவின் ஆட்சியை சிறந்த ஆட்சி என தெரிவித்துள்ளனர். கருத்துக்
கணிப்பின் முதல் கேள்வியான அ.தி.மு.க., ஆட்சி பற்றி உங்கள் கருத்து என்ன? என்று
கேட்ட போது, சிறந்த ஆட்சி என 510 பேரும், சுமாரான ஆட்சி என 586 பேரும், மோசமான
ஆட்சி என 304 பேரும் கூறியுள்ளனர். இதில், ஜெயலலிதாவின் ஆட்சி "சுமாரானது' என சில
தி.மு.க., ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண்கள் ஆதரவு:
ஜெயலலிதாவிற்கு பெண்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. கலந்து கொண்ட 388 பெண்களில்,
அ.தி.மு.க.,விற்கு 193 பெண்களும், தி.மு.க.,விற்கு 136 பெண்களும் விஜயகாந்திற்கு 58
பெண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே கருத்துக் கணிப்பை நாங்கள் சந்தித்த
ஆயிரத்து 400 பேரில் சரிபாதி பெண்களிடம் கேட்டிருந்தால் ஜெயலலிதாவிற்கான ஆதரவு
சதவீம் மேலும் அதிகரித்திருக்கும்.
யார் முதல்வர்: நடைபெற இருக்கின்ற தேர்தலில்
யார் முதல்வராக வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவிற்கு
ஆதரவு தெரிவித்து 630 பேரும், கருணாநிதிக்கு ஆதரவு தெரிவித்து 587 பேரும்,
விஜயகாந்திற்கு ஆதரவு தெரிவித்து 213 பேரும் பதிலளித்துள்ளனர். கடந்த தேர்தலில்
யாருக்கு ஓட்டளித்தீர்கள் என்ற கேள்விக்கு தி.மு.க., என 679 பேரும், அ.தி.மு.க., என
610 பேரும் இதர கட்சிகள் என 111 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த்
யாருடைய ஓட்டை பிரிப்பார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு அ.தி.மு.க., தி.மு.க.,
ஓட்டுகளை சரிசமமாக பிரிப்பார் என தெரிகிறது. விஜயகாந்த் கட்சி தீவிரமாக வேலை
செய்யக்கூடிய தொகுதிகளில் தி.மு.க.,விற்கும் அ.தி.மு.க.,விற்கும் மோதல் கடுமையாக
உள்ளது.
அரசு ஊழியர் நிலை: இந்த கருத்துக் கணிப்பில் 167 அரசு ஊழியர்கள் கலந்து
கொண்டனர். இதில், 124 பேர் மாநில அரசு ஊழியர்கள், 43 பேர் மத்திய அரசு ஊழியர்கள்.
இவர்களில், மாநில அரசு ஊழியர்கள் தி.மு.க.,விற்கு ஆதரவாக 85 பேரும்,
அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக 27 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த்திற்கு
ஒன்பது பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்களில் தி.மு.க.,விற்கு 25
பேரும் அ.தி.மு.க.,விற்கு 14 பேரும், விஜயகாந்திற்கு மூன்று பேரும், பா.ஜ.,விற்கு
ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசு ஊழியர்களில் ஆதரவு நிலையை
பார்க்கும் போது தி.மு.க.,விற்கு 65.86 சதவீதமும் அ.தி.மு.க.,விற்கு 24.55
சதவீதமும் உள்ளது.
குடும்ப அரசியல்: குடும்ப அரசியலை தி.மு.க., வளர்த்து
வருகிறது என்ற குற்றச்சாட்டு சரி என ஆயிரத்தி 400 பேரில் 844 பேர்
தெரிவித்துள்ளனர். தவறு என 556 பேர் தெரிவித்துள்ளனர். இதை பார்க்கும் போது
தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க விரும்பும் பலரும், தி.மு.க.,வினருமே குடும்ப அரசியலை
விரும்பவில்லை. வைகோ தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறியது தவறு என 529 பேரும்
சரி என 871 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இளம் வாக்காளர்கள்: 18 முதல் 25
வயதிற்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் 221 பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து
கொண்டனர். இவர்களில் அ.தி.மு.க.,விற்கு 79 பேரும் விஜயகாந்திற்கு 75 பேரும்
தி.மு.க.,விற்கு 67 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். விஜயகாந்தின் வளர்ச்சி வரும்
தேர்தல்களில் நிலைத்து நிற்குமானால், அது தி.மு.க.,வை பாதிக்கும். கணிப்பு
முடிவுகளை வைத்து பார்க்கும் போது 38 தொகுதிகளில் 27 தொகுதிகளில்
அ.தி.மு.க.,கூட்டணியும், 11 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணியும் வெற்றி பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் கடைசி நேர மனமாற்றம் தேர்தல் முடிவையே மாற்றி
கருத்துக் கணிப்புகளை தடுமாறச் செய்யும் என்பதையும் மறுக்கமுடியாது.
*கருத்துக்
கணிப்பில் குடும்ப பெண்கள் 236 பேரும், மாநில அரசு ஊழியர்கள் 124 பேரும், மத்திய
அரசு ஊழியர்கள் 43 பேரும், தனியார் நிறுவன ஊழியர்கள் 212 பேரும், வர்த்தகர்கள் 329
பேரும், மாணவர்கள் 101 பேரும், கூலி வேலை செய்பவர்கள் 52 பேரும், விவசாயிகள் 156
பேரும், இதர தொழில்களை செய்யும் 147 பேரும் கலந்து கொண்டனர்.
தென்
மாவட்டங்களில் அ.தி.மு.க., அலட்சியம்: தேர்தல் வேலையில் தென்மாவட்டங்களை பொறுத்த
வரை அ.தி.மு.க.,விற்கு சாதகமான நிலையே காணப்படுகிறது. ஆனால், வெற்றிக்கனியை
பறிக்கும் அளவிற்கு அ.தி.மு.க.,வினர் வேலை செய்யவில்லை. தேர்தல் நெருங்கிவிட்ட
நிலையிலும் பூத் சிலிப்கள் வழங்கப்படவில்லை. மேலும், வாக்காளர்களை வீடு வீடாகச்
சென்று சந்திக்கவில்லை. வீடு தேடி சிலிப்புகள் வந்தால் தான் ஓட்டுப் போட பலரும்
ஓட்டுச்சாவடிக்கு செல்வார்கள். தி.மு.க.,வினர் பெரும்பாலான தொகுதிகளில் பூத்
சிலிப்களை வழங்கிவிட்டார்கள். மேலும், ஏன் தி.மு.க.,விற்கு ஓட்டுப் போட வேண்டும்
என்றும் நோட்டீஸ்களை வினியோகித்துள்ளனர். இதை, அ.தி.மு.க., செய்யாதது வாக்காளர்களை
தன் பக்கம் இழுக்கத் தவறி விட்டதாக தெரிகிறது. மூன்று கட்டமாக பண பட்டுவாடா
நடந்தும் கட்சி நிர்வாகிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்று சில மாவட்டத் தலைவர்கள்
வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.


ஆதாரமில்லாத தினமலரின் 2 லீட் ஸ்டோரிகள்:

5 5 அன்றும் 6 5 2006 அன்றும் தினமலர் வெளியிட்டுள்ள லீட் ஸ்டோரிகள் இரண்டுமே, எவ்வித ஆதாரங்களையும் மேற்கோள் காட்டாமல் புனைகதையைப் போல எழுதப் பட்டுள்ளது. 5 5 2006 இதழில், பிரதமரின் தமிழகப் பிரச்சாரப் பேச்சில் தயாநிதி மாறன் குறித்து எதுவுமே சொல்லப்படவில்லை என்று திமுகவினர் ஏமாந்து விட்டதாக இந்த லீட் ஸ்டோரி குறிப்பிடுகிறது.


6 05 2006 அன்று வெளியான லீட் ஸ்டோரியில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயரப் போவ்தாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இனதச் செய்தியும் ஒரு கற்பிதத்தின் அடிப்படையிலான செய்தியாகும். இதிலும் எதுவும் மேற்கோள் கட்டப்படவில்லை. ஆனால், மத்திய அரசின் சார்பில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயராது என்று வெளியிடப் பட்ட அறிக்கையை தினமலர் தவிர பிற இதழ்கள் வெளியிட்டுள்ளன.
தினமலரில் வெளியான லீட் ஸ்டோரி இது:


தேர்தல் பரிசு! விரலில் வைக்கும் மை காயும் முன் வெளியாகப்போகிறது அறிவிப்பு*
மத்திய அரசை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட், தி.மு.க., கட்சிகள் மவுனம்

புதுடில்லி:
ஐந்து மாநில தேர்தல் பரிசாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை
மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இந்த விலை உயர்வு இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இருக்கும். வரும் எட்டாம் தேதி ஓட்டு போடும் போது விரலில் வைக்கும் மை காயும் முன்பாக இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது. மக்களை கடுமையாகப் பாதிக்கும் இந்த விஷயத்தில் மத்திய அரசு இந்த அளவுக்கு திடமான ஒரு முடிவை எடுக்க துணிந்து விட்ட பின்பும், அதற்கு ஆதரவு அளித்து வரும் தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாய் மூடி மவுனியாக இருக்கின்றன. பெட்ரோலியப் பொருட்களின் விலை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்றவாறு உயர்த்தப்படாததால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு 2005'06ம் நிதியாண்டில் ரூ.39 ஆயிரத்து 595 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் கெரசின் விற்பனையில் ரூ.14 ஆயிரத்து 384 கோடி, சமையல் காஸ் விற்பனையில் ரூ.10 ஆயிரத்து 245 கோடி, டீசல் விற்பனையில் ரூ.13 ஆயிரத்து 284 கோடி, பெட்ரோல் விற்பனையில் ரூ.இரண்டாயிரத்து 680 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓ.என்.ஜி.சி., மூலம் 14 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் டிஸ்கவுன்டாக ரூ.750 கோடி செலுத்தியுள்ளது. இருப்பினும், மற்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் கடந்த நிதியாண்டில் மிக அதிக பட்சமாகவே இருந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் மானியத் தொகையை ரூ.இரண்டாயிரத்து 900 கோடியில் இருந்து ஓரளவுக்கு உயர்த்தினால் நஷ்டத்தைக் குறைக்க முடியும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு கோரிக்கையை முன் வைத்தன. ஆனால், இதை மத்திய நிதி அமைச்சகம் ஏற்க மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ரூ. 11 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு பத்திரங்களை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை இதனால் ஈடுகட்ட முடியவில்லை. மேலும், காலம் கடந்து எடுத்த முடிவாகவே இது கருதப்பட்டது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் 50 சதவீத வினியோகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தான் கவனித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு ஒரு நாளைக்கு ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்பது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் நிர்பந்தமாக உள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி சமையல் காஸ் விலையில் ரூ.192ம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஆறு ரூபாயிலிருந்து ஏழு ரூபாய் வரையும், கெரசின் விலையில் ரூ.13ம் உயர்த்த வேண்டும் என்பது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. இதில், கெரசின் விலையில் மத்திய அரசு கை வைக்காது. ஆனால், இதர பெட்ரோலியப் பொருட்களின் விலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விடுத்த கோரிக்கை அளவுக்கு உயர்த்தாவிடிலும் ஓரளவுக்கு விலையை உயர்த்த மத்திய அரசு சம்மதித்து விட்டதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 70 டாலருக்கு மேல் உள்ளது. சமீபத்தில் ஈரான் எண்ணெய் துறை துணை அமைச்சர் ஹாதிமுகமது நிஜாத் ஹூசேன் டில்லி வந்து இருந்தார். அப்போது அவர் குளிர் காலத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று ஒரு அதிர்ச்சி தகவலைத் தெரிவித்து இருந்தார். மத்திய நிதி அமைச்சர் சமீபத்தில் கோவையில் நிருபர்களைச் சந்தித்த போது பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை அதிக நாட்களுக்கு தள்ளிப் போட முடியாது என்ற கருத்தைத் தெரிவித்து இருந்தார். அதற்கு ஏற்றார் போல் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தப் போகிறது. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. கடைசி கட்டமாக வரும் 8ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும், மேற்கு வங்கத்தில் சில தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவு முடிந்த அன்றைய தினமே பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தலாம் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில மக்களுக்கு மத்திய அரசு அளிக்கும் தேர்தல் பரிசு இதுவே என்ற விமர்சனம் தற்போதே எழுந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு நியாயமானது என்று பொதுத்துறை நிறுவனங்கள் கூறினாலும், இந்த விலை உயர்வு மக்களை கடுமையாகப் பாதிக்கும் என்ற நிலை உள்ளது. மத்திய அரசில் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., இடம் பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு வெளியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஒவ்வொரு முறை பெட்ரோலியப் பொருட்கள் விலை உயரும்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறை விலை உயர்வு கடுமையாக இருக்கும் என்ற போதிலும் வாயை திறக்காமல் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் உள்ளன. கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள தி.மு.க.,வோ ஓட்டுப்பதிவு நடக்கும் வரை இந்த விலை உயர்வு அறிவிப்பு வராமல் இருந்தாலே போதுமானது என்ற நிலைப்பாட்டை எடுத்து மவுனமாக உள்ளது.


வைகோவின் சிறப்புப் பேட்டி தினமலரில்:

தேர்தலில் வெற்றி நிச்சயம்! வைகோ சிறப்புப் பேட்டி என்ற தலைப்பில் தினமலரில் சிறப்புப் பேட்டி 6 5 2006 இதழின் 16ஆம் பக்கத்தில் அரைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வைகோவைத் தூக்கிப் பிடிக்கும் பக்கச் சார்பான பேட்டி இது.
தினகரனின் சிறப்புப் பேட்டியில் கலைஞரும், ராமதாசும்
தினகரன் 5 5 இதழில், ராமதாஸ் சிறப்புப் பேட்டி இடம் பெற்றுள்ளது. 6 5 இதழில், திமுக தலைவர் கருணாநிதியின் பேட்டி முழுப்பக்கத்தில் வெளியாகியுள்ளது.



கருணாநிதியின் பேட்டி, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தரப்பு வாதஙக்ளை மீண்டும் நினைவூட்டும் வகையில் உள்ளது.

தினகரனின் 5 5 2006 இதழில், திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை என்ற தலைப்பில் லீட் ஸ்டோரி வெளியாகியுள்ளது. 207 இடங்களில் திமுக ஜெயிக்கும் என்று ஜூனியர் விகடனும், நக்கீரனும் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருப்பதாக இந்தச் செய்தி கூறுகிறது. தமக்கு ஆதரவான கருத்துக் கணிப்புக்களை வெளியிடும் தமிழகப் பத்திரிகைகளின் எழுதப்படாத விதிக்கேற்ப தினகரனும் 8 காலம் செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் கருணாநிதி கவிதை:

திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கவிதை, தினகரனில் 6 5 அன்று 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. வெற்றியை உறுதி செய்ய எச்சரிக்கை தேவை என்று தம் தொண்டர்களுக்கு மிகச் சுருக்கமாக எழுதப் பட்டுள்ள இந்தக் கவிதை தினகரனில் மட்டும் வெளியாகியுள்ளது.

புதிய தமிழகத்தை வன்முறைக் கட்சியாகச் சித்தரிப்பு:

தலித் கட்சிகளை வன்முறைக் கட்சிகளாகச் சித்தரிக்கும் வழக்கம் தமிழ்ப் பத்திரிகைகளில் பரவலாகக் காணப்படும் வழக்கம். புதிய தமிழகம் கட்சியின் பேச்சுக்களோ, பேட்டிகளோ, அறிக்கைகளோ இடம் பெறாத தமிழ்ப் பத்திரிகைகளில், தொடர்ந்து நெகட்டிவான செய்திகள் மட்டுமே இடம் பெறுவது வழக்கம். இந்த மரபின் படி, தினகரனின் 6ஆம் தேதி இதழில் 2ஆம் பக்கத்தில், ஓட்டப்பிடாரம் தொகுதியில், வாக்காளர்களை மிரட்டும் புதிய தமிழகம் திமுகவினர் சாலை மறியல், என்ற தலைப்புடனும், மறியல் செய்யப்பட்ட படத்துடனும், ஒரு 4 காலம் செய்தி இடம் பெற்றுள்ளது.

1 comment:

Sivabalan said...

Good Work Media Watch Team!!

Keep Up!!